Contact us at: sooddram@gmail.com

 

சிங்கள அடிப்படை வாதிகளின் சிறைக்கைதியாக அரசாங்கம்: வாசுதேவ நாணயக்கார

சிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாகியுள்ள அரசாங்கம் வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காது அடிமைப்படுத்தி வைத்துள்ளது எனக் குற்றம் சாட்டும் அரசின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார வடக்கில் படையினர் வகை தொகையின்றி காணிகளை கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபை தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதே தவிர அச்சபை இயங்குவதற்கான எந்த அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. வட மாகாண சபை செயலாளர் நியமிப்பில் முதலமைச்சருடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. தீர்மானம் எடுக்கப்படவில்லை. அரசாங்கம் தன்னிச்சையாகவே அந்த நியமனத்தை வழங்கியது. அதேபோன்று வட மாகாணத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நியமனத்திலும் இவ்வாறான செயற்பாடே இடம்பெற்றது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மேற்கண்ட பதவிகள் தொடர்பில் மாகாண சபை முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு கண்ட பின்னரே அப்பதவிகள் நியமிக்கப்பட வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த வழிமுறைகள் எதனையும் பின்பற்றாமலேயே செயற்பட்டுள்ளது. 

சிங்கள சக்திகளின் கைதியாக

தெற்கின் சிங்கள அடிப்படைவாதச் சக்திகளின் சிறைக்கைதியாக அரசாங்கம் மாறியுள்ளது. இச் சக்திகளின் ஆலோசனைகளுக்கமைய வட மாகாண சபையை அடிமைப்படுத்தி அதற்கு கட்டளையிடும் அதிகாரியின் தோரணையிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. வட மாகாண சபையை கலைக்க வேண்டுமென்ற சிங்கள அடிப்படைவாதிகளின் அபிலாஷையை பூர்த்தி செய்யும் விதத்திலேயே அனைத்தும் இடம்பெறுகின்றன. 

ஜனாதிபதி

வட மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பல முறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் எதுவுமே சாத்தியப்படுவதாக இல்லை. எமது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

வெளிநாடுகள்

இந்நிலை தொடர்வது எமது நாட்டுக்கு நல்லதல்ல. ஏனென்றால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசாங்கங்களிடமும் ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புக்களிடமும் இலங்கை அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை மட்டுமே நடத்தி உலகை ஏமாற்றியதே தவிர மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்கவில்லை பட்டியலிட்டு குற்றச்சாட்டுக்களை சமர்ப்பிக்கும். அவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கெதிராக என்னென்ன குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியுமென வழிதேடிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளுக்கு சாதகமாக அமைந்து விடும். இது நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்ளும் நிலைமைக்கு ஒப்பானதாகும்.

ஆளுநர்

வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். இவரை வெளியேற்றி சிவிலியன் ஒருவரை நியமிக்க வேண்டும். அதனை தொடர்ந்து வலியுறுத்துகின்றோம். ஆனால் இன்னமும் சாத்தியப்படவில்லை. 

காணிகள்

பாதுகாப்புக்கெனக் கூறிக் கொண்டு வட மாகாணத்தில் இராணுவத்தினர் வகை தொகையின்றி காணிகளை கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டும். அத்தோடு மக்களின் காணிகளை கையகப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தேசிய பாதுகாப்புக்கென காணிகள் அடையாளம் காணப்படும் போது அது தொடர்பாக வட மாகாண சபையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு காண வேண்டும். அது மட்டுமல்லாது பெருமளவு ஏக்கர் கணக்கில் காணிகளை கையகப்படுத்துவதை கைவிட்டு அதற்கான ஒரு வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும். எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். 

இணக்கப்பாடு

அரசாங்கம் வட மாகாண சபையோடு இணக்கப்பாடோடு செயற்பட்டு அதிகாரங்களை வழங்கி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளும் திட்டங்களை முன்னகர்த்த வேண்டும்.

தெரிவுக்குழு

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வர வேண்டும். அதன் மூலமே தீர்வுகளை எட்ட முடியும். தற்போது தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்க முன் வந்துள்ளதால் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை வட மாகாண சபை மேற்கொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com