Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை. அதனால் தான் ஒரு வருட காலத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையை அவர் கலைத்து விட்டார் ௭ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை வை.௭ம்.சீ.ஏ.மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கிழக்கு மாகாண சபை ஒரு வருட காலத்திற்கு முன்பாகவே கலைக்கப்பட்டமையை ௭திர்த்து வழக்குத் தொடரப்பட்டது.

பாவம் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் துரதிஷ்டம் அந்த வழக்கு தோல்வியடைந்துள்ளது. இதனால் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் முதலமைச்சராக இருக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரு­ம்­பவில்லை அதனால் தான் ஒரு வருட கால­த்துக்கு முன்பே கலைத்து விட்டார்.

இதனைப் புரிந்து கொள்ளாமல் தான் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மீண்டும் முதலமைச்சர் தானே தான் ௭ன மனப்பால் குடித்துக் கொண்டு தேர்தலில் குதித்துள்ளார்.

முதலமைச்சராக மீண்டும் தமிழரென இவர்கள் நம்மக்களிடம் உசுப்பேத்துவது ஒரு போதும் செல்லுபடியாகாது. அதே போல் வடக்கை விடவும் கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பதில் முன்னிலையிலிருந்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைத் தவிர வேறு ௭ந்தக் கட்சியிலிருந்தும் ௭வரும் தெரிவு செய்யப்படப் போவதில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் இதனை நிரூபணம் செய்தது போல் தமிழ் மக்கள் இம் முறையும் நிரூபணம் செய்வர். அடாவடித்தனம் கபட நோக்குடன் கிழக்கு மாகாண சபை­யைக் கலைத்து தேர்தல் நடத்தி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனைந்துள்ள அரசும் அதன் அடிவருடிகளும் தேர்தல்கள் நிலைவரம் கண்டு கதிகலங்கி நிற்கின்றனர்.

இதனால் அடாவடித்தனத்தை கிழக்கில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. ௭னினும் இவை அத்தனைக்கும் முகம் கொடுக்கும் சக்தியை நாம் மக்களிடமிருந்து பெற்றுள்­ளோம்.

மார் தட்டும் அரசு கிழக்கில் இடம்பெற்றுள்ள வீதி அபிவிருத்தி மற்றும் பால நிர்மாணப் பணிகளைத் தாமே வெட்டிப்பிடுங்கியதாக அரசும் அதன் அடிவருடிகளும் தம்பட்டமடிக்கின்ற நிலை­மைகளை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. பிரான்ஸ் அரசு செய்ததையும் சுனாமி தந்த தங்கப்பரிசுகளையும் தான் ஏதோ தாம் பெரும் அபிவிருத்திகளைச் செய்ததாக தம்பட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனையெல்லாம் அரசின் முதலாவது பொய்யெனக் கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டும்.

கல்முனைமட்டக்களப்பு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு கார்பட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது போல் தெற்கிலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வீதி அகலமாக்கப்பட்ட போது தமது நிலங்களை வழங்கிய வீதியின் மருங்கிலுள்ள நம்மவர்களுக்கு ௭ந்த நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.

ஆனால் தெற்கில் வீதி அபிவிருத்தியின் போது இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுக்கண் இந்த நிலைமைக்குக் காரணம். வெளிநாடுகளில் நன்கொடை நிதியில் தெற்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றமையும் கிழக்கில் மெல்லிய கடனாகப் பெறப்பட்ட நிதியில் நடைபெற்றமையுமாகும். இதன் மூலம் தெற்கை ஒரு கண் கொண்டும் வடக்கு, கிழக்கை மாற்றுக்கண் கொண்டும் அரசு பார்த்து வருகிறது.

ஆனால் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மக்களென அரசு மெய் சிலிர்க்கக் கூறிக் கொண்டிருக்கிறது. அபிவிருத்தி ௭னும் மாயையைக் காட்டி மக்களை ஏமாற்றுவதற்கும் இத்தேர்தல் களத்தில் பலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் இவர்கள் கூறும் அபிவிருத்திகளெல்லாம் ஏழைகளுக்குக் கூப்பன் புத்தகம் வழங்குவது போன்றதாகும். கருணாவும் பிள்ளையானும் இல்லாவிட்டால் இவையொன்றும் வந்து விடாதா? நிச்சயம் வரும் அது அரசின் கடமையாகும். இதனை மஹிந்த சிந்தனையில் பார்க்காமல் நமது சிந்தனையில் நாம் பார்க்க வேண்டும்.

