Contact us at: sooddram@gmail.com

 

பங்குனி 30 படுகொலை

புலிகள் நிகழ்த்திக்காட்டிய சிறைப்படுகொலை

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏக தலைவனாக முடிசூடிக் கொள்வதற்காக தனது எதேச்சாதிகாரத்திற்காக சக ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மீது தாக்குதல் தொடுத்து அவற்றின் செயற்பாட்டை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை தமிழர் போராட்டத்திற்கு பாதகம் மிக்கதொரு பாரிய திசை விலகலாக அமைந்தது. இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடாத்திய புலிகளின் தலைமை மட்டுமல்ல புலிகளின் இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தூபம் போட்டவர்கள், நியாயப்படுத்தியவர்கள் அனைவருமே தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணகர்த்தாக்கள் என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

1986 ஆரம்பத்தில் ரெலோ இயக்கத்தின் மீது புலிகள் தாக்குதலை ஆரம்பித்தார்கள், அதே வருடம் இறுதிப்பகுதியில் புளொட் இயக்கம் செயற்படுவதற்கு தடை விதித்தார்கள் 1986 மார்கழியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை தடைசெய்யும் தாக்குதலை தொடுத்தார்கள்.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்களின் செயற்பாட்டுக்கு தடைவிதித்து புலிகள் நடாத்திய தாக்குதல்களை தொடர்ந்து புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இந்த இயக்கங்களை சேர்ந்த சுமார் 60 பேர் ஈவிரக்கமின்றி 1987 பங்குனி 30 ம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பொதுமக்கள் சிலரும் அடங்கியிருந்தனர். இந்த படுகொலை வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் 53 பேர் 1983 இல் படுகொலை செய்யப்பட்டதையும் மிஞ்சிய கொடூரக் கொலையெனப் பேசப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்தி மூன்று மாதங்களில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றதால் இங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்தவர்களாயிருந்தார்கள். இவர்களில் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்களும், புலிகளிடம் பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களும் அடங்கியிருந்தார்கள்.

புலிகளால் இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முடியவில்லை. யாழ் நகரில் இந்துக்கல்லூரிக்குச் சமீபமாக குடியிருப்புக்கள் மத்தியிலிருந்த புலிகளின் சிறைக் கூடத்திலிருந்து மரண ஓலம் எழுந்ததையும், கொல்லப்பட்டவர்களின் குருதி வெள்ளமாக வாய்க்காலில் ஓடியதாகவும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். தமது பிடியிலிருந்து தப்பியோட முயன்ற 18 பேரை சுட்டுக்கொன்றதாக புலிகள் மழுப்ப முயன்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகை ஒன்று புலிகளின் இந்தப் புனைவுக்கு முக்கியத்துவமளித்திருந்தது.

புலிகளின் இந்த கொலை வெறித் தாக்குதலின்போது தப்பி வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. புலிகளின் கொலைக்களத்திலிருந்து தப்பிவந்தவர்களில் இருவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான தோழர் தைரி தமது பிடியிலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் என்பதை அறியாமலே மாற்று இயக்கத்தவர்களை அழித்தொழிக்கும் புலிகளின் தொடர் நடவடிக்கையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் புலிகளின் கொலைக்கரங்களிலிருந்து சாதுரியமாகத் தப்பி இன்னும் உயிர் பிழைத்துள்ளார். அவர் கொலைக்களத்திலிருந்து தப்பிவந்து தஞ்சம் கோரிச் சென்ற மதகுரு ஒருவர் அடைக்கலம் வழங்க மறுத்து அவரை கோட்டை இராணுவ முகாமில் சரணடையுமாறு ஆலோசனை வழங்கினார்.

புலிகளின் ஆதிக்கம் எந்தளவுக்கு இருந்தது, எத்தகைய மோசமான நிலையில் மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்கள் தப்பிப் பிழைக்க வேண்டியிருந்தது என்பதற்கு இது சான்றாகும்.

ஆபத்தான நிலையிலிருந்தபோதும் இராணுவத்தினரிடம் சரணடையும் எண்ணம் புலிகளிடமிருந்து தப்பி வந்தவருக்கோ, அவரை மதகுருவிடம் அழைத்துச் சென்றவர்களுக்கோ இருக்கவில்லை. கீழ்நிலையிலிருந்த அதே மதத்தைச் சேர்ந்த மற்றொரு மதகுருவின் உதவியோடும் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான, அறிமுகம் இல்லாத பொது மக்கள் சிலர் துணிச்சலாக எடுத்த நடவடிக்கைகளாலுமே அவர் பாதுகாப்பாக தப்பிச் செல்ல முடிந்தது.

தமிழர் போராட்டத்தின் பின்னர் நடந்த பல துயர நிகழ்வுகளுக்கு புலிகள் சக இயக்கங்களின் செயற்பாட்டை தடுக்க முனைந்து மேற்கொண்ட தாக்குதல்களும், சமூகத்தின் போக்கும், இது போன்ற திட்டமிட்ட படுகொலைகளுமே அடிப்படை, மூலகாரணம் என்பதை மறந்துவிட்டே அரசியல் ஆய்வாளர்கள். அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பலர் கருத்துக்களைத்; தெரிவித்து வருகின்றனர்.

எனவே தான் முள்ளிவாய்க்காலில் 2009 இல் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரும், இச்சம்பவம் நடந்து சுமார் 29 வருடங்கள் கடந்த பின்னரும் இந்தச் சம்பவம் குறித்து பேச வேண்டியுள்ளது.

இந்த நாளில் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட தோழர்களையும், சக இயக்கங்களின் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூரும் அதேவேளை தமிழ் மக்களின் போராட்டம் சீரழிந்து, சின்னாபின்னமானதற்கான காரணங்களை தெரிந்துகொள்வதும் அதற்கு மூல காரணமானவர்கள் யார் என்பதை அறிந்துகொள்வதும் தமிழ் சமூகத்தினதும், இந்த நாட்டு மக்கள் அனைவரதும் எதிர்கால நல்வாழ்விற்காக செயற்படுபவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com