Contact us at: sooddram@gmail.com

 

எட்டுக் கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டிவிட்டு அதை தனிநாடு ஆக்கி சிக்கலில் விழ வேண்டாம  - மனோ கணேசன்

இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என சாபமிட வேண்டாமெனஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள் தனமான சிங்கள பௌத்த தீவிரவாதம் மூலம் எட்டுக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.

இந்தியா ஒன்றாக இருப்பது ஒன்றுதான் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற ஒரே பாதுகாப்பு. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த பெரும் உண்மையை உங்களுக்கு விளக்கி சொல்லுகிறதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சொல்கிறேன். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இன்று மாணவர் போராட்டம் உச்சநிலை அடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நேற்று அங்கு நடிகர்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள். இதற்கு பதிலாக சிலர் இலங்கைக்கு தமிழ் திரைப்படங்களை கொண்டு வரக்கூடாது என சொல்கிறார்கள். இலங்கை ஒரு பெரிய திரைப்பட சந்தை இல்லை.இதனால் இங்கு தமிழ்நாட்டு திரைப்படம் வராதது பற்றி எல்லாம் அவர்கள் கணக்கிலும் எடுக்க மாட்டார்கள். இந்தியாவில் இருந்து எந்த பொருளும் கொண்டு வர விட மாட்டோம் என இன்னும் சிலர் சொல்கிறார்கள். அங்கிருந்து எதுவும் வராவிட்டால் அது நமக்குத்தான் பெரும் கஷ்டம். இந்தியாவில் இருந்து எதுவும் வேண்டாம் என்றால் ஏன் கௌதம புத்தரை மாத்திரம் இங்கு வைத்துள்ளீர்கள்? அவரை திருப்பி அனுப்பி விடலாமே.

இந்தியாவையும், தமிழ் நாட்டையும் சாபம் இட்டு, ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் போராடும் மாணவர்களையும் கண்டபடி திட்டித் தீர்த்து அங்கு தமிழ் இன உணர்வை கொழுந்து விட்டு எரியச் செய்து இந்திய மாநிலமான தமிழ்நாட்டை தனியொரு நாடு ஆக்கி விடாதீர்கள்.

எண்பது மில்லியன் தமிழர் வாழும் தமிழ்நாடு தனிநாடு ஆகும் பட்சத்தில் அது இலங்கைக்கு பெரும் ஆபத்தில் முடியும். தனித்தமிழ்நாட்டின் முதல் நடவடிக்கை இலங்கைக்கு எதிராகத்தான் முடியும். இதை நாம் விரும்பவில்லை. இரு தரப்பிலும் வாழும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் சிக்கி தவிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் இந்த உண்மையை, இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என பகிரங்கமாக பேசும் சிங்கள தீவிரவாதிகள் உணர வேண்டும். இவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்கிறார்கள்.

இங்கே ஜெயலலிதாவை திட்டுகின்றவர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். தமிழகம் சென்ற பிக்குமார்களை தாக்கியவர்களை தமிழக அரசு கைது செய்துள்ளது. ஆனால், இங்கே பெப்பிலியானவில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தை தாக்கி, ஒருவரின் மண்டையை உடைத்த காடையர்களை கைது செய்து மன்னிப்பு வழங்கி விடுவித்துவிட்டார்கள்.

கிளிநொச்சியில் சனிக்கிழமை நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் மக்கள் பிடித்து கொடுத்த காடையர்களை பொலிஸ் உடனடியாக விடுவித்துவிட்டது. அதில் ஒருவர் பொலிஸ் புலனாய்வுத்துறை சிஐடி அதிகாரி. இதேபோல்தான் தெல்லிப்பளையிலும் மக்கள் பிடித்து கொடுத்த குற்றவாளிகளை பொலிஸ் விடுவித்தது.

இன்று காலை கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு நால்வர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது முதன் முறை அல்ல. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எவரும் எப்போதும் கண்டு பிடிக்கப்படுவது இல்லை.

இதுதான் இலங்கையின் கோத்தாபய ராஜபக்ச பொலிஸ். ஆனால், இந்த கோத்தாபய ராஜபக்சவின் பொலிஸைவிட ஜெயலலிதாவின் தமிழ்நாடு பொலிஸ் நேர்மையாக தனது கடமையை செய்துள்ளது இன்று நிரூபணமாகியுள்ளது.

இந்திய மாணவர்கள் இலங்கை தீவில் தனித் தமிழீழத்தையும், அதற்கான பொது வாக்கெடுப்பையும் கோரி போராடுகிறார்கள். அதை நினைந்து சந்தோசப்படுங்கள். ஏனென்றால் அதனால்தான் இந்திய மத்திய அரசு இந்த கோரிக்கைகளை தனது தேச நலனுக்கு எதிரான தீவிரவாத கோரிக்கைகள் என்று சொல்லி நிராகரித்துள்ளது. அதனால் இன்று இலங்கை நாடு தப்பி பிழைத்துள்ளது.

தமிழீழம், பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை விட்டுவிட்டு, அந்த மாணவர்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்யக் கோரி போராடினார்கள் என்றால் இந்திய மத்திய அரசு மிகப்பெரும் நெருக்கடியில் விழும். 13ஆம் திருத்தமும், மாகாணசபையும், முக்கியமாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுடன் செய்துகொண்ட ராஜீவ் - ஜே.ஆர். ஒப்பந்த சரத்துக்களாகும். இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த அமுலாக்கல் கோரிக்கையை இந்தியாவின் மத்திய அரசு இன்று நிராகரிக்க முடியாது. இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் நிராகரிக்க முடியாது.

போராடும் தமிழக மாணவர்களுக்கு நான் இந்த உண்மையை எடுத்துக் கூறுகின்றேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்யுமாறு உங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக போராடுங்கள் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எனவே நிலைமை மோசமாகும் முன், இந்தப் போராட்டங்கள் அனைத்துக்கும் மூல காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளித்து தீர்வு காணுங்கள். தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள - பௌத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com