Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் தளபதிகள் சரணடைவது தொடர்பில் யாரும் தொடர்புகொள்ளவில்லை - கோத்தபாய

யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் புலிகளின் தளபதிகள் சரணடைவது தொடர்பில் என்னுடன் யாரும் தொடர்பு கொள்ள வில்லை. இயற்கைக்கு ஒவ்வாத வகையில் போலிக் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தும் அடிப்படை தன்மையற்ற நிழல் சாட்சியங்களை முன்வைத்தும் "சனல் 4' தொலைக் காட்சியும் சர்வதேசமும் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார். இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள முகாம்களில் புலி உறுப்பினர்கள் தஞ்சமடை ந்துள்ளனர். ஆனால், அந்த நாடுகள் அவர்களின் பெயர் விபரங்களை தரமறுக்கின்றன. இதனால், புலம்பெயர்ந்து தமிழர்களுடன் இணைந்து புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக போலி பிரசாரங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான நடவடிக்கைகள் உண்மை பகுப்பாய்வு என்ற தலைப்பிலான அறிக்கையை நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டது. ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 30 ஆண்டு கால கொடூரமான பயங்கரவாதத்தை இலங்கை இராணுவம் மிகவும் தியாகபூர்வமாக செயற்பட்டு முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.
இனப் பிரச்சினைகளுக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இராணுவ ரீதியில் அல்லாது பல பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வையெட்ட புலிகளுக்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. போர் நிறுத்த ஒப்பந்தம், சமாதானப் பேச்சுவார்த்தை என பல சந்தர்ப்பங்கள் அரசாங்கத்தினால் சர்வதேசத்தின் பங்களிப்புடன் முன் வைக்கப்பட்டன.

ஆனால் புலிகள் சமாதானத்தை விரும்பவில்லை. குறிப்பாக 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை புலிகள் உதாசீனம் செய்து இக்காலப் பகுதியில் இராணுவ உயர் நிலை அதிகாரிகள் தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பொது மக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். அது மட்டுமன்றி அக்காலப் பகுதியில் புலிகள் தனது ஆள் பலத்தையும் ஆயுதப் பலத்தையும் அதிகரித்துக் கொண்டு பேச்சு வார்த்தைகளை சீர்குலைத்து வந்தனர்.

அரசாங்கம் 2006 ஆம் ஆண்டில் புலிகளை தாக்குதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்த போதிலும் ஆயுதத்தை நம்பி பேச்சுக்களை புறக்கணித்தது மட்டுமன்றி மாவிலாறு அணைக்கட்டை மூடி மூவின மக்களையும் பாதிப்படைய வைத்தனர். இதனால் பொறுமையிழந்த அரசு மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்து வடக்கு மற்றும் கிழக்கை மீட்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியது.

வடக்கு கிழக்கு நிலப்பரப்பையும் அங்கு வாழ்ந்த அப்பாவி தமிழ் மக்களையும் மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்டு அதில் வெற்றி கண்ட மனிதாபிமான நடவடிக்கையையே இன்று சனல் 4 உட்பட சர்வதேசம் குறை கூறி வருகின்றன. இதற்கு பிரதான காரணமாக அமைந்தது புலம் பெயர் தமிழர்களும், அவர்களுடன் இணைந்துள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்புமே ஆகும்.

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் காலப் பகுதியில் பெரும் தொகையான மக்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக வழிநடத்தப்பட்டார்கள். அதுமட்டுமன்றி 11 ஆயிரம் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களுள் 595 பேர் சிறுவர் போராளிகளாகவும் 6100 பேர் வயது முதிர்ந்த போராளிகளாகவும் காணப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அத்தோடு புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெற்றோர்கள், சூசை மற்றும், தமிழ் செல்வனின் மனைவி, பிள்ளைகள் உட்பட தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை அரசு பராமரித்து வருகின்றது. இவ்வாறான மனிதாபிமான செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்காது சர்வதேசம் குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்?

40 ஆயிரம் சிவிலியன்கள் மனிதாபிமான நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இத்தரவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை உறுதியுடன் கூற முடியும். யுத்தத்தைக் காரணம் காட்டி பலர் வடக்கு கிழக்கில் இருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களுடன் புலிகளும் ஊடுருவிச் சென்றனர். இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, சைபிரஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள முகாம்களில் இவர்களும் பெரும்பாலானோர்கள் உள்ளனர். இவர்களின் தரவுகளை குறிப்பாக சில நாடுகள் இலங்கைக்கு வழங்க மறுக்கின்றன.

எவ்வாறாயினும் சரணடைந்த புலி போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இது மட்டுமன்றி யுத்தத்தில் இறுதிக் காலப்பகுதியில் பாரிய போர் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன எனக் கூறி சர்வதேசம் குற்றம் சுமத்துகையில் அதற்கு சாதகமாக சனல் 4 வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் போலியானதும் உண்மைகளை மறைத்து தேவைக்காக போலி குற்றச்சாட்டுகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது.

சரணடைவது தொடர்பில் புலி தளபதிகள் பாதுகாப்புச் செயலாளர்கள் என்ற வகையில் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. சரணடைந்தவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளார்கள். மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் காலப்பகுதியிலும் வடக்கிற்கு உணவு, மருந்து வகைகள் உட்பட அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் இலங்கை அரசு அப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இதனையும் மறைத்து சனல் 4 ஒளிபரப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. எந்த வகையிலும் சனல் 4 போலி ஒளிபரப்புக்களிலிருந்து தப்பி விட முடியாது என்றார்.
___

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com