Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசு காலம் கடத்தவில்லை

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் கையளிப்பு
 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு தன்னுடைய அறிக்கையை 6 மாதங்களுக்குள் சபாநாயகரின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமென்று பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை கொழும்பில் நேற்று சந்தித்து உரையாடிய அவர் இவ்வாறு கூறினார்.அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை காலதாமதப்படுத்துவதற்காகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அதனை அனுப்புவதாக அறிவித்து ள்ளதென்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் ஆதாரமற்றது என்பது நிரூபணமாகுமென்றும் அவர் சொன்னார். இலங்கையின் அரசியல் சாசனம் சகல உரிமைகளையும் இந்நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கிறதென்று தெரிவித்த அமைச்சர், அதிலுள்ள முக்கிய அம்சங்களை அமுலாக்குவதில் சில காலதாமதங்கள் ஏற்படுவது ஏதோ உண்மைதான் என்று சொன்னார்.

அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இந்நாட்டு மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தை பெறக்கூடிய வகையிலான ஒரு நிரந்தர சமாதான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார். ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்தவுடன் எல். ரி. ரி. ஈயுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்தார். ஆயினும், எல். ரி. ரி. ஈயினர் பல்வகையான போலிக் காரணங்களை எடுத்துக் காட்டி அந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்கு முட்டுக்கட்டைகளை விதித்தனர் என்றும் அமைச்சர் கூறினார். மீள்குடியேற்றம் இடம்பெயர்ந்த மக்களில் 1 இலட்சத்து 14ஆயிரம் பேர் அரசாங்கத்தினால் இதுவரை வடபகுதியில் மீள் குடியேற்றப்ப ட்டிருக்கிறார்கள். டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள் குடியேற்றப் படாதுள்ள அனைவரும் மீள்குடியேற்றப் படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இதுவரை மீள் குடியேற்றப்பட்ட மக்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குமாறு தினகரன் பிரதம ஆசிரியர் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப அமைச்சர் இது பற்றிய விளக்கமொன்றை அளித்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்த தகவல்கள் வருமாறு, ஃ உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். இவர்களில் ஒருசாரார் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் நாம் இனங்கண்டுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2009 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று முதல் தடவையாக மக்களை மீள் குடியேற்றும் திட்டத்தை ஆரம்பித்தது. கட்டுக்கரைக் குளம் மற்றும் சிலாபத்துறை பிரதேசத்தில் எல். ரி. ரி. ஈயினரால் புதைக்கப்பட்ட தரைக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் அங்கு ஒரு பகுதி முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட்டனர்.அப்பகுதியில் இருந்த தரைக்கண்ணி வெடிகளை வெளியேற்றுவதற்காக குறைஷியா, சொவிட்லானியா ஆகிய நாடுகளில் இருந்து தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் நாம் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினோம். இன்று உலகநாடுகளில் இலங்கையில் மாத்திரமே தரைக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான அதிகளவிலான இயந்திரங்கள் இருக்கின்றன. இவற்றின் உதவியினால் தான் இன்று தரைக்கண்ணி வெடிகளை அகற்றி மக்களை காலதாமதமின்றி அரசாங்கத்தினால் மீள் குடியேற்றக்கூடியதாக இருக்கின்றது.இன்று இரண்டு பிரதேச சபையின் எல்லைகளிலும் சில கிராம சேவகர் பிரிவுகளிலும் +>!ிஜி மூதுப்படுவ பந்துல, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் மாத்திரமே மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

50,000 வீடுகளில் 1000 வீடுகள் பூர்த்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியா சென்று பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடத்தியதை அடுத்து இந்திய அரசாங்கம் இலங்கையில் குடிபெயர்ந்த மக்களை மீள்குடியேற்று வதற்காக 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்வந்தது. அதனடிப்படையில், பரீட்சார்த்த அடிப்படையில் 1000 வீடுகளை மீள்குடியேறும் மக்களுக்காக இந்திய அரசாங்கம் தானே தெரிவு செய்யும் கொந்தராத்துக்காரர்கள் மூலம் இவ்வீடுகளை நிர்மாணிக்க உள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 250 வீடுகளையும் யாழ்ப்பாணத்தில் 150 வீடுகளையும், வவுனியாவில் 175 வீடுகளையும் மன்னாரில் 175 வீடுகளையும், முல்லைத்தீவில் 150 வீடுகளையும் நிர்மாணிக்கும் என்றும் இந்த நிர்மாண வேலைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என்றும் கூறினார்.

