Contact us at: sooddram@gmail.com

 

ஜனநாயக மக்கள் முன்னணி

டெசோ மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளது - மனோ கணேசன்

திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை, மிகுந்த மனவருத்தத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்துள்ளது என முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கூட்டம், முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று கொழும்பில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அரசியல்குழு உறுப்பினர்களுடன்இ கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ

தமிழக அமைப்புகளின் எல்லாவித நடவடிக்கைககளும் இலங்கையில் தமிழரை கொடும் ஆட்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எனவே தமிழக மற்றும் இந்திய அரசியல் கட்சிகளின் இலங்கை தொடர்பான நடவடிக்கைககளை விமர்சனம் செய்வது இல்லை என்பது நமது கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் நிலைப்பாடு ஆகும்.

மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொடர்பிலும், உலகத் தமிழ் அரசியல் பரப்பில் திராவிட முன்னேற்ற கழகம் வகிக்கும் பாத்திரம் தொடர்பிலும் நாம் நல்லெண்ணங்களை கொண்டுள்ளோம்.

எனினும் போர் நடைபெற்ற காலத்தில் ஆட்சியிலிருந்த திமுக அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும், தற்போதைய போருக்கு பிந்திய இந்த காலகட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் பயன்பாடு குறித்தும் பாரிய முரண்பாடுகள் எழுந்துள்ளன. இவைபற்றி நாம் விரிவான பகிரங்க விவாதங்களை நடத்த விரும்பவில்லை. எனினும் இவை தொடர்பில் எமது அரசியல்குழுவில் விரிவாகவும், கவனமாகவும் ஆய்வு செய்த நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் எமது இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.

அதேவேளையில், இலங்கை தமிழர்களது தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கூட்டாக ஒரு தேசிய மாநாட்டை நடத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். அதன்மூலம்இ தமிழகம் தனது ஒருமித்த குரலின் மூலமாக இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலங்கை தமிழ் உடன்பிறப்புகளுக்கு ஆதரவாகவும்இ இந்தியாவின் மனசாட்சியையும்இ உலகத்தின் மனசாட்சியையும் தட்டி எழுப்ப வேண்டும். அந்த ஒரு செயல்பாட்டில் தமிழகத்தின் மாணவர்இ இளைஞர் மற்றும் சமூக அமைப்புகளும் உள்வாங்கப்பட வேண்டும். இத்தகைய ஒரு அனைத்து கட்சிகளின், அமைப்புகளின் மாநாடு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்படுமானால் அதில் நமது கட்சி உட்பட அனைத்து இலங்கை தமிழ் கட்சிகளும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றும் சூழல் ஏற்படும் என நாம் அறிவிக்க விரும்புகிறோம்.

இலங்கையில் வாழுகின்ற தமிழர்களின் வாழ்வுரிமைகள் தொடர்பில், இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் உலகின் எந்த ஒரு மேடைக்கும் சென்று உரையாடல்களை மேற்கொள்வதற்கும், தமிழக மற்றும் எந்த ஒரு உலக அரசியல் அமைப்புகளுடனும் இணைந்து நமது மக்களின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னேடுப்பதற்கும் உள்ள உரிமையை நாம் முழுமையாக வலியுறுத்துகிறோம்.

தேசிய
இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தமிழ் கட்சிகள் அறிவித்துவிட்ட நிலையிலும், இந்நாட்டின் சிங்கள பெளத்த இன-மதவாத கட்சிகளே, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு தடையாக இருக்கின்றன. இந்த கட்சிகளே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிரான இன-மத தாக்குதல்களுக்கு பின்னணியிலும் இருக்கின்றன. இந்த இன-மதவாத அமைப்புகளை இலங்கை அரசாங்கமே தட்டி கொடுத்து வளர்க்கின்றது. உள்நாட்டில் தீர்வுகள் இல்லை என்ற நிலையிலேயே, நாம் வெளிநாடுகளின் கவனத்திற்கு எமது பிரச்சினைகளை கொண்டு செல்கிறோம். எனவே தமிழ் அரசியல் கட்சிகள் வெளிநாடுகளுக்கு சென்று, எமது பிரச்சினைகள் தொடர்பில் உரையாட கூடாது என்ற இந்த இன-மதவாத அமைப்புகளின் கருத்துகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com