Contact us at: sooddram@gmail.com

 

19ஆவது திருத்தம்

சம்பந்தனுக்கு 3 எம்.பி.க்கள் கோரிக்கை

புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டமூலம் இவ்வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஆட்சி மாற்றத்துக்கான குரல் வலுப்பெற்றது. அதன்பிரகாரம் தமிழ், முஸ்லிம் மக்களின் பூரண ஆதரவுடன் புதிய ஆட்சி மாற்றம் உருவாகியது. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான பொறிமுறையொன்றை கூட தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாமல் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை இன்றி ஆதரித்து வெற்றிபெறச் செய்திருந்தது.

ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் நல்லாட்சியை மையப்படுத்தி தேசிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது, வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களிடம் நேரடியாக குறிப்பிட்டோம். முக்கியமாக வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோர் மாற்றப்பட்டு வடக்கு மக்களின் நன்மதிப்பை அரசாங்கம் பெற்றிருந்தபோதும் அதனைத் தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடிகளின்றி முன்னெடுப்பதற்கான சில நடவடிக்கைகளை உடன் செயற்படுத்துமாறு நாம் கோரினோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக ரீதியாக தமிழ் அதிகாரிகளை நியமிக்கும் படியும், மாவட்ட அபிவிருத்திக்குழு தொடர்பாகவும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்படுவதுடன் இடமாற்றங்கள் அமையவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் இவ்விடயங்கள் தொடர்பாக நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் விரிவாக கூறப்பட்டபோதும் அவ்விடயங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். கடந்த 9ஆம் திகதி பிரதமர் மற்றும் பொது நிருவாக அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இவ்விடயங்கள் தொடர்பாக மேலும் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் தற்போது 100 நாட்கள் வேலைத்திட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. எனினும் நாம் முன்வைத்த சிறு கோரிக்கைகள் தொடர்பில் ஒன்றைத்தானும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நியமித்துள்ள நிலைமையே காணப்படுகின்றது.

வடமாகாணத்துக்கு மட்டுமே இலங்கை போக்குவரத்துசபை தலைவர் பதவி காணப்பட்ட நிலையில் தற்போது வன்னி அமைச்சர் ஒருவரின் சுயநலத்துக்காக வடக்கு மாகாணம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டு அமைச்சருக்கு சார்பான ஒருவருக்கு பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சருக்காக வடக்கு மாகாணம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டமை மிகவும் பாரதூரமான விடயமாகும். மேலும் வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் உள்ள தமிழ் செயலாளரை மாற்றி தனக்கு சார்பான ஒருவரை நியமிப்பதற்காக, அதே வன்னி அமைச்சர் ஒருவரின் துணையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி நல்லாட்சியிலும் பதவி இடமாற்றம் மற்றும் நியமனங்களின் பின்னணியில் சுயஇலாப அரசியலை மையப்படுத்திய செயற்பாடுகளே காணப்படுகின்றன. இதனை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி அபகரிப்பு, உயர் பாதுகாப்பு வலயம், காணாமல்போனோர் விடயம், அரசியல் கைதிகள் விடுதலை, விதவைப் பெண்களின் வாழ்வாதாரம் போன்ற அடுக்கடுக்காக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளுக்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் கடந்த 100 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படாத நிலையில் 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தை எதிர்வரும் வாரம் நிறைவேற்றியே தீரவேண்டும் என ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களாக முதலமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்ட குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றுவரையில் பாராமுகமே காணப்படுகின்றது.

எனவே சிறுவாக்குறுதிகளை கூட நிறைவேற்றாத நிலையில் அதனை எவ்வாறு எம்மால் ஏற்று ஆதரவாக வாக்களிக்க முடியும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது. ஆகவே அத்திருத்தச்சட்டத்துக்கு வாக்களிப்பது குறித்து முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என கூட்டமைப்பின் தலைமையை கேட்டுக்கொள்கின்றோம்.

விட்டுக்கொடுப்புகளின் ஊடாக சரியான தருணங்களை தவற விட்ட பல கசப்பான அனுபங்கள் எமக்கு உண்டு. மீண்டும் அவ்வாறானதொரு ஏமாற்றுச் செயற்பாட்டுக்கு நாம் இரையாகாது தீர்க்கமான முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

தற்போது 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தைத் தொடர்ந்து 20ஆவது திருத்தமாக தேர்தல் சீர்திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு பெரும்பான்மையின இரு பிரதான கட்சிகளும் முனைப்பாக உள்ளன.

குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனத்தின் துணையாலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது என்பதை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மை சக்திகள், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஆகவே அதற்காகவே சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் குறைப்பை ஏற்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை மாற்றத்தை முன்மொழிந்துள்ளனர். இதனை ஒருபோதும் அனுமதிக்ககூடாது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் வாழ் தமிழ்மொழி பேசும் மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்ககூடாது.

தேர்தலொன்று அறிவிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படும் நிலையில், எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிராகரிக்கப்பட்டவையாகவே இருக்கையில் தேர்தலை வெற்றி கொள்வதற்கான சகல வியூகங்களையும் கொண்ட செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருப்பதால், நாம் மேற்கண்டவாறு பரிசீலனை செய்யும் நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்' என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com