Contact us at: sooddram@gmail.com

 

உதயன் யாழ்.மக்களைப் பிழையாக வழி நடத்துகிறது - யாழ் மாநகர முதல்வர்

யாழ் மக்களை உதயன் பத்திரிகை தவறான முறையில் வழிநடத்துகின்றது என்று யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெற்ற மாதாந்த ஒன்று கூடலின் போது தமது தலைமை உரையில் இவ்வாறு கடும் தொனியில் தெரிவித்துள்ளார். மாநகரசபை பற்றிய தவறான செய்திகளை பிரசுரித்து இருப்பது தொடர்பாக தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாற ,எங்களால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் அனைத்தும் எமது தமிழ் மக்களினது எதிர்கால சுபீட்சமான வாழ்க்கைக்காகவே மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 27.10.2010 அன்று கூட்ட 37 வது அறிக்கைக்கு அமைய யாழ் நகரில் கடைத்தொகுதி அமைப்பதற்கு அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  திட்டமிடல் பிரிவின் அங்கீகாரமும், கேள்விச்சபையின் அங்கீகாரமும் பெறப்பட்டது. அதன் பின் தேசியபத்திரிகையில் கோரல் விளம்பரம் போடப்பட்டு மாநகர சபையின் ஒரு சதமேனும் செலவில்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளரின் பணத்தில் ஐந்து மாடிக்கட்டடம் அழகுறக் கட்டப்படவுள்ளது.

இதில் எந்தவிதமான ஊழலும் இல்லை. தனது செய்தியில் உள்ள உண்மைத்தன்மையை "உதயன்"பத்திரிகை நிரூபிக்கவேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் தவறான புரிந்துனர்வு, கசப்புனர்வு காரணமாகவும், முன்னாள் ஆணையாளரின் வழிநடத்தலாலும் உதயன் பத்திரிகை செய்திகனளப் பிரசுரித்து வருகிறது.

நாம் இம் மாநகராட்சியைப் பொறுப்பேற்ற போது இருந்த நிலைமை பற்றி உங்களுக்குத் தெரியும். 30 வருடகால போர்ச் சூழலில் சில முதல்வர்களின் திட்டமிடலாலும், சில ஆணையாளர்களின் வழிநடத்தல்களினாலும் மாநகர சபையின் பல சொத்துக்கள் இழக்கப்பட்டிருந்தன. 

இணக்க அரசியல் ஊடாக எமது சமூகத்தை மீளச்செய்ய ஐ.மு.சு.கட்சியுடன் இணைந்து தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் வெற்றி பெற எதிரணி எம்முடன் இணைந்து செயற்பட பகிரங்கமாக அழைக்கின்றேன்.

கஸ்தூரியார் வீதியில் ஐந்து மாடி கட்டடத்தொகுதி ஒன்று கட்டப்படவுள்ளது. இதில் எந்த முறைகேடும் இல்லை. மக்களைத் தவறான பாதைக்கு உதயன் அழைத்துச்செல்கிறது. தனது சுய லாபத்திற்காக பயன்படுத்துகிறது. முன்னாள் ஆணையாளரின் ஊழல்கனள விரைவில் வெளிப்படுத்துவதற்கான தரவுகளை வெளிப்படுத்துவோம  என்றார்.
                                    
அங்கு பதிலளித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாநகர முதல்வரின் இக் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும், எதிர்ப்பதாகவும் கூறினார்.

ஈ.பி.டி.பி உறுப்பினர்களான மங்களநேசன் மற்றும் விஜயகாந்த், கிளபோடாசியஸ் ஆகியோர் உதயன் பத்திரிகை மோசமானது. மாநகரசபை பற்றிய தவறான செய்திகளைப்பிரசுரித்து வரும் உதயன் பத்திரிகையை எமது வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் அவர்கள் வெளியேற வேண்டும் " என்றனர். தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்த விந்தன் கனகரட்ணம் "ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டால் நாம் வீதியில் இறங்கிப் போராடுவோம " என்றார்.

