Contact us at: sooddram@gmail.com

 

பிரதேச செயலகங்களையும் உள்ளுராட்சி சபைகளையும் உருவாக்க தமிழ் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் - இரா.துரைரெட்ணம(பத்மநாப ஈ.பி.ஆர்.எல்.எப்).

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உள்ளுராட்சி சபையை உருவாக்குதல் தொடர்பாகவும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை தமிழ் பிரிவு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகவும் அதற்கான உள்ளுராட்சி சபையையும் உருவாக்குதல் தொடர்பாகவும் பல காலமாக பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசுடன் சேர்ந்த தமிழ் அமைச்சர்கள் அபிவிருத்தியோடு எமது உரிமையையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என பிரதேச செயலகங்களையும் உள்ளுராட்சி சபைகளையும் உருவாக்க தமிழ் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தலைப்பில் மீள் குடியெற்ற பிரதி அமைச்சருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள அக் கடிதத்தில் நீண்ட காலமாக பாரம்பரிய தமிழர் பகுதி திட்டமிட்டு அபகரிக்கப்படுவதனையும் தமிழர் வணக்கத்தலங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவந்துள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.அக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

1989 ஆம் ஆண்டு கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு 23 வருடங்களாக காணி ,நிதி மற்றும் ஏனைய அதிகாரங்கள் வழங்கப்படாமல் இன்று வரைசெயல்படுகின்றது.

3-12-2005ஆம் ஆண்டு கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்கு (கோரளைபற்று தெற்கு) தனியான பிரதேசசபை உருவாக்குவதற்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சு பிரதேசசெயலாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டும் இன்று வரையும் அது உருவாக்கப்படவில்லை.

30 வருடங்களுக்கு மேலாக தமிழ் பிரதேசங்களில் இயங்கிய மத்தியஅரசு, மாகாணசபைகளினது நிர்வாகம், அபிவிருத்தி, உள்ளுராட்சி போன்ற செயல்பாடுகளில் அக்கறை இல்லாதவர்களாகவும் (அக்கறை இருந்தாலும் கூட) தமிழ் மக்களுக்கு அவசியமானதாக உணரப்பட்ட புதிய பிரதேச செயலகங்களையும், உள்ளுராட்சி சபைகளையும் உருவாக்கக் கூடிய அரசியல்பலம் அற்றவர்களாகவும் தமிழ் அரசியல் தலைவர்கள் காணப்பட்டனர்.

இந்நிலைமைகளை மத்திய அரசும் அதன் அடிவருடிகளும் சாதகமாகப்பயன்படுத்தி தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை சூழச்சியானமுறையில் அபகரித்துக்கொண்டனர்.

புனிதத்தலங்கள் அழிப்பு கல்முனைகுடி பிரதானவீதியில் (முன்னாள் எம்-பி சம்சுதீன் அவர்களின் வீட்டிற்கருகில்) இருந்த பறையர் கோயில் என்று அழைக்கப்படும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், கல்முனைகுடி சாய்ந்தமருது சாகிறா கல்லூரிக்கு போகும் சந்தியில் இருந்த பெரியபிள்ளையார் கோயில ,மீனோடை கட்டுக் கோயில், ஓட்டமாவடி பொதுசந்தை உள்ள இடத்தில் இருந்த பிள்ளையார் கோயில்,என்பன இருந்தஇடமும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.

தொடர்சியான நிலப்பிரதேசம் பறிக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒட்டமாவடி பாலத்திலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வீதியில் இருமருங்கிலும் இருந்த தியாவெட்டுவான், மைலங்கரச்சி, நாவலடிசந்தி ஆகிய தொடற்சியான பாரம்பரிய தமிழ் கிராமங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் மீனோடைகட்டு மடத்தடி ஒலிவில் அட்டப்பள்ளம் திராய்மடு, ஆகிய தமிழர்கள் இருந்த கிராமங்களில் குறிப்பிடத்தக்க அளவு நிலப்பிரதேசங்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சமுகத்திற்கு காணி இல்லாத பட்சத்தில் அதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது முறைமையும் அவர்களின் உரிமையும் ஆகும் அதைவிடுத்து இன்னோர் இனத்தின் பாரம்பரிய வாழ்விடங்களை அபகரிப்பது அடாத்தான செயலாகும்.

ஆகவே தமிழர் அல்லாத பகுதிகளுக்கு அதிகமான அரச வளங்களையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி இனங்களை பாதிக்கும் வகையில் செயல்படுவதை தடுப்பதற்கும் பிரதேச நிர்வாகங்களை அதிகாரம் உள்ளவையாக மாற்றி ஏனைய இனங்கள் பாதிக்கப்படாமல் நிர்வகிப்பதற்கும் புதிய பிரதேச செயலகங்களையும் உள்ளுராட்சி சபைகளையும் உருவாக்குவதற்கும் அரசுடன் சேர்ந்த மாகாண முதலமைச்சர் தொடக்கம் மத்திய பிரதி அமைச்சர்கள் வரையும் எதிர்கட்சி;,ஆளும் கட்சி என்ற பேதம் இல்லாமல் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்வருதல் வேண்டும்.

இதேவேளை அரசுடன் சேர்ந்த தமிழ் அமைச்சர்கள் அபிவிருத்தியோடு எமது உரிமையையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
..

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com