Contact us at: sooddram@gmail.com

 

ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலமே மக்களுக்கு நன்மைகளை செய்ய முடியும்

ஒரு பக்கத்தில் அவசர காலச் சட்டத்தை நீக்குவதைப் பற்றிப் பேசப்படுகிறது. மறுபக்கத்திலே அவர்களே அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யினராகிய நாம், அவசரகாலச் சட் டத்தை அடிப்படையில் எதிர்க்கின்றோம் என்பதை இந்த அவையிலே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். அவசரகாலச் சட்டத்தை நடைமுறை ரீதியாக நீக்குவதற்காகவே நாங்கள் பாடுபடுகின்றோம். நாட்டிலே நிரந்தர அமைதியும் முழுமையான இயல்புச் சூழலும் உருவாகும்போது இந்த மாதிரியான நெருக்கடிகள் தானாகவே தீர்ந்துவிடும். ஆனால், நாட்டிலே அமைதி நிலை உருவாகுவதைச் சிலர் விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் இன முரணை வளர்த்து, பிரச்சினைகளை உருவாக்கி, அதிலேயே பிழைப்பு நடத்த விரும்புகின்றனர்.

இப்படி அமைதிக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றியும் தீர்வைப் பற்றியும் எப்படி சிந்திக்க முடியும்? இவர்கள், அமைதியைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், மறு பக்கத்தில் அமைதியைச் சீரழிக்கும் விதமாக நடந்து கொள்வார்கள். ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அந்த ஜனநாயகத்துக்கே விரோதமாகச் செயற்படுவார்கள். ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். அப்படிப் பேசிக் கொண்டே ஊடகங்களைத் தவறாக வழிநடத்துவார்கள்.

இதுதான் இந்த நாட்டின் அவல நிலையாகும். இதுதான் இந்த நாட்டை மேலும் மேலும் நெருக் கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றி, நாட்டைச் சீரழிக்கும் மிக மோசமான அரசியலை முன்னெடுப்போர். இன்னும் திருந்தவேயில்லை. இவர்களை மக்கள் இன்னும் அடையாளங் காணாமல் இருப்பதே வேதனைக்குரியது. மக்களை ஏமாற்றும் காரியங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை முற்போக்காகச் சிந்திப்போர் புரிந்து கொள்வர். பெரும்பாலான பத்திரிகைகள் மக்களை முட்டாள்களாக வைத்திருக்கவே விரும்புகின்றன.

அரசியல்வாதிகளுக்கு நிகராகச் சில பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கின்றனர்.

ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. மக்களை அழிவுப் பாதைக்குத் தள்ளக் கூடாது. மக்களுக்குத் துரோகமிழைக்கக் கூடாது.

போருக்குப் பின்னர் உருவாக வேண்டிய நிரந்தரத் தீர்வுக்காகவும் அமைதிக்காகவும் நியாயமான வழிவகைகளைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய பணிகளைச் செய்வதே இந்த நாட்டுக்கு இன்று அவசியமான பணியாக இருக்கிறது.

சில ஊடகங்கள் பல சவால்களின் மத்தியில் இந்தப் பணியைச் செய்து வருகின்றன. அவற்றை நாம் பாராட்ட வேண்டும். அரசியல் என்பது ஆக்கத்தையும் தரும். தவறினால், தவறாக தெரிவுகளைச் செய்தால், அது அழிவையும் தரும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஊடகத்துறை என்பது மகத்தான பணிக்குரிய ஒரு மாண்புடைய துறையாகும்.

ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத பலர் தங்கள் விருப்பங்களையே முதன்மைப்படுத்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கிறார்கள். அப்படிச் செய்வது ஊடகத்துறைக்குச் செய்யும் அநீதியாகும். உண்மை, நடுநிலை, சத்தியம், யதார்த்தம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டே ஊடகங்கள் இயங்க வேண்டும்.

அவசரகாலச் சட்டத்தினால் ஊடக சுதந்திரமும் பாதிக்கப்பட் டுள்ளது. அதேவேளை இந்த அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான காரணங்களைப் பேணுவதில் ஊடகங்களும் பங்காற்றியிருக்கின்றன. அண்மையில்யாழ்ப்பாணத்திலே குகநாதன் என்ற ஒரு மூத்த ஊடக வியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாதவர்களால், இந்தப் பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை நான் கண் டிக்கிறேன். இந்தத் தாக் குதலைச் செய்தவர்களைக் கண்டு பிடித்துச் சட்டத்தின் முன்னே நிறுத்த வேண்டும். இந்தத் தாக்குதலை நடத் தியவர்கள் தனியே குகநாதன் என்ற ஊடகவியலாளரையோ, ஒரு தனி மனிதரையோ மட்டும் தாக்கவில்லை.

