Contact us at: sooddram@gmail.com

 

எகிப்தெங்கும் ஆர்ப்பாட்டம்; வன்முறை வெடிப்பு; 100 க்கும் அதிகமானவர்கள் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்ட முகாம்களை பாரிய உயிர்ச் சேதத்திற்கு பின் பாதுகாப்பு படையினர் அகற்றியுள்ளனர். கெய்ரோவின் ரபா அல் அதவியா பள்ளிவாசலுக்கு முன்னால் இருந்த ஆர்ப்பாட்ட முகாம் மற்றும் கிஸாவின் நஹ்தா சதுக்க ஆர்ப்பாட்ட முகாம்களையே பாதுகாப்பு படை நேற்று அகற்றியது. இதில் 40 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறியபோதும் 200 க்கும் அதிகமானவர்கள் பலியானதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இராணுவ நடவடிக்கையின்போது 200 பேரளவில் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் ரபா அல் அதவியாவில் 50 பேரளவும் நஹ்தா சதுக்கத்தில் 150 பேரளவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான முர்சி ஆதரவாளர்கள் கூடியிருந்த நஹ்தா சதுக்கத்திற்கு மேலால் புகை மூட்டம் எழுந்திருக்கும் காட்சியை நேற்றுக் காலை எகிப்து தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. பின்னர் கண்ணீர் புகை, இரப்பர் குண்டுகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழுமையாக அகற்றப்பட்டதாக அரச தரப்பு கூறியது. இராணுவம் புல்டோசர்களை பயன்படுத்தி முகாமை முழுமையாக அகற்றியுள்ளது.

இந்த வன்முறையில் 2000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் சுகாதார அமைச்சின் தகவலின்படி குறைந்தது 7 பேரே கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்று பாதுகாப்பு படையினர் உட்படுவதாகவும் 78 பேர் காயமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. முர்சி ஆதரவாளர்களின் நடமாடும் மருத்துவமனை வட்டாரம் வழங்கிய தகவலின்படி குறைந்தது 120 பேர் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பல தலைவர்களும் நேற்றைய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது. நாம் முஸ்லிம் சகோதரத்துவ தலைவர்கள் பலரை கைது செய்திருக்கிறோம்.

எனினும் இப்போது அவர்களது பெயர்களை வெளியிடுவது மிக விரைவானதுஎன உள்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் அப்தல் பத்தாஹ் ஒத்மான் உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியதாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ரபா அல் அதவியா, நஹ்தா சதுக்கங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே கெய்ரோவுக்கான இரயில் மற்றும் பஸ் போக்குவரத்துகள் முடக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களின் நடமாட்டத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நேற்று நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ரபா அல் அதவியாவுக்கான பிரதான பாதையான வீதியில் ஆயிரக்கணக்கான முர்சி ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். எனினும் இவர்கள் பிரதான ஆர்ப்பாட்ட முகாமுக்குள் நுழையாமல் இருக்க பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகமும் மேற்கொண்டனர்.

எனினும் பல பகுதிகளில் இருந்தும் பேரணி நடத்தி பாதுகாப்பு தரப்பினரை குழப்பி வருவதாக முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர் தமர் அல் நஷார் பி. பி. சி. உலக சேவைக்கு தெரிவித்துள்ளார். நாம் பல பகுதிகளில் இருந்து பேரணிகளை ஆரம்பித்து பல பகுதிகளில் இருந்து பாரிய மக்களை ஒன்று திரட்ட ஏற்பாடு செய்திருக்கிறோம். இது ரபா அல் அதவியாவை தாக்கிய பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்தும்என்றார்.

இது தவிர அலக்சான்ட்ரியா நகரின் பிரதான வீதியை முடக்கி முர்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு சுயேஸ், அஸ்ஸியூட் என நாடெங்கிலுமுள்ள பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இதில் முர்சி ஆதரவாளர்கள் பல அரச அலுவலகங்களை தாக்கி இருப்பதாகவும், பல பொலிஸ் வானங்களை தீக்கிரையாக்கியதாகவும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அலக்சான்ட்ரியா நகரைச் சேர்ந்த அஹ்மத் பதி பி. பி. சி.க்கு வெளியிட்ட தகவலில், “இங்கு நடப்பது நாம் நினைப்பதை விடவும் பாரதூரமாக உள்ளது. அலக்சான்ட்ரியாவுக்கான மூன்று பிரதான பாதைகளையும் அவர்கள் முடக்கியுள்ளனர். ஒரு சில கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அலக்சான்ட்ரியாவுக்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் வருகிறார்கள். இவர்கள் முர்சிக்கு ஆதரவாகவும் கெய்ரோவில் நடந்ததற்கு கண்டனம் வெளியிட்டும் வருகிறார்கள்என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே எகிப்தின் சிறுபான்மை மக்களான கொப்டிக் கிறிஸ்தவர்களின் பல தேவாலயங்களும் தாக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எகிப்து பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு சர்வதேச அளவிலும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீத படைகளை ஏவிவிட்டதற்கு கட்டார் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதனை ஒரு படுகொலையாக விபரித்து ஈரானும் கண்டனம் வெளியிட்டுள்ளது. எகிப்து படுகொலைக்கு சர்வதேச சமூகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது.

அதேபோன்று உயிர் பலிகள் குறித்து கடும் கவலையை வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து தரப்பையும் அமைதி காக்கும்படி கேட்டுள்ளது. எகிப்தின் முன்னணி இஸ்லாமிய நிறுவனமான அல் அஸ்ஹர் இரத்தம் சிந்தப்பட்டது மற்றும் படையினர் பயன்படுத்தப்பட்டதற்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அல் அஸ்ஹர் தலைமை இமாம் ஷெய்க் அஹ்மட் அல் தய்யிப் எகிப்து வானொலியில் வெளியிட்ட அறிவிப்பில், “வன்முறைகள் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக அமையாது. அனைத்து தரப்பும் சுய கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும்என்றார்.

இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு கோரியே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உட்பட முர்சி ஆதரவாளர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பதற்றத்தை தணிக்கும் சர்வதேச நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. ஏற்கனவே இடம் பெற்ற வன்முறைகளில் 250 க்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அதிலும் முர்சி ஆதரவாளர்களே அதிகம் பேர் பலியாகியுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com