Contact us at: sooddram@gmail.com

 

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பாவனைக்கு

ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக திகழ வேண்டுமென்றால் அந்த நாட்டின் கீழ் கட்டுமான, அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அதிலும் குறிப்பாக பாதை அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானது. இலங்கையில் 2005 ஆம் ஆண்டிற்கு முன்பு நாட்டின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே அபிவிருத்தியின் வாசனை கிட்டியிருந்தது. 2005 ஆம் ஆண்டிற்கு பின்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்பு இந்த நாட்டின் வரலாற்றில் கதைகளாக இருந்து வந்த பாதைகளும், பாலங்களும் நாட்டின் பிரதான பிதேசங்கள் உட்பட சகல பிரதேசங்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

இவ்வாறு நீண்டநாள் திட்டங்களுக்கு மத்தியில் 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த தென் பிராந்திய அதிவேக நெடுஞ்சாலை காணிகளை பொறுப்பேற்றல் மற்றும் நிர்மாணத்திற்கான பணத்தினைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் ஜனாதிபதி பதவியேற்றபின் பின்பு சுமார் பத்து வருடங்களின் பின்பு அவரது ஆலோசனை வழிகாட்டலின் பேரில் கொட்டாவையிலிருந்து மாத்தறை வரையிலான நான்கு லேன்களை கொண்ட பாதையாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொட்டாவையிலிருந்து மாத்தறை வரையான 132 கிலோ மீற்றர் பாதை ஜப்பான் நாட்டு நட்புறவு நிதியத்தின் உதவித் திட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனூடாக வெளிநாடுகளுக்கு மாத்திரமே உரித்தாகவிருந்த அதிவேக நெடுஞ்சாலை எமது நாட்டின் கனவும் நனவாக ஆரம்பித்ததோடு இதற்காக 2000 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு முதல் கட்டமாக காலி வரைக்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சீன நாட்டு ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகியன இத்திட்டத்திற்கு உதவியுள்ளமையும் இதன் விசேட அம்சமாகும்.

இந் நெடுஞ்சாலையின் விசேட அம்சமாவது எல்லா பிரதேசங்களிலிருந்து இப்பாதைக்கு பிரவேசிக்கவும் வெளியேறவும் முடியாது. குறிப்பிட்ட சில பிரதேசங்களிருந்து மாத்திரமே உட்பிரவேசிக்கவும், வெளியேறவும் முடியும்.

தென் பிராந்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு உட்பிரவேசிக்கவென கொட்டாவ, கஹதுடுவ, கெலனிகம, தொடங்கொட, வெலிபென்ன, குருதுகஹா, பத்தேகம, பின்னதூவ, தீகொட, கொக்கமாதூவ மற்றும் கொடகம ஆகிய 11 பிரதேசங்களில் விசேட உட்பிரவேச பாதைகள் பதினொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு ஏழு பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதில் பெந்தோட்டை பெந்தரகங்கைக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 17 மீற்றர் அகலமும் 695 மீற்றர் நீளத்தினையுமுடைய பன்தொட பாலம் இதுவரை இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக நீளமான பாலமாக வரலாறு படைக்கவுள்ளது. பால நிர்மாணத்திற்காக 109 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தென் பிராந்திய அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கும், பிரயாணிகளுக்கும் சேவைகளை வழங்குவதற்காக ஓய்வினை கழிப்பதற்காக தம் விசேட ஏற்பாடுகள் பாதை ஓரங்களில் செய்யப்பட்டுள்ளதோடு இவற்றில் சிற்றுண்டிச் சாலைகள், சுகாதார வைத்திய சேவைகள், பழுது பார்க்கும் நிலையங்கள், எண்ணெய் நிரப்பு நிலையங்கள் போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் போக்குவரத்து சேவை என்பனவற்றின் வாகனங்களுக்கும் சொந்த தனியார் வாகனங்களுக்கும் இதில் பயணிக்க அனுமதி வழங்கவுள்ளதோடு பயணத்தினை மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஒரு சிறு தொகை பணம் அறவிடப்படவுள்ளது.

அத்தோடு இதில் பயணங்களை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு வேக அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மணித்தியாலயத்திற்கு ஆகக் குறைந்தது 60 கிலோ மீற்றலிருந்து ஆகக் கூடியது 120 கிலோ மீற்றர் வரை நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் சேவைகளினை வழங்குவதற்கான அனுமதியினை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் சென்று பயணித்தது போன்று அதைப் போன்று எவ்விதத்திலும் குறைவில்லாமல் அழகிய சூழலில் கண்ணை கவரக்கூடிய விதத்தில் எமது நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக தென் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொட்டாவையிலிருந்து பின்னதூவ வரையிலான முதலாவது கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்து செப்டெம்பர் 02 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளதினால் இதனூடே நீண்ட தூர பயணத்தினை ஒரு குறுகிய நேரத்தில் சொகுசாக வந்து சேரக்கூடிய வாய்ப்பு எமது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சி தூரநோக்கு என்பவற்றால் கைகூடப் போகின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com