Contact us at: sooddram@gmail.com

 

ரணிலின் பொறுப்பற்ற செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியா

வடக்கில் மீள் குடியேற்றம், வீடமைப்பு, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு போன்ற நற்பணிகள் புரியும் இராணுவத்தினர் மீது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவது தவறு. அவரது இக் கருத்துக்களை வட பகுதி மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக அறிவிப்பது நல்லது. ஆனால் அதனை சரிவர நிறைவேற்றுவதற்கு அவரோ அல்லது அவரது கட்சியோ உருப்படியான எந்தவொரு ஒத்துழைப்பையும் அரசுக்கு இதுவரை வழங்கவில்லை.

இலங்கைக்கு எதிராக செயற்படும் வெளிநாட்டு சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் வட பகுதிக்குச் சென்று கோமாளித்தனமாக கூறுவதை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றுமே அங்கீகரிக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் நாட்டின் பொறுப்பு மிக்க பதவியை வகிக்கும் ஒருவர், அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரங்களை அரசியல் ரீதியில் செய்து, தனது கட்சிக்கு மக்கள் ஆதரவைப் பெருக்கி அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கும் எண்ணத்துடனேயே எந்தவொரு நாட்டிலும் எதிர்கட்சித்தலைவர் தீவிரமாக செயற்படுவார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு நாட்டை துண்டாடுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் ஏனைய பிரிவினைவாத சக்திகளுடனும் இணைந்து இப்போது நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் திருகுதாளத்தை நாட்டுப்பற்றுடைய எந்தவொரு பிரஜை யாலும் ஏற்க முடியாது. வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சாதகமான சூழ்நிலை இன்று உருவாகிக் கொண்டிருப்பதனால், ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு தன்னுடைய விரல்விட்டு எண்ணக்கூடிய கையாட்களுடன் சென்று வருகிறார். அவர் வடபகுதியில் தனது கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தை நடத்தினால் எவரும் அவர் மீது குற்றம் சொல்ல முடியாது. அதற்கு பதில் அவர் வடபகுதிக்கு சென்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இராணுவத்தினர் மீதும், அரசாங்கத்தின் மீதும் சுமத்தி மக்கள் மனதில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வதை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது.

உதயன் பத்திரிகை எங்கள் நாட்டிலுள்ள ஒரு தினசரியாகும். அப்பத்திரிகை காரியாலயத்தை இனந்தெரியாதோர் வந்து தாக்கி, அதன் ஒரு பகுதியை தீயிட எத்தனித்த முயற்சியை பத்திரிகை சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய உன்னத நோக்கத்துடன் செயற்படுபவர்கள் எவரும் கண்டிக்க தவறவில்லை.

ரணில் விக்ரமசிங்கவும் அதுபோன்று உதயன் காரியாலயத்திற்கு சென்று அதன் ஆசிரியர் மற்றும் உரிமையாளர்களுடன் பேசி அந்த சம்பவத்துக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தால் அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்க அங்கு சென்று உதயன் பத்திரிகையை அரசாங்கமும், இராணுவத்தினருமே தாக்கினார்கள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி அதற்கு சர்வதேச ரீதியில் பிரசாரத்தை பெற்றுக் கொடுக்கும் முயற்சி தவறானது.

ஒரு எதிர்கட்சித்தலைவர் விரும்பினால் அரசாங்கத்தை எதிர்க்கலாம். ஆனால், அவர் தேசத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய இத்தகைய தவறான கருத்துக்களை வெளியிடுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்கட்சித் தலைவர் எப்போதுமே இராணுவத்தை தூற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறாரே ஒழிய, இராணுவத்தினர் வடபகுதி மக்களுக்கு செய்யும் பணிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேச தயக்கம் காட்டுகிறார்.

மக்களை மீள் குடியேற்ற வேண்டுமென்று அவர் பகிரங்கமாக அறிவிப்பது நல்லது. ஆனால் அதனை சரிவர நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சித் தலைவரோ அவரது கட்சியோ உருப்படியான எந்தவொரு ஒத்துழைப்பையும் அரசாங்கத்துக்கு வழங்கவில்லை.

இராணுவத்தினர் மக்களை மீள்குடி யேற்றுவதற்கு பிரதான முட்டுக்கட்டையாக இருக்கின்ற நிலக்கண்ணி வெடிகளையும், மிதி வெடிகளையும் அகற்றும் பணி இப்போது வடபகுதியில் வெற்றிகரமான முறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பல பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதனால் தான் இப்போது இடம்பெயர்ந்த மக்களின் பெரும்பகுதியினரை தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

அடுத்தபடியாக யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த சுமார் 12ஆயிரம் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்த பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இன்று எவ்வித அவப்பெயரும் இன்றி சுதந்திர மனிதராக வடபகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இராணுவத்தினர் எடுத்த முயற்சிகளை பாராட்டாவிட்டாலும் ரணில் விக்ரமசிங்க அதனைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்க வேண்டும்.

இந்த 12ஆயிரம் பேரில் புனர்வாழ்வ ளிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு வாழ்வாதாரங்களை இராணுவத்தினர் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு சுய தொழில் ஆரம்பிப்பதற்கான வங்கிக் கடனை பெற்றுக் கொடுத்திருப்பதுடன் கடற்றொழில் செய்வதற்கு படகுகள், இயந்திர உபகரணங்கள், வலைகளும் விவசாயம் செய்வதற்கு இரண்டு சக்கர, நான்கு சக்கர உழவு இயந்திரங்களும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

பயங்கரவாத யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களில் ஒன்று கிளிநொச்சியாகும். இந்த மாவட்டத்திலுள்ள 100 ஏழை இளம் பெண்களை இராணுவத்தினர் தங்களின் பெண்கள் மகளிர் தொண்டர் இராணுவப் படையில் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு இப்போது இராணுவம் 32ஆயிரம் ரூபா சம்பளத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு உணவு, சீருடை, தங்குமிட வசதி, வைத்திய வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேலும் 18ஆயிரம் ரூபாவை செலவிடுகிறது.

இவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள 20பேருக்கு இராணுவம் தனது செலவில் 5இலட்சம் ரூபா செலவுக்கான கட்டிடப் பொருட்களையும், தளபாடங்களையும் வாங்கி சுமார் 10இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு அழகான வீட்டை நிர்மாணித்துள்ளது. இந்த வீடுகளின் நிர்மாணப் பணியை இராணுவத்தினரே ஏற்றுள்ளார்கள்.

இவ்விதம் கிளிநொச்சி போன்ற பெரும்பான்மை ஏழைமக்கள் வாழும் ஒரு மாவட்டத்தில் இராணுவத்தினர் அப்பிரதேச மக்களை வாழவைக்கும் ஒரு தன்னலமற்ற பணியை செய்து வருகிறார்கள்.

இந்த நற்பணிகளை புரியும் இராணுவத்தினர் மீது எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோமாளித்தனமாக வெளிநாட்டில் உள்ள இலங்கைக்கு எதிரான சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்துவதை வடபகுதியில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றுமே அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும் புத்திஜீவிகளும் அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டு கின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com