Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் மயூரன் உட்பட 8 பேரின் மரண தண்டனை நிறைவேற்றம்!

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்ளிட்ட 8 பேரின் மரண தண்டனை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில் போதைப்பொருட்கள் கடத்தல் என்பது கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றைவிட கொடிய குற்றமாக கருதப்படுகிறது. அங்கு போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி 8.3 கிலோ ஹெராயின் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ சான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்களின் நாட்டு தூதரகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தன. குற்றவாளிகள் ஆன்ட்ரூ சான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்தது. அதை இந்தோனேசிய அரசு நிராகரித்தது. போதை பொருள் கடத்தலால் நாட்டில் குற்றங்கள் பெருகி நாட்டுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி ஜனாதிபதி ஜோகோ விடோடோ அவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இதை தொடர்ந்து, அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசு எடுத்தது. தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட நுசகம்பன்கன் தீவு சிறைக்கு கடந்த மாதம் 4 ஆம் தேதி மாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரையும் மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்களது நாடுகள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகள் பலவும் வலியுறுத்தி வந்தன. ஐ.நா. சபையும் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது.

ஆனால், எல்லா வேண்டுகோள்களையும் நிராகரித்து 9 பேரின் மரண தண்டனையும் (நேற்று) 28 ஆம் தேதி நிறைவேற்றப்படும் என இந்தோனேசியா அரசு அறிவித்தது. இது தொடர்பாக 9 கைதிகளுக்கும் 72 மணி நேர நோட்டீசும் அளிக்கப்பட்டது. அவர்களது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறை நிர்வாகம் முழுவீச்சில் செய்து வந்தது.

உடல்களை வைத்து எடுத்துச் செல்வதற்கு பளபளக்கும் துணியால் அலங்கரிக்கப்பட்ட 9 சவப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக கைதிகள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரை கடைசியாக சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

குறிப்பாக, மயூரன் சுகுமாறனின் தாயார் ராஜனி, தந்தை சுகுமாறன், சகோதரி பிருந்தா, சகோதரர் மைக்கேல் ஆகியோரும், ஆண்ட்ரூ சானின் புதுமனைவி பெபி ஹீயர்விலா மற்றும் குடும்பத்தினர் நேற்று நுசகம்பன்கன் சிறைக்கு வந்தனர். அவர்கள் அழுதவாறே வந்தனர். இதில், மயூரன் சுகுமாறனின் சகோதரி பிருந்தா மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டது. அவர் தூக்கிச்செல்லப்பட்டார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் சிறை அறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர். இதையடுத்து, மெல்போர்ன் பாதிரியார் கிறிஸ்டி பக்கிங்காம், மதபோதகர் டேவ் சோபர் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி தேற்றினர். அதைத் தொடர்ந்து 9 பேரின் தண்டனையை நிறைவேற்ற சிறைக்கு அருகேயுள்ள காடு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அங்கு தண்டனையை நிறைவேற்ற பயிற்சி பெற்ற 12 போலீசார் தோட்டாக்கள் நிறப்பிய துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.

நேற்று நள்ளிரவு தண்டனையை நிறைவேற்றுவதற்கான சமிக்ஞை கிடைத்தவுடன், போலீஸ் படையினரால் மரண தண்டனை கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. மருத்துவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரிசோதித்து அவர்களது உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்துள்ளனர். இதில், பெண் கைதியான வெலோசா தவிர மற்ற 8 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன் பிறகு அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

இதில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்னும் பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. போதைமருந்தை கடத்துவதற்கு மேரி ஜேன் வெலொசோவை தான் பயன்படுத்திக் கொண்டதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல் நிலையத்தில் சரணடைந்தை தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

MOST READ
COMMENTED

வரதட்சணை பெற்றவரை பாராட்டிய ஊர்மக்கள்!
மிரட்டல் ஃபீல்டிங்: சென்னை அபார வெற்றி!
நாளை காலை அவர்கள் இருக்க மாட்டார்கள்!
சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி!
ஒரு காக்கி சட்டையின் மனித நேயம்!

Advertisement
வாக்களிக்கலாம் வாங்க...
பவானி சிங்கை நீக்கி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் ஜெயலலிதாவுக்கு பின்னடைவா?
ஆம்
இல்லை
இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com