அவர்கள் இந்த நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். இயல்பு வாழக்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுடைய நம்பிக்கையின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஊடகச் சுதந்திரத்தின் மீது தாககுதல் செய்திருக்கின்றனர். இந்த நாட்டின் ஜனநாயகத்திற்குச் சவாலாக இருக்கின்றனர். அதாவது, இந்த அரசாங்கத்தின் செயற்பாடு களுக்கும் அரசாங்கம் உருவாக்கி வருகின்ற நன்மையான காரியங்க ளுக்கெல்லாம் எதிராகச் செயற் பட்டிருக்கிறார்கள். ஆகவேதான், அவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன்னே நிறுத்த வேண்டும் என்று கூறுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை தொடர்ச்சியாக இத்தகைய அச் சுறுத்தலுக்குள்ளாகுவதையிட்டு என்னுடைய கவலைகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.

குகநாதன் என்னுடன் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறார். அவர் பணியாற்றும் பத்திரிகை நிறுவனத்தின் விருப்பங்களுக்கு அப்பாலும் அவர் எம்முடன் உறவைக் கொண்டிருந்தவர்.

பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களைப் பற்றி அவர் எம்முடன் மனந்திறந்து பேசியிருக்கிறார்.

அப்படியான ஒருவர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெரும் சிரமங்களின் மத்தியில் உருவாகி வருகின்ற இயல்பு வாழ்வையும் அமைதிச் சூழலையும் கெடுப்போரை நாம் அனுமதிக்கவே முடியாது.

நாங்கள் அமைதிக்காக உழைக்கிறோம். ஜனநாயகச் சூழல் ஒன்றை வலுப் படுத்துவதற்காகப் பாடுபடுகிறோம்.

இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பானது அடுத்த தலைமுறைகளுக்கும் பரிமாறப்படக்கூடாது என்பதே எமது விருப்பமாகும். இதை இங்கே நான் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றேன்.

அவசரகாலச் சட்டமானது ஜனநாயக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் நிச்சயம் இதை நாம் நீக்கியே ஆகவேண்டும். ஆனால், அதற்கான சூழலையும் நாம் உருவாக்க வேண்டும் என்பதே நாம் கவனிக்க வேண்டியது. அமைதியைப் பற்றிக் கதைப்பது முக்கியமானதல்ல.

அமைதிக்காக உழைக்க வேண்டும். தீர்வைப் பற்றிப்பேசிக் கொண்டிருப்பது முக்கியமானதல்ல. தீர்வொன்றைப் பெறுவதற்காக நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் பாடுபட வேண்டும். அப்படியே அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான சூழலையும் நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும். இப்பொழுது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான பிரதி நிதித்துவத்தைக் குறைப்பதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த விடயத்தை நாம் அரசுக்கு உரிய முறையில் புரிந்துகொள்ள வைக்க முயற்சிக்கிறோம்.

வடக்கிலே இன்னும் முழுமையான வளர்ச்சிப் போக்கு எட்டப்படவில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல இந்தப் பகுதிகளின் நிலை மைகளும் வளர்ச்சியடையும் போது இந்த விடயத்தைப் பற்றித் தீர்மா னிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு எடுத்துரைத்துள்ளோம்.

இது விடயத்தில் அரசாங்கம் சில காலத்துக்கு விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். ஒரு முழுமையான இயல்பு நிலை உருவாகும் வரை இந்த மாதிரியான பிரச்சினைகளில் நாம் ஒன்று பட்டு நின்றே செயற்பட வேண் டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பை விடுத்துள்ளார்.

இந்த நாட்டிலே இப்போது தேவைப்படுவதெல்லாம், ஒருங்கிணைந்த செயற்பாடுகளே, ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலமே மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியும். அவற்றின் மூலமே இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

மக்களுடைய மனவுணர்வுகளையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் பொறுப்போடு புரிந்துகொண்டு, அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய மிக முக்கிய கட்டத்தில் இன்று நாங்கள் இருக்கிறோம். ஆனால், இதற்குச் சில அரசியல் சக்திகள் இணங்கி வருவதில்லை. அவர்களுக்கு மக்களுடைய தேவைகளும் மன விருப்பங்களும் என்னவென்று தெரிவதில்லை.

