Contact us at: sooddram@gmail.com

 

தற்போதைய இலங்கைச் சூழல் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை தாயகம் திரும்ப ஊக்குவிக்குமா?

(ஸ்ரனிஸ்)

தமிழகத்தில சாதாரண முகாம்கள் 105, சிறப்பு முகாம்கள் 2 உம் உள்ளன. முகாமிலும் வெளியேயுமாக மொத்தம், 1லட்சத்து 37 ஆயிரம் பேர் வரை தங்கியுள்ளனர்.
இவர்களின் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய மத்திய,மாநில அரசுகள் உதவிகள் செய்து வருகின்றது.வெளியில் உள்ளவர்கள் தங்களது சொந்தச் செலவிலே வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் வாழும் இலங்கை மக்களில் சிலர் 1983 களில் இருந்தே வசித்து வருகிறார்கள்.பலர் இடைக்காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு சென்றவர்களாகும்.

ஆக 25 வருடங்களுக்கு மேலாகவும் பலர் வாழந்து வருகிறார்கள். தமிழகத்திற்கு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்த அனைவரும்,இலங்கையில் யுத்தம் ஓயந்து இயல்பான சூழ்நிலை ஏற்பட்டவுடன் திரும்பிடலாம் என்ற எண்ணத்துடனே வந்தவர்களாகும். ஆனால் அவர்கள் உடனடியாகச் இலங்கை திரும்ப முடியாமல் யுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதன்காரணமாக தமிழகத்தில் அவர்களது பிள்ளைகளின் படிப்பு, தொழில் மற்றும் வாழவாதரங்கள் போன்றவற்றில் ஆழமாக வேரூன்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீண்ட பல வருடங்களாக இவர்கள் தழிகத்தில் இருந்தாலும் நாளும்,பொழுதும் அவர்களின் கனவுகளும்,சிந்தனைகளும் தாங்கள் பிறந்த மண்ணையும்,தாங்கள் தவழ்ந்து விளையாடிய வீட்டையும்,அவர்கள் வாழந்த இடத்தையுமான சிந்தனைகளாகவே இருந்து.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் இலங்கை தமிழ் மக்கள் அனைவரையும் உடனடியான சந்தோஷத்தை ஏற்படுத்தியது.இந்த சந்தோஷம் தமிழகத்தில் உள்ள இலங்கை மக்களையும் விட்டுவைக்கவில்லை.தமிழகத்தில் உள்ள இலங்கை மக்கள் நாடுதிரும்புவதற்கான சூழழ்நிலை ஏற்பட்டுவிட்டதாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இயல்பான வாழக்கை நடைபெறுவதை தற்போது உணரக் கூடியதாக உள்ளது.எங்கும் சென்றுவரவும்,எந்த நேரத்திலும் சென்றுவரவும் அச்சமில்லாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.முன்னைய ஆட்சிகாலங்களில் தொலைபேசியில் கதைப்பதற்கே அச்சப்படவேண்டி இருந்த காலம் போய்விட்டதை அவர்கள் உணரக்கூடிய நிலைமைகள் உள்ளதை அவர்களே சொல்கிறார்கள்.

