Contact us at: sooddram@gmail.com

 

மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே - ஸ்ரீதரன் எம்.பி.

மே 2009 இற்க முன்பு வன்னிலும் ஏனைய தமிழ் பிரதேசங்கள் எங்கும் சிறீதரனின் முன்னாள் எசமானர்கள(தமிழ் இராணுவம்) 'மாமனிதர்' என்ற போர்வையில் 'லபக்' செய்த போது கை கட்டி ஆதரித்தவர் தற்போது சிங்கள் இராணுவம்? செய்யும் போது கொடுக்கு கட்டிக்கொண்டு புறப்பட்டது வீரம்தான்....?

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம மனிதர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்ட பொது மக்களின் வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் நுழைந்த இராணுவத்தினர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் பாராது கும்பிட கும்பிடத் தாக்கியுள்ளனர் என்று யாழ். மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் குற்றஞ்சாட்டினார்.

படையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது மட்டுமல்லாது 118 பேரைக் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் ஆலோசனையின் பிரகாரம் இவர்களில் 18 பேர் மோசமான நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிறீஸ் மனிதர்கள் அல்லது மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே என்பதற்கு எமது மக்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இவ்விடயங்களை இந்த சபையில் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துறைமுக, விமான நிலை வரி அறவீட்டுச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீதரன் எம்.பி. மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற அச்சத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்று தமது நிம்மதியையும் நித்திரையையும் இழந்தவர்களாய் அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மர்ம மனித அட்டகாசங்கள் அம்பாறை மட்டக்களப்புக்கு வந்து தற்போது யாழ்ப்பாணம் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுவதாக செய்திகள் புகைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும் நிம்மதியையும் இழந்து நிற்கின்றனர். வீடுகளை விட்டு வெளியில் வர முடியாதவர்களாக இருக்கின்றனர்.

யாழ். நாவாந்துறை பகுதியிலும் வடமராட்சியில் பொலிகண்டி வதிரி ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சியில் பாரதிபுரத்திலும் கடந்த திங்கள் இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர்.

இந்த மர்ம மனிதர்களை பிடிப்பதற்கு மக்கள் முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் அருகில் உள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும் பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் ஓடி தஞ்சம் புகுந்து கொள்கின்றனர்.

கிளிநொச்சி பராதிபுரத்தில் ஆடைகளற்ற நிலையில் ஆயுதங்களுடன் இரு மர்ம மனிதர்கள் வீடுகளுக்குள் புகுந்த போது அவர்களை பிடிப்பதற்கு பொதுமக்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அந்த மர்ம மனிதர்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

யாழ். நாவாந்துறையில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம மனிதர்களை பிடிக்க முற்பட்ட பொது மக்களின் வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர் அந்த மக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஆண்கள் பெண்கள் என பாராது கும்பிட கும்பிட கதறக் கதற தாக்கியுள்ளனர்.

அத்துடன் இல்லாது அதே பொழுதில் 118 பேரை கைது செய்த இராணுவத்தினர் இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவிரவாக தாக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்று (நேற்று) யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது மோசமான தாக்குதலுக்குள்ளான 18 பேரை யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் பணித்ததன் பிரகாரம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவர்.

இரவு நேரங்களில் பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழைகின்ற மர்ம மனிதர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எமது மக்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை இந்த பாராளுமன்றத்தில் மிகவும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன்.

மர்ம மனிதர்கள் இராணுவத்தினர் எனில் அவர்களது பெயர்களைக் குறிப்பிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன இங்கு கேட்கிறார்.

இரவில் வருகின்ற இவர்கள் முகத்தில் உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்டும் முகங்களை மறைத்துக் கொண்டும் சீருடையுடனும் சீருடை இல்லாமலும் இருக்கும் நிலையில் பொது மக்களால் அவர்களிடத்தில் பெயர்களை கேட்டறிவது எவ்வாறு? இவ்வாறு வருகின்ற மர்ம மனிதர்கனை துரத்திப்பிடிக்க முற்படுகின்ற போது அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் ஓடி ஒளிகின்றனரே இதன் மர்மம்தான் என்ன? அவர்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பதன் இரகசியம் என்ன?

மர்ம மனிதர்களை பிடிக்க மறுக்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பொதுமக்களை தாக்குகின்றனர் மிரட்டுகின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததன்பின்னரே இங்கு மர்ம மனிதர்களின் அட்டகாசம் ஆரம்பிக்கின்றது. தமிழ் மக்களையும் தமிழ் பகுதிகளையும் மட்டுமே மர்ம மனிதர்கள் இலக்கு வைத்திருக்கின்றனர். வேறு பிரதேசங்களில் இந்நிலை இல்லை. எந்தவொரு சிங்களப் பகுதியிலாவது இந்த மர்ம மனிதனின் அட்டகாசம் இருக்கின்றதா?

தமிழ் மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்குடன் இராணுவத்தினூடாக அரசு இவ்வாறான மர்ம மனிதர்களின் நாடகத்தை அரங்கேற்றுகின்றது. எனவே தமிழ் மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவும் தீர்வும் காணப்படவேண்டும். எமது மக்களின் இந்த பிரச்சினையை இந்த பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகளை இங்கு கொண்டு வருவதற்கான உரிமை எம்.பி. என்ற வகையில் எனக்கு இருக்கின்றது. இதனை
எவரும் தடுத்துவிட முடியாது என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com