Contact us at: sooddram@gmail.com

 

அன்னை இந்திராகாந்தி ,ோழர்பத்மநாபா பிறந்த தினம்

(தோழர்ஸ்ரனிஸ்)

அன்னை இந்திராகாந்தி அலகாபாத்தில் 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பிறந்தார். இந்தியாவின் நலன்களுக்கும்,பிராந்திய நலன்களுக்கும், உலக அமைதிக்காவும் அயராது பாடுபட்ட மாபெரும் தலைவர் அவர். தோழர் பத்மநாபா இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை எனும் இடத்தில் நவம்பர் 19, 1951 இல் பிறந்தார். இலங்கையின் பல்லின மக்கள் வளர்ச்சிக்காகவும், பிராந்திய நலன்களுக்காகவும், உலக அமைதிக்காகவும் அயாராது பாடுபட்ட மாபெரும் தலைவராவார். அன்னை இந்திராவும்,தோழர்பத்மநாபாவும் நாளும் பொழுதும் மக்களைப்ற்றியே சிந்திப்பதாலும் சாதாரண மக்கள் தொடர்பாகவும் அவர்களது வாழ்வின் உயர்வுக்கு அயராது பாடுபட்டதாலும், அவர்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ அக்கறை கொள்ளவில்லை.

அன்னை இந்திரா அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக 96 வயதைக் கடந்து தற்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.பிரதமரின் பாதுகாப்பினை இராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறிய ஆலோசனையை, தன் உயிருக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது எண்றுணர்ந்த போதும் இந்திரா புறக்கணித்து விட்டார். அவருடைய மெய்க்காவல் படையில் இருந்த சீக்கியர்கள் அனைவரையும் வேறிடத்துக்கு மாற்றிட வேண்டும் என்று கூறியபோது 'நாம் சமயச் சார்பற்றவர்கள் அல்லவா' என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். அவருடைய நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு ஆலோசகரான ஆர்.என்.காப், இந்திராவின் மாளிகையில் புழங்குமிடம் பாதுகாப்பற்றதாய் இருப்பதால், முன்புறத்தில் உள்ள தோட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார். அந்த யோசனையையும் இந்திரா ஏற்றுக்ககொள்ளவில்லை. பிரதமரின் பாதுகாப்பு வளையத்திற்குள் ஓரிடத்தில் இரண்டு சீக்கியர்களைப் பணியமர்த்தக் கூடாது என்று காவ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்திராகாந்தி அவர்களின் கொலையாளிகளில் ஒருவனாகிய சத்வந்த் சிங், தன் சதிவேலைக்கு துணையான பியாந்த் சிங்குடன் சேர்ந்து இருப்பதற்கு எவ்வித சிரமமும் இன்றி அனுமதி பெற்றுவிட்டான்

தோழர்பத்மநாபாவின் பாதுகாப்பு தொடர்பாக பல தோழர்கள் அக்கறை கொண்டு அவரிடம் பேசிய போதெல்லாம் ஒற்றை வரியில் 'நோ புரோப்பளம்' என்று கூறுவார். கொஞ்சக்காலம் அவர் கும்பகோணத்தில் இருந்தபோது சைக்கிளை எடுத்துக்கொண்டு தன்னந்தனியாக கும்பகோணத்தில் உள்ள சிவபுரம் எனும் கிராமத்துக்கு அங்கு தங்கியிருந்த தோழர்களை பார்க்க செல்வார். இடைவழியில் அக்கிராம சிறுவர்கள் றோட்டில் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களுடன் சோந்து ஒரு சிறுபிள்ளைபோல் பேசுவார். அவர் தனது பாதகாப்பு தொடர்பாக என்றும் அக்கறை கொண்டதில்லை மாறாக அவரது தோழர்கள் பாதுகாப்பு தொடர்பாக கூறியவற்றை ஏதாவது சொல்லி சமாளித்துவிடுவார். சென்னையில் அவர் தங்கிருந்த காலத்தில் புலிகளில் உளவாளியான சாந்தன் என்பவன் இலங்கையில் இருந்து 'படிப்பதற்காக வந்ததாகவும். தனக்கு யாரையும் தெரியாது' என்றும் கூறியதால் ஈ.பி,ஆர்.எல்.எப் தோழர்கள் அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியும் செய்து தங்குமிடம், சாப்பாடும் போடடுள்ளனர். இது சாந்தனுக்கு மிகவும் வசதியாக போனது. இறுதியில் அவன் கொடுத்த தகவல்களால் புலிகள் தோழர்பத்மநாபாவை கொன்றார்கள்.

அன்னை இந்திரா, தோழர் பத்மநாபா ஒரே நாளில் பிறந்த காரணத்தினாலோ என்னவோ அவர்களின் பல செயற்பாடுகள் பொருந்தமாய் காணப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்்கை மேம்பாடு மனிதர்களை மதிக்கும் பண்பு, தாங்கள் சாந்திருந்த கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்சி உறுப்பினர்களின் நலன் என்பனவற்றில் அக்கறையுடன் செயற்பட்டார்கள். ோழர் பத்மநாபா  அன்றே இலங்கையின் வடக்கு-கிழக்கில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக ஆழந்த கருத்துக்களுடன் செயல்பட்டார். இதன்காரணமாகவே அவர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார். அன்று மௌனமாக இருந்தோர் இன்று இந்திய தலையீடு பற்றி பிரஷ்தாபிப்பது காலம் கட்நத ஞானம் என்றே பார்க்க தோன்றுகிறது.

இன்று பலர் கடந்த காலங்களை விடு்கள் இனி நடப்பதைப்பார்ப்போம் என தங்கள் வசிக்கேற்றாப்போல் பேசிவருகிறார்கள். வரலாறுகளை மறக்கச் சொல்வது வேடிக்ககையாகத்தான் உள்ளது. இவர்களது பிறந்த தினத்தில் அவர்களது கருத்துக்களையும் அவர்களது செயற்பாடுகளையும் மீண்டும் ஒரு தடைவை நினைத்துப்பார்ப்போம்.

19.11.2013

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com