Contact us at: sooddram@gmail.com

 

நாஸா விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற் காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய ரோவர் விண்கலம் பல லட்சம் கிலோ மீற்றர் பயணத்திற்கு பின் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. மிக தீர்க்கமான 7 நிமிட செயற்பாட்டுக்கு பின்னர் இலங்கை நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலத்தில் இருந்த அதி நவீன தொழிநுட்பம் கொண்ட கியூரியா சிட்டி என்ற ஆய்வு இயந்திரம் செவ்வாயில் இருந்து முதலாவது புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்த 1,400 க்கும் மேற்பட்ட நாஸா, விஞ்ஞானிகள் உற்சாகக் கூக்குரலிட்டு வரவேற்று கொண்டாடினர்.

எனினும் ரோவர் விண்கலம் செவ் வாயில் தரையிறங்கிய செய்தி பூமிக்கு வரும் வரை நாஸா விஞ்ஞானிகள் 13 நிமிடங்கள் பதற்றத்துடன் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. நாம் மீண்டும் செவ்வாய் கிரகத்தில், இது மிகச் சிறப்பானதாகும்என நாஸா நிர்வாகி சார்ல்ஸ் போல்டன் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். நாஸா குழு தற்போது செவ்வாயில் தரையிறங்கியுள்ள கியூரியா சிட்டி ஆய்வு இயந்திரம் பாதிப்பில்லாமல் செயற்படுகிறதா என்பதை உறுதி செய்யவுள்ளது.

கியூரியாசிட்டி இயந்திரம் நேற்று கறுப்பு வெள்ளை புகைப்படத்தையே பூமிக்கு அனுப்பியது. இன்னும் ஒருசில தினங்களில் வர்ணப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பவுள்ளது.

8 மாத பயணம்

பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து நாஸா பல தசாப்தங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து 1997 ஆம் ஆண்டு தொடக்கம் நாஸா மூன்று விண்கலங்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அவைகளில் இருந்து செவ்வாய் கிரகம் தொடர்பான படங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செவ்வாய் கிரகம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் அதில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான சூழல் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு செய்யவும் அதிக தொழிநுட் பங்களுடன் ரோவர் என்ற விண்கலத்தை நாஸா உருவாக்கியது.

இந்த விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேரைவல் விண்வெளி மையத்தில் இருந்து அட்லஸ் ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இவ்வாறு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் 8 மாதங்களில் 567 மில்லியன் கி.மீ. தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது. இந்த விண்கலத்தில் இருந்த கியூரியா சிட்டி இயந்திரம் செவ்வாய் கிரகத்தின் தென் பகுதியில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் மாபெரும் பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ளது. இது ஒரு பெரிய மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கிய நேரம் அங்கு பிற்பகலாகும். இப்போது செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிக்கட்டிகளால் ஆன மேகங்கள் சூழ்ந்த இந்த கிரகத்தில் இப்போதைய வெப்பநிலை மைனஸ் 12 செல்சியஸ் ஆகும்.

தீர்க்கமான 7 நிமிடம்

எனினும் அதிக செலவிலும் அதிக எதிர்பார்ப்புகளுடனும் தயாரிக்கப்பட்ட இந்த ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் கடைசி நிமிடங்கள் குறித்து நாஸா விஞ்ஞானிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அதாவது ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்து அதிலிருந்து நவீன தொழிநுட்பம் வாய்ந்த கியூரியாசிட்டி இயந்திரத்தை செவ்வாயில் பத்திரமாக தரையிறக்கு வதற்கான 7 நிமிடங்களும் தீர்க்கமானது என நாஸா விஞ்ஞானிகள் எச்சரித்தி ருந்தனர். இதில் நுணுக்கமாக அமைக் கப்பட்ட இந்த செயற்பாட்டில் ஏதாவது பிசகு ஏற்பட்டால் முழுத் திட்டமும் தவறிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டது.

இதன்படி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்குள் நுழையும் போது அதன் வேகம் 20,921 கி.மீ.யாக இருந்தது. இது ஒலியின் வேகத்தைவிட 17 மடங்கு அதிகம். இந்த பயங்கர வேகத்தில் கிரகத்திற்குள் நுழைந்த கியூரியாசிட்டி இயந்திரம் கிட்டத்தட்ட 7 நிமிடங்களில் தரைப்பகுதியை நெருங்கியது.

