Contact us at: sooddram@gmail.com

 

இதயசுத்திசுடனான கூட்டு  உழைப்பே கிளிநொச்சியின் கல்வி மேம்பாட்டுக்கு வழிசமைக்கும்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற  அபிப்பிராயம் பொதுவாகப் பலரிடமும் காணப்படுகிறது. மாவட்டரீதியான கல்வியின் முன்னேற்றமானது, போர்க்காலத்தில் இருந்த அளவுக்கு போர் முடிந்தபின்னர் காணப்படவில்லை என்ற கருத்து இதில் முதன்மையானது.  இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு அப்பால் மாவட்டத்தின் அனைத்து தரப்பினரதும் இதயசுத்தியுடனான கூட்டு உழைப்பின் மூலம் மாவட்டத்தின் கல்வி நிலையினை மேம்பாட்டுக்கு கொண்டுவரமுடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

25-04-2012 அன்று பாராளுமன்ற உறுப்பினரின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார  ேவைகள் பணிப்பாளர் பணிமனையில்;; ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட கல்வி மேம்பாடு கூட்டத்தில் தலைமை தாங்கி கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

போர்க்காலத்திலும் சரி, போருக்குப் பிறகு அகதி முகாம்களில் இருந்த போதும் சரி, பின்னர் மீள் குடியேற்றம் நடந்த பிறகு இன்று வரையிலும்; அனைவரும் அர்ப்பணிப்புடன் கல்விப் பணிகளை ஆற்றி வந்திருப்பதையிட்டு நான் என்னுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், எமது மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்ற தேவையை இங்கே அனைவரும் உணர்ந்துள்ளோம்;.ஆகவே இந்த விசயத்தில் நாம் எல்லோரும் ஒரு பொது நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து செயற்டவேண்டும்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளஉத்தியோகத்தர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இந்த மாவட்டத்தைச்சேர்ந்தவர்களாகவே உள்ளனர். ஆகவே அவர்களுக்கு இந்த மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில்கூடுதலான அக்கறை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாகும். போர்க்காலத்தில் - வசதிகளும் வளங்களும் குறைந்து செல்லும் நிலையில் கல்விச்செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது. ஆனால் இப்போதுபோர் முடிந்தபின்னர் -  வளங்களும் வசதிகளும் அதிகரித்துவரும் சூழலில், கல்வியின் நிலையானது வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இந்த நிலையினை மாற்றி அமைக்க வேண்டும் அதற்கு அதிபர் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் அந்த பாடசாலை சமூகத்தினர் என அனைவரின் கடுமையான முயற்சி இன்றியமையாத   ஒன்றாகும் எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இழந்து போன வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொரு குடும்பமும் கடுமையாகமுயற்சிக்கின்றன. வீடமைத்தல் தொடக்கம் லீசிங்கிற்காக உழைப்பது வரையில் மக்களின்சிரமங்கள் ஏராளமாக உள்ளன.

எனவே, இதற்காக அவர்கள் வீட்டுக்கு வெளியேதான் கூடுதலான நேரத்தைச் செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களுடைய பிள்ளைகளின் மீதான அவதானிப்பும் பிள்ளைகளுடன் தங்களின்நேரத்தைச் செலவிடும் தன்மையும் குறைவடைந்துள்ளன. எனவே வீட்டுச் சூழலானது பொதுவாகவே படிப்புக்குரியதாக அமைந்திருக்கவில்லை

அத்தோடு மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் உயிரிழப்பு,உடல உளப் பாதிப்பு என ஏதோ ஒரு வகையில் போரின் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்தப் பாதிப்புகல்வி பயிலும் மாணவர்களிடத்திலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக உளத்தாக்கம், பொருளாதாரத் தாக்கம் என்ற வகையில் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் இன்று நிறைய உள்ளனர் இதனைவிட ஒரு குறிப்பிட்ட தொகையினரைக் கொண்ட குடும்பத்தினரின் சகோதரர்கள(பிள்ளைகள்) அல்லது தந்தை (கணவர்புனர்வாழ்வுமுகாம்களில் இருப்பதால் குடும்பத்தின் நிலைமை பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றதுஇதனால், இந்தக் குடும்பங்கள் தமது பிள்ளைகளைசீராக அவதானிக்க முடியாதுள்ளது.  எனவே இவ்வாறான சமூக நிலைப்பட்ட புறக் காரணிகளும் எமது மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சிக்கு வழிகோலுகின்றது

கடந்த ஆண்டு பௌதீக வளங்களுக்காக 893 மில்லியன் ரூபாவும் தரமான உள்ளீட்டுக்காக 13 மில்லியன் ரூபாவும். மாணவர்களின் உயர்மட்டச் செயற்பாட்டுக்காக 2.35 மில்லியன் ரூபாவும் செலவு   செய்யப்பட்டுள்ளது.

இதைவிட இந்த ஆண்டு இன்னும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கணினி உள்ளிட்ட ஏனையபிற வளங்களும் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரம், விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் பிரச்சினைக்குரியவையாகஇருந்தாலும் அவற்றைச் சீர்செய்யும் முயற்சியில் மாற்றுத்திட்டங்கள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல பாடசாலைகளுக்கு மின் பிறப்பாக்கிகள்  வழங்கப்பட்டுள்ளன. தவிர, மின்சார வசதிகள்விரைவாக பல இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கல்வியின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரியிவில்லை எனவே இவற்றை கவனத்தில் எடுத்து நாம் தொடர்ந்தும் கல்வியின் மேம்பாட்டிற்காக உழைக்கவேண்டும் தனியே கல்வித்திணைகளம் மாத்திரமன்றி இந்த மாவட்டத்தின் சுகாதார துறையினர் நிர்வாகத்துறையினர் என அனைவரும் மாவட்ட கல்வி மேம்பாட்டிற்கு தங்களின் பொறுப்பு மிக்க பங்களிப்பை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய இந்த கூட்டத்தில்

Ø வளங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் போது பாடசாலையின் நிலையினை அறிதல்.


Ø கோட்ட ரீதியான சந்திப்புக்களை மேற்கொள்ளல்.

Ø கல்வி அபிவிருத்திகுழவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

Ø கணிதம் விஞ்ஞானம் தகவல் தொடர்பாடல் பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமித்தல்.

Ø புhடசாலைக்கு சமூகமளிக்காதவர்கள் தொடர்பில் நன்னடத்தை அலுவலர்க்ள ஊடாக நடவடிக்கை எடுத்தல்.

Ø தனியார் கல்வி நிலையங்களை கண்கானித்தல் மற்றும் பாடசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியார் கல்வி நிலையங்களின் விடுமுறைகளை ஒழுங்குபடுத்துதல்.

Ø கல்வியில்; ஆசிரியர்கள் உள்ளிட்ட சாதனையாளர்களை கௌரவித்தல்.

Ø ஆசிரியர்களின் நலன்களில் அதிக அக்கறை எடுத்தல்.

 
போன்ற பின்வரும் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வலய கல்விப்பணிப்பாளர் திரு.முருகவேல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கார்த்திகேயன், வவுனியா மாவட்ட வைத்திய அத்தியட்சரும் கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான சத்தியமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட உளநல வைத்திய அதிகாரி ஜெயராஜா யாழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சிவகுமார் ஓய்வுபெற்ற மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் அரியரத்தினம் ஓய்வுபெற்ற வலய கல்விப்பணிப்பாளர் குருகுலராஜா அரச செயலக திட்டப்பணிப்பாளர் மோகனபவன் பிரதேச செயலர்கள் மற்றும் உதவிகல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஈழமக்கள் ஜனநாய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com