Contact us at: sooddram@gmail.com

 

அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் தனித்து பேசுவதில் அர்த்தமில்லை

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு என்பது சகல கட்சிகளிடமும் இருந்துவரவேண்டியது அவசியமாகும். எனவே அனைத்துக் கட்சிகளும் பங்குகொள்ளக்கூடிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதே கூட்டமைப்புக்கு தற்போது உள்ள ஒரே தெரிவாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். வேண்டுமானால் நானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். ஆனால் அந்தப் பேச்சுக்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக அமையாது. காரணம் இரண்டு கட்சிகள் பேச்சு நடத்தியோ இரண்டு நபர்கள் பேச்சு நடத்தியோ அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை அடைய முடியாது. இதற்கான ஆணையை மக்கள் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒற்றையாட்சி முறைமையின் கீழ் கீழ் மட்டத்துக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு எமது அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. எந்தவொரு செயற்பாடானாலும் அது மஹிந்த சிந்தனைக்கு மக்கள் அளித்த ஆணையின் பிரகாரமே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணவேண்டும் என்ற தேவை இருந்தால் அவர்களே பேச்சுக்கு வரவேண்டும். அரசியல் தீர்வு காண்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும். இதன் மூலமே தீர்வு என்பது சாத்தியமாகும்.

அதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எவ்வாறான நிபந்தனையையும் விதிக்க முடியாது. அதேபோன்று நாங்கள் கூட்டமைப்புக்கு எவ்விதமான வாக்குறுதிகளை வழங்கவும் முடியாது. வழங்கவும் மாட்டோம். அவ்வாறு நிபந்தனைகளை ஏற்பதற்கோ அல்லது வாக்குறுதிகளை வழங்குவதற்கோ அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கவில்லை. மஹிந்த சிந்தனையின் பிரகாரம் அவ்வாறு செய்யவும் முடியாது. ஏனெனில் மக்கள் எங்களுக்கே ஆணை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த சரத் பொன்சேகாவை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
தீர்வுவேண்டுமாயின் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டியது அவசியமாகும். ஜனநாயக ரீதியில் அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடனும் தீர்வை நோக்கிச் செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் அதற்கு இருகட்சிப் பேச்சுக்கள் பயனுடையதாக அமையாது. வேண்டுமானால் நானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்தப் பேச்சுக்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக அமையாது. காரணம் இரண்டு கட்சிகள் பேச்சு நடத்தியோ இரண்டு நபர்கள் பேச்சு நடத்தியோ அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை அடைய முடியாது. ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுவார்ததைகளை நடத்தலாம். ஆனால் அது தீர்வு தொடர்பான எந்த தீர்மானத்தையும் எடுப்பதற்கு உதவியாக அமையாது. அதனால்தான் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. அதாவது ஒற்றையாட்சி முறைமையின் கீழ , கீழ் மட்டத்துக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு எமது அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. எந்தவொரு செயற்பாடானாலும் அது மஹிந்த சிந்தனைக்கு மக்கள் அளித்த ஆணையின் பிரகாரமே முன்னெடுக்கப்படும்.
அரசியல் தீர்வு என்பது அரசியலமைப்பு மாற்றங்களுடன் தொடர்புபட்டதாகும். எனவே அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டுமாயின் அது பாராளுமன்றத்தினால் மட்டுமே முடியும். அப்படிப்பார்க்கும்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவே இருக்கின்ற ஒரே தெரிவாகும்.

இதேவேளை, எமது அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைப் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்படவில்லை. மாறாக திம்புப் பேச்சுவார்த்தை முதலே இந்தப்பிரச்சினை சர்வதேசமயமாகிவிட்டது. அதுமட்டுமன்றி இந்தியாவின் தலையீடு மற்றும் நோர்வேயில் பேச்சுவார்த்தை என விடயம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. எமது அரசாங்கம் பதவிக்கு வரும்போது இலங்கையில் இணைத்தலைமை நாடுகள் மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு என்பன இருந்தன. நாமே அவற்றை நிறுத்தினோம். அத்துடன் சர்வதேசமயப்படுத்தலை எமது அரசாங்கமே குறைத்தது எந்தவொரு நாடும் தலையிடாத நிலைமையை எமது அரசாங்கமே உருவாக்கியது என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com