இவர்களைப் பொறுத்தவரையில் சிந்திக்கும் திறனற்ற ஒரு மக்கள் திரளை அரசியல் லாபங்களுக்காக உரு வாக்குவதே நோக்கமாக இருக்கிறது. இதுதான் கடந்த காலங்களிலும் நடந்தது.

கடந்த காலத்தில் மிக மோசமான ஒரு போரை இந்த நாடு சந்தித் திருக்கிறது. இந்த நாடே தாங்கிக்கொள்ள முடியாத அழிவுகளும் அவலங்களும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன.

நடந்த போரினால், இலங்கைத் தீவின் அனைத்துச் சமூகங்களும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. அதிலும், வடக்குக் கிழக்கில் உள்ள மக்கள் மிகக் கொடுமையான அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கின்றனர்.

அந்தப் போரின் காயங்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் இன்னும் மீள முடியாத நிலையில் அந்த மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களை அந்த அவல வாழ்விலிருந்து மீட்டு மீண்டும் இயல்பு வாழ்க் கைக்குக்கொண்டு வர வேண்டிய அவசியப் பணி அனைவருக்கும் உரியதாக இருக்கிறது.

அந்தப் பணிகளைச் செய்வதை விடுத்து, அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதிலும், மக்களுடைய கவனங்களைத் திசை திருப்பும் வகையிலும் செயற்படு கின்றார்கள்.

எல்லாவற்றையும் எதிர்ப்பதன் மூலமாக காலத்தைக் கடத்துவோர் மீண்டும் இலங்கைத் தீவில் அழிவுகளையே ஏற்படுத்த முனைகின்றனர்.

அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான ஆயத்த நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களை முதன்மைப்படுத்தி அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகிறது.

மக்களுக்கு அங்கே நிறைப் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த நாட்டிலே உள்ள ஏனைய மக்களை விடவும் வடக்குக் கிழக்குப் பகுதி மக்களின் பிரச்சினைகள் அதிகமானவையாக இருக்கின்றன. அதிலும் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களின் பிரச்சினைகள் இன்னும் வித்தியாசமானவையாகும்.

ஆகவே அங்குள்ள மக்களின் நலன்களுக்கும் முன்னேற்றத்துக்குமான மறுவாழ்வுப் பணிகளை அரசுடன் இணைந்து நாம் செய்து வருகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கும்போது வன்னியிலே 90 ஆயிரம் மக்கள் மட்டும்தான் இருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார் என்ற கருத்தை முற்றாகவே நான் மறுத்துரைக்கிறேன்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அமைச்சர் டக்ளஸ் அப்படிச் சொல்லவில்லை. வன்னியிலே மூன்றரை இலட்சம் மக்கள் இருக்கின்றனர் எஎன்பதை அன்று நாங்கள் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்லியிருந்தோம்.

போரிலே மக்கள் கொல்லப்பட வில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எப்போதும் கூறவில்லை. அதையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்களும் சில ஊடகங்களுமே திரிபுபடுத்திக் கூறி வருகிaர்கள்.

அன்று போரிலே மக்கள் கொல்லப் படுவதைப் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் எந்தக் கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. அப்போது பாராளுமன்றத்தில் இருந்த 22 பேரும் போரை நிறுத்துவதற்காகவோ, மக்களைப் பாதுகாப்பதற்காகவோ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. மக்களுக்காக நீங்கள் எதுவுமே செய்யவில்லை.

கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றிய பின்னரும் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேசத் தயாராக இருந்தது. சர்வதேச சமூ கம் கூட அமைதியையே வலியு றுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டமைப்பினரா கிய நீங்கள் வாய் திறக்காமலே இருந்தீர்கள். மக்கள் போரிலே சிக்கி யிருந்தபோது நீங்கள் அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக கூட்ட மைப்பில் இருந்த நீங்கள் வெளி நாடுகளுக்குத் தப்பியோடினீர்கள். ஆகையால் மக்களுடைய கொலைக ளுக்கு நீங்களே பொறுப்பாளிகள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண் டும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com