இத்துடன் கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரம் வீடுகளையும் மலையகத்தில் மேலும் 4 ஆயிரம் வீடுகளையும் இந்திய அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுக்குமென்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வீடுகளை அமைக்கும் இரண்டாவது திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் கூரைகள் சேதமடைந்த 4,500 வீடுகளின் கூரைகளை அவற்றின் உரிமையாளர்களே திருத்துவதற்காக அரசாங்கம் இந்தியா வழங்கும் நிதி உதவியை இவர்களுக்கு பெற்றுக் கொடுக்குமென்றும் தெரிவித்தார். இந்தத் தொகை காலப்போக்கில் 6 ஆயிரம் வீடுகளாக அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறினார்.

வடக்கு ஜீவனோபாயம்

வடபகுதி மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்து வருகிறதென்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ விவசாயத் துறை, மீன்பிடித்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதுடன் இவற்றின் மூலம் கிடைக்கும் விளைச்சல் மூலம் சிறந்த இலாபம் அடைவதற்கும் அரசாங்கம் சந்தைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து வருவதாகவும் கூறினார்.

தென்னஞ் செய்கை, பனைச் செய்கை, மரமுந்திரிகை ஆகியவற்றிற்கும் அரசாங்கம் உரப்பசளை போன்ற சகலவிதமான உதவிகளையும் மானிய அடிப்படையில் செய்து வருகிறது. நுவரெலியாவில் உருளைக்கிழங்கு அறுவடை நடக்கும் காலத்தில் அரசாங்கம் உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு மேலதிக தீர்வையை விதித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளித்தது.

அது போன்று, வட இலங்கையில் வெங்காய அறுவடையின் போது ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு தீர்வை விதித்து வடபகுதி விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமன்றி இவர்களின் விலை பொருட்களை தம்புள்ள காய்கறி விற்பனை நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பதில் கொழும்பில் பேலியகொடைக்கு அருகில் சந்தைப்படுத்துவதற்கும் வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

கடலட்டைகளை இனவிருத்தி செய்வதற்கும் முத்து, சிப்பிகள், கடல் பாசியை ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கும் பாரிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு இப்போது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்றார்.

வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாலை அப்பிரதேச மக்களுக்கு விற்பனை செய்வதற்கும், கோழிப் பண்ணைகள், ஆட்டுப்பட்டிகளை விருத்தி செய்வதற்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் கடனுதவி செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடலிலுள்ள உவர் நீர் தரைக்கு வருவதை தடுப்பதற்காக 12 அணைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் நன்னீரை சேமிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

வடபகுதியில் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெருமுயற்சியில் கிளிநொச்சியில் பாரிய சர்வதேச விளையாட்டரங்கொன்று நிர்மாணித்து வருவதாகவும் இதன் மூலம் சகல விளையாட்டுகளையும் மேம்படுத்த முடியும். இதற்காக விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தடவை வடபகுதி மெய்வல்லுநர்கள் தேசிய மெய்வல்லுநர் போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றும் ஆளுநர் சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

வடபகுதியின் கபடி அணி அகில இலங்கை ரீதியிலான கபடிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

தமிழுக்கும் சிங்களத்துக்கும் அரசு முன்னுரிமை

அரசாங்கம் சர்வதேச மொழியான ஆங்கிலத்தை புறக்கணிக்காவிட்டாலும் தமிழ் சிங்கள மொழிப் பிரயோகத்திற்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. அதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய வேலைப் பளுவையும் பொருட்படுத்தாமல் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி சிங்கள மொழியில் மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் பொதுமேடைகளில் பேசும் நற்பண்பை கடைப்பிடித்து வருகிறார் எனவும் அமைச்சர் பசில் கூறினார்.

எனக்கு யாராவது தமிழ் பேசினால் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தமிழ் பேசுவதில் சற்று சங்கடப்படுகிறேன் அதனால் உங்களுடன் சிங்கள மொழியில் பேசுகிறேன் என்று கூறினார்.

ஜனாதிபதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் அனைத்தும் தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்க வேண்டுமென்ற கட்டாய நடைமுறையை இப்போது செயற்படுத்தி வருகிறார். எவ்வளவு அவசரமான அமைச்சரவை பிரேரணையாக இருந்தாலும் அதற்கு தமிழ், சிங்கள மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென்று ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com