Contact us at: sooddram@gmail.com

 

பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வன்னி மாவட்டத்தில் அதிகரிப்பு

வன்னியில் இறுதி யுத்தக் காலப் பகுதியிலும் அதைத் தொடர்ந்தும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் மோசமானதோர் சூழலைத் தோற்றுவித்து வருவதாக எச்சரிக்கப்படுகின்றது. இடைத்தங்கல் முகாம்களிலும், தடுப்பு முகாம்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் பெண்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் இப்போது சொந்த இடங்களில் தமது குடும்பத்துடன் குடியமர்ந்தும் வருகின்றனர்.

தமக்கு நேர்ந்த கொடுமைகளை கெட்ட கனவாகவே மறந்து விட பெரும்பாலானவர்கள் முற்படுகின்றனர். ஆனால், புறச்சூழல்கள் அதனை அனுமதிக்கவில்லையென்கிறார் சுஹாசினி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) பெண்கள் உரிமைகள் நலன்கள் தொடர்பில் ஆர்வம் காட்டுபவராக அவர் உள்ளார். அவரது கணவரும் தடுப்பிலேயே உள்ளார்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட அவர் மீது ஆறு வருடங்கள் கடந்தும் இதுவரை அரசு வழக்கு எதனையும் தாக்கல் செய்திருக்க வில்லை. கிளிநொச்சியில் தனது பாடசாலைக்கு செல்லும் 16 வயதான மகளுடன் காலம் தள்ளும் சுகாசினி, மகளது எதிர்காலம் தொடர்பில் கவலை கொண்டுள்ளார்.

இவர் போன்றே தனது வயோதிப தாயாருடனேயே வீட்டிற்கு வெளியே வர விரும்பும் மற்றொருவர் சுமதி 27 வயதேயான இவருடைய கணவர் யுத்தத்தில் காணாமல் போயுள்ளார். அடையாளந் தெரியாத தடுப்பி லிருந்து அண்மையிலேயே விடுவிக்கப்பட் டுள்ளார்.

தடுப்பிலும் நடந்தவை பற்றி கதைப்பதற்கு கூட அவர் தயராகவில்லை. அவ்வளவிற்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வெளியாரை எதிர்கொள்ள அவர் பின்னடிக்கின்றார். வீட்டினுள்ளேயே முடங்கி கிடப்பதாக அவரது வயோதிப தாயார் கவலை கொண்டுள்ளார். கழிந்து போன இருண்ட பக்கம் பற்றி தமது மகளிடம் கேட்பதற்கு தனக்கு மனத் துணிச்சல் இல்லையென்கின்றார் வெளிப்படையாகவே.

வன்னி யுத்த நடவடிக்கைகளில் காணாமல் போயுள்ள பெண்களது தொகை பற்றி, எந்தவொரு மாவட்ட செயலகத்திலும் சரியான புள்ளி விபரங்களில்லை. உள்ள விபரங்களைக் கூட பகிர்ந்து கொள்ள அதிகாரிகள் பின்னடிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வருத்தங்களுடன் கடமையிலிருப்பதாக கூறுகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசு வெளியிடும் புள்ளி விபரங்களைத் தவிர, சுயாதீன தகவல்கள் ஏதும் இதுவரை இல்லை.

வன்னியில் யுத்தத்தின் பின்னரும் பெண்கள் மீதான நெருக்குவாரங்கள் குறைந்தபாடில்லை. பெரும்பாலானவர்கள் பெண்கள் மீதே குறை சொல்கின்றார்கள். அதிலும் கணவனை இழந்த அல்லது தடுப்பிலுள்ளவர்களது மனைவிமாரை இலக்கு வைத்தே குற்றச்சாட்டுகள் எழுப்பப் படுகின்றது என்கிறார் பரமேஸ்வரி. மூன்று பிள்ளைகளுடன் தனது வாழ்க்கையை தொட ரும் அவர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். கணவர் பற்றி தகவல்களில்லையென கூறும் அவர் தமது கணவர் படையினரிடம் சரண் அடைந்ததை நேரில் கண்டதாகவும் கூறுகின்றார்.

நான் அறிந்த வகையில் அண்மை நாட்களில் கிளிநொச்சியில் மட்டும் பன்னிரெண்டு குழந் தைகள் முறை தவறிப் பிறந்துள்ளன. அவற்றை பிரசவித்தவர்களுள் மூவர் காணாமல் போயுள்ள முன்னாள் போராளிகளது மனை வியர் என்கிறார் மூத்த ஊடகவியலாளரொ ருவர். ஆனால் நடக்கும் விடயங்கள் சமூகத் துக்கு அபாயமானவை. உண்மை கடண்டறி யப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்கிறார் அவர்.

எல்லாம் இயல்புக்கு திரும்பி விட்டன என அரசு கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்தில் மட்டும் மே மாதம் வரையான முதல் ஐந்து மாதங்களுள் 18 வயதிற்குட்பட்ட 75 பாட சாலை மாணவிகள் முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்திருப்பதாக பிராந்திய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த
வயதிற்கு மேற்பட்டவர்களது முறையற்ற கர்ப் பம் தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளி யாகியிருக்கவில்லை என்பதும் குறிப் பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com