Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினையை தீர்க்க தகுந்த சூழல், பொய்யான பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி

அவசரகாலசட்டம் நீக்கத்துக்கு கல்விமான்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் வரவேற்பு

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை மதத்தலைவர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரம், தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதன் மூலம் தகுந்த சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தம் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கை மூலம் பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அவசரகாலச்சட்டம் உடனடியாக அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பில் மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் கருத்துத் தெரிவித்ததாவது,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இதுவரை காலமும் நடைமுறையில் இருந்துவந்த அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீக்கியிருப்பது சகலருக்கும் மகிழ்ச்சி தரும் விடயம் எனத் தெரிவித்திருக்கும் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இச்சட்டத்தை நீக்குவதற்கு உருவாக்கப்பட்ட சாதகமான சூழ்நிலையை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது சகலரது கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டியது எனக் கருதி அரசாங்கத்தால் அது அமுல்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் அவசரகாலச் சட்டமானது சாதாரண குடிமக்களை மனித முகங்கொண்டு பார்க்கவேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர

1983ல் அமுல்படுத்தப்பட்டு சுமார் 30 வருட காலம் நீடித்த அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து நாடு அமைதி நிலையை எட்டியுள்ள நிலையில் கட்டம் கட்டமாக அதன் சரத்துக்கள் நீக்கப்பட்டு வந்தது. தற்பொழுது முழுமையாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்றது.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இதன் மூலம் உகந்த சூழல் உருவாகியுள்ளது. கட்சிகளிடையே பேச்சுவார்த்தை மூலம் இணக்கம் காண இது வழிவகுக்கும். சர்வதேச சமூகத்திற்கும் இதனூடாக சிறந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சகல கட்சிகளும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண பங்களிக்க வேண்டும்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி

அவசரகாலச்சட்டம் தேவையற்ற நிலையிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டது. தற்பொழுது அவசரகாலச்சட்டம் முழுமையாக அகற்றப்பட்டிருப்பது குறித்து அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். எதிர்காலத்தில் மீண்டும் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்படாத வகையில் மக்கள் செயற்படவேண்டும்.

நாட்டின் அமைதியை நிலைநாட்ட மக்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதோடு அரசுக்கு தமது ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும். அவசரகாலச்சட்டம் அகற்றப்பட்டதன் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்

பல வருடங்களாக நாடு எதிர்கொண்டிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் தற்பொழுது நீங்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருப்பதை வரவேற்பதுடன், மலையக மக்கள் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அவசரகாலச் சட்டத்தால் சாதாரண மக்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தனர். குறிப்பாக மலையக மக்கள் நகர் பகுதிகளுக்குச் செல்வதாயினும் பல இடங்களில் தேசிய அடையாள அட்டைகளை காண்பிக்கவேண்டியிருந்தது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சாதாரண மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மலையக மக்கள் சார்பிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பிலும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண

அவசரகாலச்சட்டத்தை நீக்கியது குறித்து சகல தரப்பினரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அவசரகாலச்சட்டத்தை நீடிக்கத் தேவையில்லை என்பதே சகலரது நிலைப்பாடாக இருந்தது. அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டது குறித்து வினாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான, புலி சார்பான சக்திகளின் நடவடிக்கைக்கு இதன்மூலம் பின்னடைவு ஏற்படும். இலங்கைக்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்கும் சக்திகளின் முயற்சிகள் இதனால் மழுங்கடிக்கப்படும்.

இதுதவிர தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் நடவடிக்கைக்கும் இது சிறந்த அடித்தளமாக அமையும்.

மன்னார் ஆயர் அதி.வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருப்பதானது வரவேற்கத்தக்கதொரு விடயம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வண.ராஜயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அவசரகாலச் சட்டத்தின் கீழ் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். இந்த நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப் பட்டிரு ப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைவதுடன், அதனை நீக்கிய ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்களைப் போன்று வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள மக்களும் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான சூழ்நிலையை உரிய தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும்.

