Contact us at: sooddram@gmail.com

 

சுமந்திரன் - கீதாஞ்சலி கருத்து மோதல்

தமிழ்க் கூட்டமைப்பின் தவறான போக்கு இந்திய எம்.பிக்கள் சந்திப்பில் அம்பலம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவுடனான சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரனுக்குமிடையில் காரசாரமான கருத்து மோதல்கள் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர் ஸ்தானிகரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. வடபகுதி அரசியல் பிரமுகர்களும் அரசசார்பற்ற பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களால், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தவறான போக்கை இந்திய எம்.பிக்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பாதுகாப்பு படையினரை வடபகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மக்களின் பணிகளில் இராணுவத்தினர் அநாவசியமாக தலையிடுவத னால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறதென்றும் பொதுமக்களுக்கு சொந்தமான பெருமளவு காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருக்கிற தென்றும் குற்றம் சாட்டினார்.

காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு இதுவரையில் எவ்வித தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்றும், குடிபெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டுமென்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றத் தவறிவிட்டதென்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரனின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரான திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிக்கும் இத்தகைய குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று மறுப்புத் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் தமிழ்மக்களுக்கு செய்யும் நற்பணிகளில் 2வீதமான பணிகளைக்கூட செய்யாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களைப் பற்றி பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லையென்று திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் கூறினார். ஜனாதிபதி அவர்கள் பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்த காரணத்தினால் இன்று தமிழ் மக்கள் உலகத்தின் எந்தவொரு நாட்டுக்கும் சுதந்திரமாக தலை நிமிர்ந்து சென்றுவருவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்று தெரிவித்த திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், எல்.ரி.ரி.ஈ. அழிக்கப்படுவதற்கு முன்னர் உலகில் எந்த இடத்திலும் தமிழர்களைப் பார்த்தால் இவர்கள் பயங்கரவாதிகள் என்று நாமம் போடும் வேதனைக்குரிய கடந்தகாலம் இன்று நீங்கிவிட்டதென்று கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் இப்போது படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதென்றும் அவர் கூறினார். இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறி வருகிறதென்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச அரங்குகளில் முறைப்பாடு செய்வது தவறு என்றும் அரசாங்கம் இதனை நிறைவேற்றி வருவதை புரிந்து கொண்டும்கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்விதம் உண்மைக்கு மாறான கருத்துகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்க விடயமென்றும் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மக்களை மீள் குடியேற்றும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றும் பாதுகாப்பு படையினரின் பூரண ஒத்துழைப்புடன் இப்போது வடபகுதியில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் சேர்த்த இரண்டு இலட்சம் ரூபாவை பயன்படுத்தி ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டை அவர்களுக்கு நிர்மாணித்து கொடுத்துள்ளார்கள் என்று கூறினார்.

அரசாங்கம் செய்வதைப் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் இவ்விதம் தமிழ் மக்களுக்கு உதவ முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் பேச்சளவில் மாத்திரமே மக்களுக்கு சேவை செய்துவிட்டு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணத்தை முடக்கிக் வைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த கருத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அங்கத்தவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக கூக்குரல் எழுப்பி திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தொடர்ந்தும் பேசுவதற்கு குறுக்கீடு செய்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவினர், ஒருவரின் கருத்துக்கு செவி மடுப்பது ஜனநாயக உரிமை என்று கூறி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து உரையாற்றிய திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் வெளிநாட்டு பணத்தை பெறுவதில் மாத்திரம் தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் வடபகுதியில் உள்ள தமிழ் மக்களை பற்றி சிந்தித்து செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அன்று அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்கள் இன்று பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயக அரசியலில் சேர்ந்து சுதந்திரமாக நாட்டில் வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் சாதாரண மக்களை மறைத்து வைத்திருப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை என்று திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் கூறப்படுபவர்களில் பலர் எல்.ரி.ரி.ஈ.யினால் கொல்லப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று தெரிவித்த திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், இவர்கள் அனைவரையும் இராணுவம் கொன்றது என்று தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ.யினர் அப்பாவி மக்களை மனிதக்கேடயங்களாக வைத்து யுத்தம் செய்ததனால் தான் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மரணிப்பதற்கு காரணம் என்று தெரிவித்த திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல தீர்வை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற அசையாத நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கிறதென்றும் தெரிவித்தார்.

வடபகுதியில் தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் ரீதியல் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்ற போதிலும் வெளிநாடட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com