Contact us at: sooddram@gmail.com

 

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே இரவில் பல்வேறு கோணங்களில் கிறீஸ் மனிதர்கள் (மர்ம மனிதர்கள்) ஊடுருவியமையினால் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரிய நீலாவணை, பொத்துவில் உள்ளிட்ட இடங்களில் கிறீஸ் மனிதன் ஊடுருவியதாக செய்தி பரவியமையை அடுத்தே மேற்படி நிலைமை தோன்றியுள்ளது.

காரைதீவு விஷேட அதிரடிப்படை முகாம் இருந்த வளவுக்குப் பின்னால் உள்ள வயல் பிரதேசத்தில் மர்ம மனிதன் ஒருவன் பதுங்கி இருந்தமையினைக் கண்டு ஊரவர்கள் கூச்சலிட அவன் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளான். இப்பகுதியில் மர்ம மனிதன் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஊரவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தேடுதல் நடத்தியதுடன் இவ்விடயம் அயல் கிராமங்களான நிந்தவூர், மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் கிராமங்களுக்கும் பரவ அங்கிருந்தும் மக்கள் பலர் ஒதுங்கியமையினை அவதானிக்க முடிந்தது.

சம்மாந்துறை கோறக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவரைத் தாக்க முற்பட்ட மர்ம மனிதனை பெண்ணின் கூக்குரலைக் கேட்ட குழுவினர் விரட்டி வந்தபோது சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளவுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்ட செய்தியை அடுத்து சம்மாந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டதுடன் ஏற்பட்ட நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டதால் இதற்கெதிராக டயர்களை எரித்து மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

கல்முனை அல்பஹ்றியா மகா வித்தியாலய எல்லைக்குள் இரண்டு மர்ம மனிதர்களைக் கண்டதாக வெளியான செய்தியை அடுத்து பாடசாலைச் சுற்றி மக்கள் பல்லாயிரக்கணக்கில் சூழ்ந்தும் மர்ம மனிதன் தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசங்களில் மக்கள் பதட்டமடைந்ததுடன் கூர்மையான ஆயுதங்களுடன் வீதிகளில் நடமாடியமையினையும் காண முடிந்தது.

மருதமுனை பெரிய நீலாவணை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற ரீசேட் அணிந்த இரு மர்ம மனிதனை மக்கள் விரட்டிய சம்பவத்தினால் பிரதேசம் முழுவதும் பீதியில் மூழ்கியதுடன் பொல்லுகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் இளைஞர் குழுவினர் தேடுதலில் ஈடுபட்ட போதிலும் எவரும் பிடிபடவில்லை.

அயல் கிராமங்களில் மர்ம மனிதனின் ஊடுருவல் அதிகரித்துள்ள செய்தியையடுத்து துறைநீலாவணையில் ஒலிபெருக்கிகள் மூலம் மக்களைக் கவனமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன் இளைஞர்களின் ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்றது.

பொத்துவில் கிதாயா புரத்தில் இடம்பெற்ற மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான ஒரு பிள்ளையின் தாயார் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து அங்கும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

கிறீஸ் மனிதனின் ஊடுருவல் குறித்து கிராமங்கள் தோறும் செய்திகள் பரவியமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ரமழான் மாதமாக இது இருப்பதனால் இரவு நேரத் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

கிறீஸ் மனிதன் என உச்சரிக்கப்படுகின்ற போதிலும் பெண்களாலும் ஏனையோராலும் அடையாளம் காணப்பட்ட மர்ம மனிதர்களில் பெருமளவிலானோர் கிறீஸ் இல்லாமலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயத்தைப் பயன்படுத்தி சில ஆசாமிகள் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவங்கள் சிலவற்றில் உண்மைத்தன்மை குறைவாக உள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

அரசியல் இலாபத்தினை அடைந்து கொள்ளும் நோக்கிலான திட்டமிடப்பட்ட செயற்பாடே இதுவெனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். எது எவ்வாறிருந்தும் இவ்விடயம் குறித்து இப்பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் குறித்தும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கிறீஸ்
மனிதனின் பெயரால் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதானமாக இருக்குமாறு மத அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com