"உதயன் ஒழுங்கற்ற பக்கசார்பான ஊத்தை பத்திரிகை. செய்தி எடுப்பதற்காக எமது வளாகத்தில் அனுமதிக்க முடியாது என ஈ.பி.டி.பி உறுப்பினர் விஜயகாந்தன் கூறினார். அதற்கு விந்தன் உள்ளுராட்சி உபவிதிகளின் படி ஊடகங்களுக்கு உள்ளுராட்சி சபைகளில் செய்தி சேகரிக்க உரிமை  உள்ளது. எனவே அவர்களுக்கு அனுமதி மறுக்க உங்களுக்கு உரிமை இல்லை என தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்குமிடையே காரசாரமாக விவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து முதல்வர் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறினார். அவர் சென்றதை அடுத்து த.தே.கூ உறுப்பினர்கள்  ுணைமுதல்வரை தலைமையேற்று நடத்தும் படி கூறினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மாநகரசபை ஆணையாளர் தலைமையேற்று நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டது. சிறிது நேரத்தில் ஆணையாளரும் வெளியேறினார். தொடர்ந்தும் விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதத்தின் போது " ஏன உதயன் பத்திரிகையைக் கேட்கின்றீர்கள் எங்களிடம் வாருங்கள் உங்கள் ஊழலை நிருபிக்கின்றோம்என விந்தன் கனகரட்ணமும் அரியகுட்டி பரஞ்சோதியும் கூறினர்.
உதயன் பத்திரிகை தானாகவே புலனாய்வு செய்து உங்களின் ஊழலை அம்பலப்படுத்தியது. அதன் பின்னர் தான் நாம் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும், மாநகர சபை உறுப்பினர்கள் என்றவகையிலும் சில விபரங்களை வழங்கினோம்." என்றார் விந்தன் கனகரட்ணம்.
தொடர்ந்து விஜயகாந்தன்" த.தே.கூட்டமைப்பு ஏன் வவுனியா நகரசபைத் தலைவரை பதவியிலிருந்து நீக்கியது? ஊழல் காரணம் தான்" என்றார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த பரஞ்சோதி "வவுனியா நகரசபைத் தலைவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது.  ஈ.பி.டி.பி தான் ஊழலின் முழுஉருவம்" என்றார்.


"இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில்  ீழ் பகுதி ஒப்பந்தக்காரரால் தனிப்படத் தயாரித்த படம் என்னிடம் உள்ளது. இதில் 14 கடைகள் கட்டப்படும். ஒவ்வொன்றும் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டு அதில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும். மிகுதி 80 லட்சத்திற்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.  இவ்வாறு 14 கடைகளுக்கும் 80 லட்சம் வீதம் மோசடி செய்யப்படுகிறது." என கனகரட்ணம் விந்தன் தெரிவித்தார்.

 "ஊழல் நடைபெறாவிட்டால் ஏன் உதயன் மீது வழக்குத் தொடரவில்லை. ஊழல் வெளிவந்து விடும் என்ற பயம்தான் காரணம்" என பரஞ்சோதி தெரிவித்தார்.

இதனை அடுத்து மாநகர முதல்வர் ஊடக சந்திப்பு ஒன்றைக் கூட்டினார். அங்கு அவர் ஊடகவியலாளர்களிடம் "கடந்த மாதம் 21,22,23 ம் திகதிகளில் உதயன் பத்திரிகையில் வெளிவந்த ஐந்து மாடிக் கட்டடம் தொடர்பிலான செய்திகள் அனைத்தும் தவறானவை. தவறான ஒன்றிற்கு நான் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென அவசியமில்லை." என தெரிவித்தார்.

" இதில் எந்த வித உண்மையும் இல்லை. ஊழல் என்று ஒரே ஒரு பத்திரிகையில் மட்டும் செய்தி வெளியாகி உள்ளது.  இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்குரிய ஆதாரங்களை உதயன் பத்திரிகை நிரூபிக்க வேண்டும். எமது ஒவ்வொரு செயலும் மக்களின் விடிவிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. என அவர் மேலும் தெரிவித்தார்.

சமஷ்டி என்று கூறிக்கொண்ட தமிழரசுக்கட்சி மறைமுகமான போராட்டத்திற்கு இன்றைய இளைஞர்களை ஈர்க்கப்பார்க்கிறது. இது பற்றி நேற்றும் எமது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியும் ஊடகத்திற்குப் பேட்டி வழங்கியுள்ளார்.

இக்கட்டடத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறாது கட்டப்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. அவர்களின் அனுமதியுடனேயே கட்டப்படுகின்றது. கொழும்பு மாநகர சபையைப் போன்று எமது மாநகர சபையை மாற்றுவோம். எம்மீது சுமத்தப்பட்ட ஊழல் தொடர்பாக உதயன் பகிரங்கப்படுத்த வேண்டும்.

27.10.2010 ஆம் திகதி கூட்டத்தின் படி வெளிநாட்டு முதலீட்டாளரால் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பணம் தரப்படும். கடைத்தொகுதியில் கீழ்ப் பகுதிக்குரிய கேள்வித் தொகை மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கப்படும். ஐந்து மாடியில் முதல் மூன்று மாடிகளிலும் 19 கடைகள் வீதம் கட்டப்படும். இதன் உரிமை மாநகர சபைக்கே. இதன் மூலம் வரும் குத்தகையும் மாநகர சபைக்கே உரித்தாகும். இக்கடைகள் மூலம் வரும் வருமானங்களும் மாநகர சபைக்கு உரியனவாகும். இதுவே உண்மை. ஒரு சதமும் செலவீனம் இல்லாமல் மாநகர சபை வருமானம் ஈட்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com