Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கும் வரை  ோராட்டம் ஓயாது - ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையி லான அரசு ஓயாது என்று சட்டப் பேரவையில் முதல மைச்சர் ஜெயலலிதா தெரி வித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங் களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலி யுறுத்த வேண்டும் என்று சட்டப் பேரவையில் இயற் றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்த பய ராஜபக்ஷே விமர்சித் ததைக் கண்டித்து வியாழ னன்று (ஆக.11) கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து அவர் பேசிய தாவது:

இலங்கையில் இனப்படு கொலையை நடத்தியவர் களை போர்க் குற்றவாளி கள் என அறிவிக்க மத்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண் டும் என்றும், இது மட்டு மல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக் கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. தமிழ்நாடு சட்டமன் றப் பேரவையில் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகை யில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப் புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே ஹெட் லைன்ஸ் டுடே தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது, இலங்கை அரசு தான் செய்த தவறை நியா யப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இந்தத் தீர் மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்ஷே கூறி யிருக்கிறார். இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை யின் பொதுச் செயலாள ரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கை யின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக நிறைவேற்றப்படவில்லை. சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனை வரும் இலங்கையர் என்ற முறையில்தான் நடத்தப்படு கின்றனர் என்றும், மற்றவர் களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்த பய ராஜபக்ஷே. இது முற்றி லும் உண்மைக்கு புறம்பா னது. இது முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

இலங்கைக் கடல் பகுதி யில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண் டும் என்று தமிழ்நாடு அர சுக்கு அறிவுரை கூறி இருக் கிறார் கோத்தபய ராஜ பக்ஷே. கச்சத்தீவிற்கு இது வரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல் லும் போது, பயண ஆவ ணங்களையோ அல்லது விசா பெற வேண்டும் என் றோ இலங்கை கோராது என்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதை நாடா ளுமன்றத்தில் தெளிவுபடுத் தும் பொருட்டு, இந்திய மீன வர்கள் கச்சத்தீவை சுற்றியு ள்ள பகுதிகளில் சுதந்திர மாக மீன் பிடிக்கலாம் மற் றும் வலைகளை உலர்த்து வதற்கு அந்தத் தீவை பயன் படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந் தத்திற்கு முற்றிலும் முர ணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறு வது, சாத்தான் வேதம் ஓது வது போல் உள்ளது. மேலும், கோத்தபய ராஜபக்ஷே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தான் தற்போ தைய முக்கியப் பணி என் றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார். இலங் கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி யும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வோ பாதிக்கப்பட்ட தமி ழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்த விதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப் படவில்லை. இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவமும் அர சும் போர்க் குற்றம் புரிந் திருக்கிறது என்று மறைமுக மாக ஒப்புக்கொள்ளப்பட் டுள்ளது.

தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர் கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை; அனைத்து குடியுரிமைக ளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளு டன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளா தாரத் தடையை விதிக்க மத் திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட் டப் பேரவை அரசை கேட் டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டப் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கை யும் எடுக்காதது தான் இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச் சலை கோத்தபய ராஜ பக்ஷேவுக்கு அளித்திருக்கி றது என்ற ஐயம் நடுநிலையா ளர்களுக்கு, தமிழ் உணர்வா ளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர் கள் தங்கள் சொந்த இடங் களில் மீண்டும் குடியமர்த் தப்படும் வரை, சிங்களர் களுக்கு இணையான அந் தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது.தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கை களை எனது அரசு எடுக்கும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திற்கு உள் நோக்கம் கற்பிக்கும் வகை யில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப் புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்ட னத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு
ஜெயலலிதா பேசினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com