Contact us at: sooddram@gmail.com

 

நேபாள பூகம்பம்: உயிர்ப் பலி 10,000ஐ எட்டும் அச்சம்

நேபாளத்தை தாக்கிய பயங்கர பூகம்பத்திற்கு பின்னர் அங்கு யுத்த கால அடிப்படையில் மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதாக குறிப்பிட்டிருக்கும் அந்நாட்டு பிரதமர் சு'pல் கொய்ராலா உயிர்ப் பலி 10,000ஐ எட்டும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார். "அரசு யுத்த கால அடிப்படையில் தன்னால் முடியுமானவரை மீட்பு, நிவாரணங்களை முன்னெடுக் கிறது" என்று ராய்ட்டருக்கு குறிப்பிட்ட கொய்ராலா, "இது நேபாளத்தின் சிக்கலான மற்றும் சவாலான காலம்" என்று தெரிவித்தார். 28 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இமய மலை நாடான நேபாளத்திற்கு சர்வதேச உதவி கள் வர ஆரம்பித்துள்ளன. கடந்த சனிக்கிழமை ரிச்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான பூகம்பம் தாக்கி நான்கு தினங்களை கடந்த போதும் நிவாரணப்பணிகள் மந்தமாகவே இடம்பெற்று வரு கிறது. பூகம்பத்தால் 8 மில்லியன் பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது.

இது நேபாள மக்கள் தொகையில் கால்பங்கினராவர். தவிர 1.4 மில்லியம் பேருக்கு உணவு தேவைப்படு வதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

பூகம்பத்தால் பலியானோர் எண்ணிக்கை 4,310 ஆக உயர்ந்திருப்பதோடு மேலும் 10,000 பேர் காயமடைந்திருப்பதாக நேபாள உள்துறை அமைச்சை மேற்கோள் காட்டி செய்தி வெளியா கியுள்ளது. "பூகம்பம் தாக்கிய பின்தங்கிய கிரா மப் பகுதிகளில் இருந்து இன்னும் தகவல் கிடைக் காத நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 வரை உயர வாய்ப்பு உள்ளது" என்று கொய்ராலா கூறினார்.

81 ஆண்டுகளில் நேபாளத்தை தாக்கிய இந்த மோசமான பூகம்பம் காரணமாக எவரெஸ் மலை யில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேறிகள் மற்றும் வழிகாட்டிகள் என்று 18 பேர் கொல்லப் பட்டனர். இவர்களில் நான்கு வெளிநாட்டினர் அடங்கு கின்றனர். உலகின் உயர்ந்த மலையில் ஏற்பட்ட மோசமான அனர்த்தமாகவும் இது பதிவானது.

இந்த அனர்த்தத்தை அடுத்து எவரெஸ் மலை யடிவார முகாம்களில் சிக்கியிருந்த அனைவரும் ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பூகம்பத்திற்கு பின்னர் தொடர்ந்து இடம்பெற்று வரும் பின்னதிர்வுகளால் மேலும் பாதிப்புகள் ஏற் பட்டிருப்பதோடு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் கத்மண்டு நகரில் வீடுகளில் உறங்கு வதற்கு அச்சமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வீதிகளில் படுத்து உறங்கினர். இதுவரை, 55 முறை சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர், உணவு, மின்சாரம் போன்றவற்றுக் குப் பற்றாக்குறை நிலவுகிறது. தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

"ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படியும், இந்த பு+கம் பம் குறித்த சமீபத்திய விவரங்களின்படியும் 80 லட்சம் பேரும் 39 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டி ருக்கின்றன. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள்" என ஐக்கிய நாடுகள் சபையின் உறைவிட ஒருங்கிணைப்பாளரின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட நேபாளத்தின் முழு இராணுவமும் பொலிஸாரும் தேடுதல் பணியிலும் மீட்புப் பணி யிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் நடந்து 50 மணி நேரத்திற்குப் பின்னரும் இடிபாடுகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டுவருகின்றனர்.

அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனை களை அணுகிவருவதால், மருத்துவர்கள் திணறி வருகின்றனர். போர்வைகள், ஹெலிகொப்டர்கள், மருத்துவர்கள், ஓட்டுனர்கள் போன்றவற்றுக்குப் பெரும் தேவை இருப்பதாக நேபாள அரசு கூறி யுள்ளது.

"எங்களுக்கு மருத்துவ அணிகளையும் சிறப்பு நிவாரணப் பொருட்களையும் அளித்து உதவ வேண்டுமென வெளிநாடுகளைக் கேட்டுக்கொள் கிறோம். இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட, வெளிநாட்டினரின் நிபுணத்துவம் எங்களுக்குத் தேவைப்படுகிறது" என அந்நாட்டின் முதன்மைச் செயலர் லீலா மணி படேல் தெரிவித்துள்ளார்.

மேசமான காலநிலை, நிலச்சரிவு போன்றவை நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள் ளது. இதனால் பல மலைப்பிராந்திய கிராமங்க ளின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. பு+கம்பம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகில் உள்ள கொர்கா மாவட்டத்தை முதலில் சென்றடைந்திருக்கும் மருத்துவ குழுவை சேர்ந்த அமெரிக்க மருத்துவர் ரொபெக்கா மக்டீர், அங்குள்ள 90 வீதமான வீடுகள் தரைமட்டமாக் கப்பட்டுள்ளதாக விபரித்தார். குறித்த பகுதியில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் வேலைக் காக வெளியேறி இருக்கும் சூழலில் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களே எஞ்சியிருப்பதாக குறிப்பிட்டார்.

நேபாளத்தில், சர்வதேச தரத்திலான ஒரே ஒரு விமான நிலையமே உள்ளது. கத்மண்டுவில் உள்ள அந்த விமான நிலையத்தில், வெளிநாடு களைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தி யாவசிய தேவைகள் கிடைக்கவில்லை. விமான நிலையத்தில் பதற்றமான சு+ழல் நிலவுகிறது. பெண் கள் மற்றும் குழந்தைகளை முதலில் அழைத்துச் செல்வதற்கு மீட்பு குழுவினர் முன்னுரிமை அளிக் கின்றனர்.

அரசின் உதவிகள் மந்தமாக உள்ள நிலை யில் தலைநகர் கத்மண்டுவில் இளைஞர்கள் பாதிக் கப்பட்டவர்களினது உறவினர்கள் கட்டட இடிபாடு களை தாமே அகற்றி வருகின்றனர். "உதவிக் காக காத்திருந்து கவலையை அதிகரித்துக் கொள்வதை விடவும் நாமே இதனைச் செய்வது மேலானதாகும்" தனது வரலாற்று பிரசித்திபெற்ற தரஹாரா கோபுர இடிபாடுகளில் தனது சகோதரர் மற்றும் மைத்துனியின் உடல்களை தேடிவரும் பிரதீப் சுப்பா குறிப்பிட்டார். 19 ஆம் நூற்றாண் டின் இந்த கோபுரம் தரைமட்டமாகும்போது அதற்கு பலரும் இருந்துள்ளனர்.

தலைநகரின் மற்றுமொரு பகுதியில் பண்டைய தேவாலயம் ஒன்றை சூழவுள்ள பகுதியில் இளை ஞர்கள் வெறுங்கைகளால் கட்டட இடிபாடுகளை அகற்றிவரும்போது அருகில் பொலிஸார் அதனை கண்காணித்து வருகின்றனர். எனினும் நேற்று பின் னேரமும் கடும் மழை பெய்ததால் மீட்பு பணிகள் தடைப்பட்டன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com