Contact us at: sooddram@gmail.com

 

மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

மலையக பெருந்தோட்டப் பகுதிகளை பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கிவரும் மர்ம மனிதர்களினால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக இரத்தினபுரி, காவத்தை, பதுளை, மாத்தளை போன்ற பெருந்தோட்டப் பகுதிகளில் மர்ம மனிதனின் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன. தற்போது மலையகம் முழுவதிலும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் பெரும் அச்சுறுத்தலான சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறிப்பிட்ட ஒரு குழுவினரால் செயற்படுத்தப்பட்டு வருகின்றதா அல்லது திட்டமிட்ட சதி முயற்சியா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். மர்ம மனிதர்களின் அச்சம் காரணமாக ஒருநேர உணவைக்கூட நிம்மதியாக உட்கொள்ள முடியாத நிலைக்கு பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் பெண் தொழிலாளர்கள் அச்சமான சூழலில் எவ்வாறு கொழுந்து பறிப்பதென்று அங்கலாய்க்கின்றனர்.

மர்ம மனிதர்களின் செயற்பாடுகளினால் பலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தல் காரணமாக மலையகத்தில் நகரப்புறக் கடைகள் நேரகாலத்துடன் மூடப்படுவதாகவும் 6 மணிக்கு மேல் நடமாட்டத்தை மக்கள் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருசிலர் வதந்திகளை பரப்புவதனாலேயே இத்தகைய பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெற்றுவரும் வேளையில் மர்ம மனிதனின் செயற்பாடுகள் மாணவர்களை சுமுகமான நிலையில் பரீட்சைக்குத் தோற்றமுடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் தனியாக அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கம்பளை ஆண்டியாகடவத்தைப் பகுதியில் நேற்று முன்தினமிரவு மர்மமனிதர்களால் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் 28 வயது பெண்ணொருவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பெண் நேற்று முன்தினமிரவு 8 மணியளவில் மலசலகூடத்துக்கு செல்வதற்காக வீட்டுக்கு வெளியே சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது குறித்த பெண் கூச்சலிட்டதையடுத்து மேற்படி மர்மமனிதர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கம்பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் நிம்மதியிழந்துள்ள தொழிலாளர்கள்

இதேவேளை நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உள்ள பம்பரகலை, நேஸ்பி, மூன்பிலேன், ஸ்கிராப், மகாஸ்தோட்டம் உட்பட இப்பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிம்மதி இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இரவு 7 மணிக்கு மேல் வீட்டில் இருப்பதற்கு கூட அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக இப்பகுதியிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் மர்ம மனிதர்களின் அச்சுறுத்தலால் இரவில் தூங்காமல் விடியும் வரை காவல் காத்து வருகின்றனர்.

இதேவேளை, நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்டோ ஒன்றின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு வீட்டுக் கதவுகளையும் தட்டியுள்ளார்கள். மக்கள் அச்சத்தால் சத்தமிட்டதுடன் தொழிலாளர் ஒன்று சேர்ந்து பிடிக்க முற்பட்டபோது தோட்டத்திற்கு அருகிலுள்ள காட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். இவ்வாறு நான்கு பேரைக் கண்டதாகவும் இத்தோட்டத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று நுவரெலியா தேஸ்பி தோட்டத்திற்கு சென்ற மர்ம மனிதர்களை பிடிக்க முற்பட்ட இரு இளைஞர்களை காயப்படுத்திவிட்டு அவர்கள் தப்பி ஓடியதாகவும் அத்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவரும் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் உள்ள பொனவிஸ்டா, கலுகெல, கெலேகாலபோன்ற கிராமங்களில் நேற்று முன்தினம் இந்த மர்ம மனிதர்கள் உலவியதாகவும் இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த மர்ம மனிதர்களைக் கண்டுபிடித்து இரவில் உலாவுவதை நிறுத்துவதற்கும் மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கும் அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பிரதேசத்திலுள்ள தோட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மர்மமனிதர்கள் நையப்புடைப்பு

அப்புத்தளை பகுதிக்குட்பட்ட தம்பேதன்னை பெருந்தோட்டத்தில் சந்தேகதத்துக்கிடமான முறையில் நடமாடிய நான்கு இளைஞர்களை தோட்ட இளைஞர்கள் நையப்புடைத்து அவர்களை நேற்று அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கிறீஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் தோட்ட இளைஞர்கள் ஒன்று கூடி இனம்தெரியாத நான்கு இளைஞர்களைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் தீவிர புலன் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டபோது அவ் இளைஞர்கள் காலிப் பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் அப்புத்தளைப் பகுதியின் லிப்டன் சுற்று வட்டத்தை பார்வையிடுதற்காகவே வந்தவர்களென்றும் தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். பிரியங்கர குமார மேற்கொண்டுள்ளார்.

அப்புத்தளை, பண்டாரவளை, வெலிமடை, பதுளை மற்றும் பசறை போன்ற பகுதிகளில் கிறீஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் உலாவுவதாகக் கிடைத்துவரும் தகவல்களையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் பதற்றதுடனும், பீதியுடனும் உள்ளனர். இதனால் மேற்குறிப்பிட்ட தோட்ட மக்கள் வெளியில் நடமாடாது வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் அவல நிலையேற்பட்டுள்ளது. வேறு சிலர் தொழிலுக்கு செல்வதற்கே தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தில் மர்ம மனிதர்கள் உலாவி வருவதாக தொழிலாளர்கள் பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த போதிலும் அம்மர்ம மனிதர்களைப் பிடித்து வந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் படியும் தொழிலாளர்களை பொலிஸார் கேட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் பாதுகாப்பு

தோட்டப் பகுதிகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களை கிறீஸ் மனிதர்கள் அச்சுறுத்தி வருவதாக கூறப்படும் தகவல்களையடுத்து மலையகத்தின் அட்டன், வட்டவல உட்பட பல தோட்டப் பகுதிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி. அம்பன்வெல தெரிவித்தார்.

தோட்டம் ஒன்றில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை கிறிஸ் மனிதன் அச்சுறுத்தியதாகவும் கிறிஸ் மனிதன் ஒருவனை வட்டகல பிரதேசத்தில் இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தோட்டப் பகுதிகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களை பாதுகாக்கும் பொருட்டும் கிறிஸ் மனிதனை கண்டு பிடிக்கும் வகையில் தோட்டப் பகுதிகளில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com