Contact us at: sooddram@gmail.com

 

2014 இந்திய தேர்தல்

(தோழர்ஸ்ரனிஸ்)

இந்தியாவில் நடைபெறப்போகும் 16வது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அணிச்சேர்க்கைகள் ஏப்ரல் வெயிலையும் தாண்டி சூடு பிடித்து தமிழகத்தில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பத்து வருடங்களாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு இந்தமுறையும் ஆட்சி அமைக்குமா? என்பது ஒரு பெருத்த சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. பா.ஐ.க ஒரு மதவாத கட்சி என்ற பிரச்சாரத்தினை காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவருகிறார்கள்,காங்கிரஸ் பல ஊழல்களை செய்த கட்சி என மற்றய கட்சிகள் காங்கிரஸ் மேல் குற்றச்சாட்டினை சுமத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அணி காப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் ஊழல் என காங்கிரஸ் மீதும்,மதவாதம் சிறுபான்மையினரின் எதிரி என பா.ஐ.க மீதும் குற்றங்களை சுமத்துகிறது.

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு மும்முனைப் போட்டி என்றால் தமிழகத்தில் அ.தி.மு.க இரு கம்யூனிஸ்களையும் களட்டிவிட்டதால் ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்திய மாநிலங்களில் தற்போது ஆட்சியில் உள்ள பெரும்பாலான மாநில கட்சிகள் அ.தி.மு.க உட்பட ஆட்சி பலம,; மக்களுக்கு செய்த சலுகைகளை நம்பி தனியாகவே களம் இறங்கியுள்ளது.இது அவர்கள் வென்றதன் பின்னர் பேரம் பேசுவதற்கு தோதாக இருக்கும் என நம்புகிறார்கள்.

பா.ஜ.க வை பொறுத்தவரை நரோந்திரமோடியை பிரதானப்படுத்தியே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.நரோந்திரமோடி அலை ஓரளவு வீசத்தான் செய்கிறது. இந்த அலைக்கு ஊடகங்களின் பங்கும் பிரதானமாகும்.நரந்திரமோடிக்கு ஆம் ஆத்மி கட்சியால் குடைச்சல் இருக்கத்தான் செய்கிறது.இதனால் வோட்டுக்கள் சிறிய அளவில் மட்டுமே சிதற வாய்ப்புள்ளது.

ஆம் ஆத்மி கட்சி மீது மக்களுக்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பு தற்போது அவ்வளவாக இல்லை. டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி பின்னர் அதை பாதியில் விட்டு ஓடியது,  அவர்கள் கதைக்கவும்,குற்றங்களைச் சொல்லவும் மட்டுமே தெரிந்தவர்கள் என்ற ஒரு கருத்து பரவாலக ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க,தி.மு.க அணி,பா.ஜ.க அணி,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் என ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.அ.தி.மு.க இதில் சாமாத்தியமாக யாரையும் கூட்டு வைக்க விரும்பவில்லை.தங்களுடன் இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் களட்டி விட்டது மட்டுமல்லாமல் 'சந்தோசமாக சேர்ந்தோம் சந்தோசமாக பிரிவோம்' என இரு கட்சி அலுவலகங்களுக்கும் சென்று அம்மாவின் உத்தரவை சொல்லிவிட்டும் வந்துள்ளார்கள் அ.தி.மு.க முக்கியஸ்தர்கள்.அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுகள் நியாயமாக கோபப்படக் கூடியவர்கள் நீதியை நிலைநாட்ட தங்களது பேச்சுத்திறமை மூலம் சாதிக்கக் கூடியவர்கள் ஆனால் அ.தி.மு.க அவர்களை களட்டிவிட்டது தொடர்பாக அவர்களிடம் பெரியளவு 'ரியக்சனே' காணோம். அ.தி.மு.க வென்றதன் பின்னர் ஆவது தாங்கள் அமைத்த மூன்றாவது அணியில் ஜெயலலிதாவை இணைத்துக் கொள்ளலாம் என்ற நட்பாசை கூட இருக்கலாம்.

தி.மு.க அணியானது ஒரு பலமான அணி என்று சொல்லக் கூடிய அளவுக்கு அதில் உள்ள கட்சிகளிடம் வாக்கு வங்கி இல்லை கடைசிவரை 12 சதவிகிதம் வாக்கு வங்கியினைக் கொண்ட விஜயகாந்தின் தே.மு.திக. வை தங்களுடன் இணைக்க கருணாநிதி துடியாய் துடித்தும் பலன் இல்லாமலும் போய்விட்டது.தி.மு.க மேல் உள்;ள ஊழல் குற்றச்சாட்டு இந்த அணியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் அளவுக்கே உள்ளது.