இதையடுத்து அதன் பாராசூட்களும் ரொக்கெட்களும் செயல்பட்டு அதன் வேகத்தை மட்டுப்படுத்தின. இதைத் தொடர்ந்து விண்கலம் தரையைத் தொடும் முன் அதிலுள்ள ஒரு கிரேன் முதலில் வெளியே எட்டிப் பார்த்தது. பின்னர் அந்த கிரேனில் இருந்து நைலான் கயிறுகள் மூலம் கியூரியா சிட்டி இயந்திரம் தரையில் பத்திரமாக இறங்கியது.

இதையடுத்து கிரேனில் உள்ள ரொக்கெட்டுகள் செயல்பட்டு அதை விண்கலத்தில் இருந்து சில கி.மீ. தூரத்தில் தூக்கி எறிந்தன.

இதையெல்லாம் விண்கலத்தின் கணனியிலுள்ள புரோக்கிராம்கள் செயற்படுத்தின. கிரகத்திற்குள் நுழைந்த 7 நிமிடங்களில் இவை எல்லாம் நடந்து முடிந்து கியூரியாசிட்டி தரையில் பத்திரமாக தரையிறங்கியது.

இயந்திரத்தின் வெளிப்புற பாதுகாப்பு கவசத்தைத் திறப்பது, பாராசூட்டை திறப்பது, கிரேனை செயல்பட வைப்பது ஆகிய பணிகளை 79 சிறிய வெடிகள் செய்தன.

கியூரியாசிட்டி பத்திரமாக தரையி றங்கியுள்ளதை செவ்வாய் கிரகத்தை ஏற்கனவே சுற்றி வரும் நாஸாவின் மார்ஸ் ஒடிஸி செயற்கைக் கோளுக்குத் தெரிவித்தது. பின்னர் அங்கிருந்து பூமிக்கு அடுத்த சில வினாடிகளில் தகவல் வந்து சேர்ந்தது.

ஒரு செவ்வாய் ஆண்டு பணி

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வ தற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலத்தை உருவாக்க 2.5 பில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் செவ்வாயை ஆய்வு செய்யும் கியூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ. ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோ வாகும். ரோவர் விண்கலத்தில் கியூரியாசிட்டி என்ற ஒரு வாகனம் (இயந்திரம்) உருவாக் கப்பட்டுள்ளது.

அந்த கியூரியாசிட்டி வாகனத் தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 6 சக்கர வாகனம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கியூரியாசிட்டியில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன.

செவ்வாயில் இருக்கும் மண்ணை ஆய்வு செய்வதற்கு தேவையான தோண்டும் இயந்திரம், மண் பரிசோதனை சாதனம் உள்ளிட்ட அனைத்து வகை அம்சங்களும் இந்த கியூரியாசிட்டியில் உள்ளன.

இந்த இயந்திரம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பாறைகள், மலைகள், நிலங்கள் என கவனத்தை ஈர்க்கும் பகுதிகளை ஆய்வு செய்யும். இந்த இயந்திரத்தின் அதிகூடிய வேகம் விநாடிக்கு 4 சென்டி மீற்றராகும். அத்துடன் இதில் 17 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை குறிப்பிட்ட பகுதிகளை அடையாளப்படுத்தும். இவ்வாறு செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி இயந் திரம் அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பவுள்ளது. இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான கட்டளைகள் பூமியில் இருந்து பிறப்பிக்கப்படும்.

இந்த இயந்திரம் செவ்வாய் ஆண்டின்படி ஓர் ஆண்டு செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியின் காலத்தில் இரண்டு ஆண்டுகளாகும். எனினும் இது குறித்த காலத்தை விடவும் பல ஆண்டுகளுக்கு செயல்பட வாய்ப்பு உள்ளதாக நாஸா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள், நுண்ணுயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கியூரியாசிட்டி இயந்திரம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள நாஸாவுக்கு இந்த கியூரியாசிட்டி இயந்திரத்தின் ஆய்வுகள் மிக முக்கியமானதாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com