கிaஸ் பூதங்கள் என மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று உருவாகியிருக்கும் சூழ்நிலையில், அவசரகாலச்சட்டத்தை நீக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மக்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு உரிய தரப்பினர் இடமளித்து நாட்டின் அமைதியைப் பாதுகாக்க வேண்டும்.

வரதராஜப் பெருமாள்

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையானது இலங்கையின் அரசியலில் முக்கியதொரு திருப்புமுனையென வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நல்லதொரு சூழ்நிலை தற்பொழுது தோன்றியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த வரதராஜப் பெருமாள், இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டில் நீதி, அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி, சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தற்பொழுது நடைமுறையில் இருக்கும் அரசியல் முறையைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவரும், ஜனாதிபதியின் இந்து மத விவகாரங்க ளுக்கான இணைப்பாளருமான தேசபந்து சிவஸ்ரீ பால ரவிசங்கர குருக்கள்

இலங்கை சரித்திரத்தில் நாட்டு மக்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் யுத்தவெற்றி ஏற்பட்டதன் பலனாக ஜனநாயக விழுமியங்களைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவாக அவசரகாலச் சட்டத்தை நீக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் சார்பில் இந்து மதகுருவென்ற ரீதியில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு நன்றிகளையும், ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அதன் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த அரசியல் கட்சிகளும், மக்களும் அரசுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

கடந்த ஒரு சில மாதங்களாக நாட்டுக்கு எதிராக தருஸ்மன் அறிக்கை, சனல்-4 வீடியோ காட்சி மற்றும் தற்பொழுது உருவாகியிருக்கும் கிaஸ் மனிதன், மர்ம மனிதன் பிரச்சினை என்பன அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையிலும் அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை நீக்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை முறியடித்து உள்நாட்டில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளார். இந்த நிலையில் சிவில் சட்டத்தை அரசாங்கம் பரிபூரணமாக நடைமுறைப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பேராசிரியர் முதியன்ஷே திசாநாயக்க

அவசரகாலச்சட்டத்தை அகற்றியமையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்ட சிறந்ததொரு முடிவாகும்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்தின மக்களும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர் என்பதனை நிரூபிப்பதற்காக இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றார்.

நாட்டிலே நிலவிய 30 வருடகால கொடூர யுத்தத்திற்கு முடிவுகட்டி நாட்டிற்கு சமாதானத்தை தோற்றுவித்துள்ளதாக உலகிற்கு கூறவுள்ள சிறந்த வாய்ப்பு இதுவாகும்.

பேராசிரியர் நவரத்ன பண்டார

அவசரகாலச் சட்டத்தை அகற்றுவதற்கு தீர்மானித்தமையானது நாட்டு மக்கள் சமாதானத்தை உண்மையான முறையில் அனுபவிக்க வழங்கப்பட்ட வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்.

ஜனாதிபதி அவர்களின் இந்த நடவடிக்கையினை அனைவரும் பாராட்டுதல் வேண்டும். முப்பது வருடகாலமாக நாட்டிலே இடையிடையே காணப்பட்ட இதனை அகற்றியதன் பின்னர் பொதுவான சட்டம் யாதென்பதனை இதன் மூலம் மக்களுக்கு இனங்காண வாய்ப்பு ஏற்படுகின்றது.

எதிர்க்கட்சியினரும் இதற்கு முழு ஆதரவளித்து ஒத்துழைத்தல் வேண்டும்.

அவசர காலச் சட்டத்தை நீக்கியதுடன் நின்று விடாது பாதுகாப்பு, நிருவாகம் ஆகிய ஒழுங்கு விதிகளிலிருந்தும் இதனை அகற்றுதல் வேண்டும்.

இதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கே இதன் நன்மை நன்கு தென்படுமென அவர் வலியுறுத்தினார். வடக்கு கிழக்கிலே இயல்பு நிலையினை ஏற்படுத்துவதற்கு இதனை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

எனவே ஜனாதிபதி அவர்களின் இந்தத் தீர்மானத்தை அனைத்தின மக்களும் பாராட்டுதல் வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com