ஐ.நா சபை சாசன உறுதியுரையின் படி இறைமையுள்ள அரசு தன் நாட்டு மக்களுக்கு இன மதம் பாராது சேவை செய்ய வேண்டும். சிங்கப்பூரைப்போல் சிறுபான்மையினர் அவர்களது அபிலாசைகளுக்கு ஏற்ப உரிமை பெற்றவர்களாக வாழ வழிவகுப்பதே ஓர் அரசின் கடமையாகும். இந்தியா, கனடா, சிங்கப்பூர் உட்பட ஐரோப்பிய, ஆசிய நாடுகள் இதனைச் செய்துள்ளன.

௭னவே சிங்கப்பூர் போல் நாட்டை மாற்றுவதாகக்கூறும் அரசு இங்கும் சிங்கப்பூர் போல் ஏன் அரசியலை மாற்றக்கூடாது. முஸ்லிம்கள் அன்று காரியப்பர் தொடக்கம் செனட்டர் மசூர் மௌலானா வரை தமிழரசுக்கட்சி மேடைகளில் ஒரு முஸ்லிமாவது இல்லாதிருப்பது கிடையாது.

இன்று கிழக்குத் தேர்தலில் நம் கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் ஒருவர் போட்டியிடுவது பெரும் மன மகிழ்வைத் தருகின்றது. நல்ல சகுனம் தோன்றியுள்ளது.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகள் சோதனைகள் இன்று முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்டுள்­ளன. தம்புள்ளை பள்ளிவாசலில் தொடங்கி ராஜகி­ரிய வரைக்கும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீது பேரினவாதம் ஊழிக் கூத்தாடி வருகின்றது.

 தந்தை செல்வா முதல் தமிழர் தலைமைகள் முஸ்லிம் மக்களை ஒரு போதும் புறக்கணித்து நடக்கவில்லை.

கிழக்கில் ஒரு சபையல்ல. இரு சபைகள் தேவைப்பட்டால் மூன்று சபைகள் அமைக்கலாமென முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கி அன்று தந்தை செல்வா தீர்க்க தரிசனமாகக் கூறினார். பேரினவாத அரசுகளால் 1949 களில் கல்லோயா திட்டத்தைக் கொண்டு வந்து சிங்களக் குடியேற்றங்களைச் செய்ய முற்பட்ட போது சம்மாந்துறை முஸ்லிம் தலைவர்களை அண்ணன் அமிர்தலிங்கம் கண்டு கதைத்து இத்திட்டத்தில் அரைவாசி தமிழ் பேசும் மக்கள் குடியேற்றப்பட வேண்டுமென்பதை நெறிப்படுத்தினார்.

அன்று புத்தளம் பள்ளிவாசல் பிரச்சினையில் முஸ்லிம் அமைச்சர்களிலிருந்தும் அதற்காகக் குரல் கொடுத்தது தமிழ்த் தலைவர்கள் தானென்பதையும் முஸ்லிம் மக்கள் ௭ளிதில் மறந்து விட முடியாது. இந்நிலையில் முஸ்லிம் மக்களும் கிழக்கில் அரசை ஆதரிக்கவில்லையென்ற உண்மையைத் தேர்தலின் பின்னரும் நிரூபிக்க முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும். தலைவிதி வட ,ிழக்கில் நம்மவர்கள் அமைச்சர்களாக மிகப் பாதுகாப்புடன் அரச அடிவருடிகளாக வலம் வருகின்றனர்.

ஆனால் நம் இளைஞர்கள் பாதுகாப்பின்றி அச்சுறுத்தலுடன் சிறையில் வாடுகின்றனர். மடிகின்றனர். இதுவே தமிழினத்தின் இன்றைய தலை விதியாகும். இயந்திரமா? ௭னவே ௭ம்மை நடுக்கடலில் தள்ளி விட்டு நிற்கும் அரசுக்கு இன்றும் வாக்களிக்கும் இயந்திரங்களாக தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இருக்க முடியுமா ௭ன்பதை சிந்தித்து கிழக்குத் தேர்தலில் நம்மக்கள் அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும் ௭னவும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com