Contact us at: sooddram@gmail.com

 

பொய் மூலம் தொடுக்கப்பட்ட ஈராக் போர் அதிரும் உண்மை பி.பி.சி

ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டு சாதாம் உசைன் அவர்களை தூக்கிலும் போட்டாயிற்று. ஆனால் நேற்றைய தினம் பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை பார்த்தபின்பு உலகம் ஒரு நொடி அதிர்ந்துதான் போயிருக்கும். ஒரு பொய்யை மட்டும் அதாவது அப்பொய்யை உறுதியான ஒருவர் தெரிவித்ததனால் அதை உண்மை என நம்பி ஈராக் மீது போர் தொடுத்து இன்று பெரும் அவமானத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது அமெரிக்கா.

 

அமெரிக்காவுக்கு பொய்யான தகவலை வழங்கியவர்

ஈராக்கில் சதாம் உசைன் ஆட்சியில் இரசாயன பொறியாளர் ஆக பணியாற்றிய ரபீட் அல் ஜனாபி என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது.

இவர் பல பொய்யான தகவல்களை அமெரிக்க அரசுக்கு வழங்கியிருக்கின்றார். ஈராக்கில் நடமாடும் இரசாயன ஆய்வுக்கூடம் இருப்பதாகவும் ஒரு முறை ஒன்றில் விபத்து ஏற்பட்டதில் 12பேர் உயிர் இழந்ததாகவும் தகவல் வழங்கியிருக்கின்றார். ஒரே இடத்தில் இருந்தால் அதை எதிரிகள் கண்டுபிடித்துவிடலாம் என்பதாலும் அடிக்கடி இடம் மாற்றலாம் தாக்குதலில் இருந்தும் தவிர்க்கலாம் என்பதாலும் நடமாடும் இரசாயன ஆய்வுக்கூடங்களை ஈராக் வைத்திருப்பதாகவும்,தான் அதில்தான் வேலை செய்வதாகவும் இவர் அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியிருக்கின்றார்.

தகவல் அடிப்படையில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட மாதிரி நடமாடும் ஆய்வுக்கூடம் www.rste.org

 

தகவல் அடிப்படையில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட மாதிரி நடமாடும் ஆய்வுக்கூடம் www.rste.org

இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து நடமாடும் ஆய்வுக்கூடங்களின் மாதிரிகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்லாது அதை ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலும் சமர்ப்பித்துள்ளது. அன்றைய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் கொலின் பவெல் அவர்கள் ஐ.நாவில் பொறியாளர் சொன்ன பொய்யை உண்மையென நம்பி அப்படியே ஒப்பிவித்துள்ளார் அதையும் பொறியாளர் கூறிய பொய்யையும் பி.பி.சி மாற்றி மாற்றி காட்டி அதிரடித்துள்ளது.

 

அறிக்கை சமர்ப்பித்து உறையாற்றும் கொலின் பவெல் அவர்கள் www.rste.org

ஜெர்மனிய உளவுத்துறையும், பிரித்தானிய உளவுத்துறையும் இத்தகவலின் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தும் அமெரிக்க பிரிவு அசட்டை செய்ததாக ஆவணம் விரிகின்றது. ஏன் பொய் சொன்னாய் என்ற கேள்விக்கு சதாமின் ஆட்சியில் மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததாகவும் அது தொடர்ந்தால் மக்களுக்கு ஆபத்து எனவும் அதற்காகவே சர்வாதிகார ஆட்சி நடத்தும் சதாமின் ஆட்சியை ஒழிக்க தான் பொய் சொன்னதாகவும் அவர் பி.பி.சிக்கு பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

இரசாயன ஆய்வுக்கூடத்தை தேடும் அமெரிக்க இராணுவம் www.rste.org

ஆனால் போர் முடிந்த பின்பு நடமாடும் இரசாயன ஆய்வுக்கூடத்தை ஈராக்கையே சல்லடை போட்டு தேடியும் ஒரு துரும்பு கூட கிடைக்கவில்லை, அதன் பின்பே உளவுப்பிரிவின் பல கட்ட விசாரனைகளுக்கு பின்பே இவ் உண்மை அமெரிக்காவுக்கு தெரியவந்துள்ளது. உண்மை அறிந்தவுடன் உண்மையில் உறைந்துபோனது அமெரிக்கா. தற்போது அந்த பொறியாளர் ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரி குடியேறி பல ஆண்டுகள் ஆகின்றது.

பல நாடுகள் அழிக்கப்பட்ட வரலாறுகளை கதைகள் ஊடாகவே நாம் அறிந்திருப்போம் ஆனால் நிகழ்காலத்தில் ஒரு பொய்யினால் ஒரு நாடு வீழ்த்தப்பட்டுள்ளதை அறிகின்றோம். ஆனாலும் பெரும் வல்லரசான அமெரிக்கா தமிழீழ விடுதலைப்புலிகளின் விடயத்திலும் இதே தவறை கடந்த காலங்களிலும் செய்திருக்கின்றது. இப்போது மிக நிதானமாக இலங்கை விடயத்தில் கால் பதிக்கவே அமெரிக்க விரும்பும் என எதிர்பார்க்கலாம் எனவே அமெரிக்க சமர்ப்பிக்க உள்ள இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்களை இதே போன்று அதிரலாம் காத்திருப்போம்.

ஆவணப்படம்: பி.பி.சி
பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தைப் பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்தவும்

http://www.bbc.co.uk/iplayer/episode/b01fnqr8/hd/Modern_Spies_Episode_1

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com