Contact us at: sooddram@gmail.com

 

பொஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் விபரம் அறிய அமெரிக்க அதிகாரிகள் டஜஸ்தான் பயணம்

பொஸ்டன் மரதன் குண்டுத் தாக்குதல் சந்தேக நபர்களான இரு சகோதரர்களினதும் பெற்றோரிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ரஷ்யாவின் டஜஸ்தான் பிராந்தியத்திற்கு சென்றே அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களான சொகர் சர்னெவ் மற்றும் தமர்லன் சர்னெவ் ஆகியோர் அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முன்னர் டஜஸ்தான் பிராந்தியத்திலேயே வாழ்ந்து வந்தனர். இதில் பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தமர்லன் கடந்த 2012 இல் அங்கு சென்று நீண்ட காலம் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் தகவல்களை திரட்டும் நோக்கில் டஜஸ்தான் பிராந்தியத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் சென்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேக நபர்கள் கடும்போக்கு கொள்கைகளை பின்பற்றியதற்கான ஆதராங்கள் மற்றும் தொடர்புகளை திரட்ட அமெரிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இதில் 19 வயதான சொகர் சர்னெவ் கடும்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது அரச வழக்கறிஞர்கள் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தியது, உயிர்ச் சேதங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது மரண தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொஸ்டன் மரதன் போட்டியின் போது இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். சர்னெவ் சகோதரர்கள் ரஷ்யாவின் முஸ்லிம் பிராந்தியமான செச்னியாவை பூர்விகமாக கொண்டவர்களாவர். செச்சினியா பாரிய யுத்தத்தை எதிர்நோக்கிய பிராந்தியமாகும். எனினும் கடந்த ஒரு தசாப்தமாக சர்னெவ் சகோதரர்கள் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வந்தனர். இதில் தமர்லன் 2012 ஆம் ஆண்டு ரஷ்யா சென்று நீண்ட நாள் இருந்துள்ளார். இதன் போது அவர் டஜஸ்தான், செச்னிய எல்லையில் ஆறு மாதங்களை கழித்துள்ளார்.

ரஷ்யாவின் மற்றொரு முஸ்லிம் பிராந்தியமான டஜஸ்தானில் இஸ்லாமிய போராளிகளின் செயற்பாடு தீவிரமாக உள்ளது. எனினும் இந்த குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் தமது மகன்கள் அப்பாவிகள் என சர்னெவ் சகோதரர்களின் பெற்றோரான அன்சோர் மற்றும் சுபைதத் சர்னெவ் குறிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இட்டுக்கட்டியது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மொஸ்கோவிலிருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து டஜஸ்தான் பிராந்தியத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சர்னெவ் சகோதரர்களின் பெற்றோரை சந்தித்து விபரம் அறிந்துள்ளனர். எனினும் இந்த விசாரணையை எந்த அமெரிக்க அதிகாரிகள் நடத்தினார்கள் என்பது தெளிவில்லை என அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு தகவல் அளிக்கும் போது, அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ. பொஸ்டன் குண்டு வெடிப்பு விவகாரத்தில் ரஷ்யாவின் உதவியை பெற்றுள்ளது என்றார். டஜஸ்தான் பிராந்தியத்தினூடாகவே சந்தேக நபர்கள் கடும்போக்கு சிந்தனையை பெற்றதாக கூறும் தகவலை தஜஸ்தான் பிராந்திய உள்துறை அமைச்சர் முற்றாக மறுத்துள்ளார். இது குற்றச்சாட்டை வேறு பக்கம் திசை திருப்பும் முயற்சி என உள்துறை அமைச்சர் அப்துரஷித் மகொவ்மடொவ் ரஷ்யாவின் இன்டர்பக்ஸ் செய்திச் சேவைக்கு கூறினார்.

மறுபுறத்தில் பொஸ்டன் குண்டு வெடிப்பு குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையினர் போதிய அவதானம் செலுத்தவில்லை என்பது தொடர்பில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கொல்லப்பட்ட தமர்லன் தீவிரவாத போக்குடையவர் என ரஷ்யா, அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ.யிற்கு ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்த போதும் அது குறித்து எப்.பி.ஐ. பொடுபோக்காக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பில் எப்.பி.ஐ. 2011 ஆம் ஆண்டில் தமர்லனிடம் விசாரணை நடத்திய போதும் அவர்களால் எந்த ஆதாரமும் பெற முடியவில்லை. இந்நிலையில் செனட் சபையின் உளவுக்குழு செவ்வாய்க்கிழமை மூடிய அறையில் நடத்திய ஆலோசனையில் அமெரிக்க உளவுப் பிரிவுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசு கட்சி செனட் உறுப்பினர் சுசான் கொலின்ஸ் ஏ.பி. செய்திச் சேவைக்கு கூறும் போது, “சிக்கலான விசாரணைகள் தொடர்பில் உளவுப் பிரிவுகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் இடம்பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இது உளவு பிரிவுகளுக்கு மாத்திரம் அல்லாமல் ஒரே உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலும் குழப்பம் உள்ளதுஎன்றார்.

இதனிடையே தொண்டை பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பேச முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் சொகர் எழுத்து மூலம் அளித்த வாக்குமூலத்தில் பொஸ்டன் தாக்குதலுக்கு ஜிஹாத் சிந்தனை அடிப்படையாக இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இது ஆரம்பகட்ட விசாரணை என்றும் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com