Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்காவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: சிறுவன் உட்பட மூவர் பலி: 140 பேர் படுகாயம்

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் 140 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்பை அடுத்து அமெரிக்கா எங்கும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில் தீவிரவாத தாக்குதல் கோணத்தில் அமெரிக்க புலனாய்வுத் துறையான எப். பி. ஐ. விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது. பொஸ்டன் பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு அனைவரும் பணிக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோரில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பலியானோரில் 8 வயது சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சியூடே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தாக்கதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படு வார்கள் என வலியுறுத்தியுள்ளார்.

அதனைச் செய்தது யார் என்பதை நாம் கண்டு பிடிப்போம். அவர்கள் ஏன் இதனைச் செய்தார்கள் என்பதையும் கண்டுபிடிப்போம். இதற்குப் பொறுப்பான தனி நபர்கள், குழுக்கள் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்என்று ஒபாமா தனது உரையில் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் ஒபாமாவின் உரையில்தீவிரவாதம்என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் வெள்ளை மாளிகை பின்னர் வெளியிட்ட அறிவிப்பில், “ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவம் தீவிரவாத செயல் என்பது தெளிவாகிறது. எனவே தீவிரவாத செயல் என்ற கோணத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும்என கூறப்பட்டது.

அடுத்தடுத்து வெடிப்பு

ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் மிகப் பழைமையான மரதன் போட்டி 117 ஆம் தடவையாக பொஸ்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஓடுதளத்தின் அருகிலேயே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் காயத்துக்குள் ளானோரை மீட்கும் நோக்கில் பொலிஸார் அந்தப் பகுதியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். இதனிடையே முதல் குண்டு வெடித்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் மக்கள் கூடியிருக்கும் மற்றொரு இடத்தில் இரண்டாவது குண்டு வெடித்தது.

இந்த குண்டு 50 முதல் 100 மீற்றருக்கு அப்பாலேயே வெடித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வீதிகள் எங்கும் குண்டு வெடிப்பின் சிதறல்கள் பரவிக் கிடப்பதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. குண்டுவெடிப்பில் குறைந்தது 140 பேர் காயமடைந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதில் பலரது கை, கால்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், வெட்டுக்காயங்கள், கீறல்களுக்கு உள்ளானோரும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு குறித்து பொஸ்டன் பொலிஸ் ஆணையாளர் எட்வட் டேவிஸ் ஊடக மாநாட்டில் கூறும் போது, இந்த அசம்பாவிதம் குறித்து முன்கூட்டியே எந்த உளவு தகவலும் கிடைக்கவில்லை என்றார். அனைவரும் வீடுகளில் இருக்கும்படியும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும் பொஸ்டன் மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று அவர் இரண்டாவது முறை நடத்திய ஊடக மாநாட்டில் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொஸ்டன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. விசாரணை தொடர்பில் சோதனைகள் மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

8 வயது சிறுவன் பலி

குண்டு வெடிப்பில் பலியானோர் விபரம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப் படாவிட்டாலும் கொல்லப்பட்டோரில் எட்டு வயது சிறுவனும் உள்ளடங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. மார்டின் ரிச்சட் என்ற சிறுவனே கொல்லப்பட்டுள்ளான். சிறுவனின் தாய் மற்றும் சகோதரியும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினர் தனது தந்தை மரதன் போட்டியை நிறைவுசெய்யும் வரை காத்து நின்றுள்ளனர்.

மரதன் போட்டியுடன் தொடர்புடைய வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை பொலிஸார் சோதனையிட ஆரம்பித்து ள்ளனர். இதில் குறித்த பகுதியில் வெடிக்காத இரு குண்டுகளும் மீட்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரதன் போட்டியில் பங்கேற்ற மாநில பொலிஸ் அதிகாரி ரூபன் பஸ்டஜியான் சம்பவம் குறித்து கூறும் போது, “எனது ஓட்டத்திற்கு மத்தியில் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டது. அனைத்துப் பக்கமும் மக்கள் தரையில் விழுந்து கிடந்தார்கள்.

குறைந்தது 25, 30 பேரது ஒரு கால் அல்லது கணுக்கால் அல்லது இரு கால்களும் இல்லாமல் இருந்ததுஎன்றார். எவ்வாறாயினும் பொஸ்டன் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் வெளிநாட்டு தீவிரவாதிகளா அல்லது உள்நாட்டினரா என்பது குறித்து கண்டறிவதற்கு கால அவகாசம் போதாது என்று வெள்ளை மாளிகை மற்றும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.

18 ஆண்டுகளின் பின் தாக்குதல்

கடந்த 1995 ஆம் ஆண்டு ஒக்லஹாமா நகரில் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுவைச் சேர்ந்த அமெரிக்க பிரஜை டிமொதி மக்விக் நடத்திய குண்டுத் தாக்குதலில் 168 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இஸ்லாமிய ஆயுததாரிகள் இரட்டை கோபுரத்தின் மீது நடத்திய குண்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதோடு, 1000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவங்களுக்குப் பின்னர் அமெரிக்க மண்ணில் இடம்பெறும் மிகப்பெரிய குண்டு வெடிப்புச் சம்பவம் இதுவாகும். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அமெரிக்க உள்நாட்டு விமானங்கள் கீழாகப் பறக்க தடை செய்யப்பட்டு ள்ளதோடு பிரதான நகரங்களான வொஷிங்டன், நியூயோர்க் நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொஸ்டன் குண்டு வெடிப்பு இடம்பெற்று ஒரு சில நிமிடங்களில் பொஸ்டனில் இருக்கும் ஜோன் எப் கென்னடி நூலகத்திலும் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புக்கு மூட்டும் சாதனம் ஒன்றே காரணம் தீ என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் பொஸ்டன் குண்டு வெடிப்புடன் இச் சம்பவம் தொடர்புபட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆண்டுதோறும் நடக்கும் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் 23,000 போட்டியாளர்கள் அளவு பங்கேற்கின் றனர். ஆயிரக்கணக்கான பார்வை யாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள் கின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள லண்டன் மரதன் போட்டியின் பாதுகாப்பை பிரிட்டன் பொலிஸார் பலப்படுத்தி யுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com