பா.ஐ.க யில் விஜயகாந்கட்சிக்கே அதிகமாக 14 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த அணியில் உள்ள கட்சிகளில் விஜயகாந்தின் கட்சிக்கே அதிகவாக்கு வங்கிகள் உள்ளன.பா.ஐ.க யை பொறுத்தவரையில் அதற்கு தமிழகத்தில் அவ்வளவு செல்வாக்கும் இல்லை வாக்கு வங்கியும் இல்லை. நரோந்திரமோடி அலையும் தமிழகத்தில் எடுபட வாயப்புகள் இல்லை.அது மட்டுமல்லாமல் இந்த அணியினரிடையே இறுதிவரை தொகுதி பங்கீட்டில் ஒரு இழுபறி இருந்து வந்தது. அதனை தற்போது ஒட்டுப்போட்டு ஒட்டவைத்துள்ளது போல் உள்ளது.எதிரும் புதிருமான கட்சிகளும் இந்தி அணியில் உள்ளன.இவர்கள் தேர்தல்காலங்களில் ஒத்து வேலை பார்த்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உழைப்பார்களா என்பது சந்தேகமே.

காங்கிரஸ் கட்சியை பொறுத்த மட்டில் தமிழகத்தில் அவர்களது நிலைமை பரிதாபகரமானதுதான்.அவர்கள் நம்பிருந்த தி.மு.க கூட கூட்டுச்சேர்த்துக்க விரும்பவில்லை. இதன்மூலம  ி.மு.க இலங்கை பிரச்சினையில் தன்மீது உள்ள கறையை கழுவிவிடலாம் என நினைக்கிறது.காங்கிரசில் பல மூத்த தலைவர்களும் தேர்தலில் நிற்க தயங்குகிறார்கள்.கணிசமான வாக்கு வங்கியினையும் பழம்பெரும் கட்சி என்ற அந்தஸ்தயையும் உள்;ள காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு சோதனை காலம் என்றே சொல்லமுடியும்.

கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஒரு சோதனையான காலம்தான் தமிழகத்தில் அவர்கள் இதுவரை ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தே தேர்தலை சந்தித்துள்ளார்கள்.இம்முறை இரு கம்யூனிஸ்ட்டுகளும் கூட்டுச்சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்கள் திருத்துறைப்பூண்டியும்.திருப்பூரும் தோழர்களுக்கு கைகொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

அ.தி.மு.க ஆடசி அமைத்து மூன்று வருடங்களாகிறது. தாங்கள் செய்ய மக்கள் நலப்பணிகள் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற ஒரே நம்பிக்கைதான  அவர்களுக்கு உள்ளது.காங்கிரசையும் அதனுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்த தி.மு.க வுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் இலக்காக உள்ளது.பா.ஐ.கஅவர் விமர்சிப்பதே இல்லை இதனால் பிற்காலத்தில் அவர் பா.ஐ.க ஆட்சி அமைக்க நேர்ந்தால் அவர்களை ஆதரிக்கும் எண்ணத்தை இதன் மூலம் அவர் தெரிப்பதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக தமிழக தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சியும் 14 இடங்களில் போட்டியிட இருக்கிறது.அவர்கள் பெரும்பாலும் ஊழல் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களிலே அவர்களது இலக்கை வைத்துள்ளார்கள்.இவர்களுக்கு தமிழகத்தில் வாக்குவங்கி இல்லாத போதும் கணிசமான அளவு வாக்குகளை மட்டுமே இவர்களால் பிரிக்க முடியும்.

இலங்கைப் பிரச்சனை தமிழக தேர்தல் களத்தில் பேசும் பொருளாக இதுவரை இருந்து வந்தது. இம்முறை அது பேசாப் பொருளாக உள்ளது போல் தெரிகிறது. இலங்கைப் பிரச்சினையை கையில் எடுத்துள்ள பல கட்சிகள் தமிழக அணிகளில் உள்ளன.இவர்கள் மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் மனோநிலைக்குச் செல்வார்கள்.இலங்கைத் தமிழர் பிரச்சினையில் யாதார்தத்தை உணர்ந்து இவர்கள் செயல்பட்டாலே இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஏதேனும் கிடைக்க வாய்ப்புகளும் எற்படும்.

தமிழகத்தில் பல தடைவைகள் காங்கிரஸ் கட்சிக்கு சோதனைகள் ஏற்பட்டுள்ளது. பலமான கூட்டணியே தமிழகத்தில் அதிக இடங்களையும் பிடித்துள்ளது.இவை இரண்டும் இல்லாத 2014 மாநிலங்களவை தேர்தல் யார் அதிக இடங்களை பெறுவார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com