நாடு திரும்புதல் தொடர்பான சலசலப்பு தமிழகத்தில் உள்ள இலங்கை மக்களிடம் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டபோதும், அவை தற்போது ஒய்ந்துள்ளது.இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் இந்தியா சென்றதும் அதன் தொடர்ச்சியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை சென்றதும் அதனைத் தொடர்ந்து பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை சென்றது என்பவை மீண்டும் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான அரசியல் ராஜதந்திர நகர்வுகள் ஒருபுறம் நம்பிக்கையை கொடுக்கின்றபோதும், தமிழகத்தில் உள்ள அகதிமக்கள் இன்னும் சில விடயங்களையும் சொல்கிறார்கள் அவர்கள் சொல்லும் இந்த விடயங்கள் நியாயமானதாகவே தென்படுகிறது.
அவர்களது விடயத்தில் மனிதாபிமானம் மட்டுமே இருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் விரும்புவதாக தெரிகிறது.தங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள் எனவும் சிலர் கதைக்கிக்கிறார்கள்.தங்களை வைத்து அரசியல் செய்வதால் தங்களது வாழக்கைதான் பாதிக்கப்படும் என்றும் தங்களது இழந்த வாழ்க்கையையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அனைத்து நலன்விரும்பிகளும் இதை உணரவேண்டும் எனவும் அகதி மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் இலங்கை மக்கள் தொடர்பாக சிலநேரங்களில் நல்ல அரசியல் முடிவுகள,; அவர்கள் வாழ்க்கையை மாற்றி அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதையும் அவர்கள் அறிதல் வேண்டும்.(உதாரணத்துக்கு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்) இது விடயமாக நல்ல முடிவுகளை இந்திய அரசாங்கம் எறபடுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் பலரிடம் காணப்படுகிறது.

தமிழகத்தில் நீண்டகாலமாக இருப்பவர்கள் இலங்கை சென்றால் தொழில்.பிள்ளைகளின் கல்வி,இருப்பிடம் போன்றவற்றில் பெரிதும் கவனம் செலுத்துவதும,; இது தொடர்பான உத்தரவாத்தை யார் கொடுப்பார்கள என்ற ஏக்கத்திலும் அவர்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் படித்த பிள்ளைகளின் படிப்பை இலங்கையில் தொடரவும்,கற்ற கல்விக்குரிய வேலை இலங்கையில் கிடைக்குமா? என்றும்,பட்டயபடிப்புக்கு உரிய அங்கீகாரம் இலங்கையில் கிடைக்குமா? என பிள்ளைகள் தொடர்பாகவும்,தங்களது வாழ்வாதாரத்தை சிரமமின்றி தொடர வேலைவாய்ப்புகள் கிடைக்குமா? தாங்கள் வாழ்வதற்கு அழிந்துபோன தங்களது வீடு புணரமைக்கப்படுமா? ஏல்லாவற்றுக்கும் மேலாக உயிர்அச்சுறுத்தல் இருக்குமா? என்றெல்லாம் யோசிக்கிறார்கள்.

மேற்சொன்னவற்றை இலங்கை இந்திய அரசாங்கங்கள் களையவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.அப்படி களையும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்பும் முடிவை அவர்கள் எடுக்க இலகுவாக இருக்கும். இலங்கைக்கு அண்மையில் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் சென்றதும் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டதும் அதனைத் தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தியது,அறிவித்தது என்பன புலம்பெயர்ந்து குறிப்பாக தமிழகத்தில் வாழும் இலங்கை மக்கள் நாடு தரும்பும் போது அவர்களுக்கு பல சௌகரியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

குறிப்பாக சுங்கம் தொடர்பான பரஸ்பர புரிந்துணர்வு என்ற ஒப்பந்தம், புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்லும் பட்சத்தில் நீண்டகாலமாக அவர்கள் புலம்பெயர்ந்து இருந்தகாரணத்தால,; பலவகைப் பொருட்கள் மற்றும் அவர்களின்; தொழில்ரீதியான பொருட்கள் என்பவற்றை இலகுவாக கொண்டு செல்லவும், சுங்க வரிச்சலுகைகள் இதற்கு பயன்படவாய்ப்புகள் உள்ளன. தலைமன்னாருக்கான ரயில் சேவை என்பதும் தமிழகத்தில் இருந்து கப்பலில் இலங்கை செல்பவர்களை இலகுவாக நாட்டின் மற்றய இடங்குளுக்குக் கொண்டு செல்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை அண்மையில் இலங்கையின் வலிவடக்கு, வலிகிழக்கு பகுதியில் குடியேற்றியதென்பதும் புலம்பெயர்ந்து வாழும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள இலங்கை மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடியதாகவே உள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com