Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைபெலாரஸுக்கு இடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் பெலாரஸுக்குமிடையில் இருதரப்பு உடன்படிக்கைகள் ஏழு கைச்சாத்திடப்பட்டுள்ளன. பெலாரஸ் நாட்டுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகன்ஷன்கோ ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான பயணச் சீட்டுடையவர்களை விசாக்களிலிருந்து விடுவித்தல். குற்றவியல் தொடர்பான விடயங்களின்போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம், சட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பை தடுக்கும் உடன்படிக்கை, சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை மற்றும் இராணுவ துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகளே கைச்சாத்திடப்பட்டன.

இதேவேளை, பல துறைகளில் இருதரப்பு தொடர்புகளை வளர்த்துக்கொள்வதை இலங்கைபெலாரஸ் தலைவர்கள் உறுதிப்படுத்தினர். பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதை இலங்கைபெலாரஸ் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

இரு நாட்டு ஜனாதிபதிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னர் பெலாரஸ் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இரு அரச தலைவர்களுக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. பெலாரஸ் ஜனாதிபதி, இலங்கையின் யதார்த்தம் பற்றி மிகுந்த புரிந்துணர்வுடன் இருப்பது பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

எந்தவொரு நாட்டுக்கும் சமாதானம் இல்லாமல் அபிவிருத்தியை அல்லது அபிவிருத்தி இல்லாமல் சமாதானத்தைப் பேண முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்தை முடிவுறுத்தியதன் பின்னர் இலங்கையால் துரித அபிவிருத்தியை அடைய முடிந்தது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகம் 7 – 8 சதவீதங்களுக்கு இடையிலான பெறுமதியைக் கொண்டிருந்தது. அத்துடன் மோதல் இடம்பெற்ற பிரதேசங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 22 சதவீதமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களில் பெலாரஸ் அடைந்துள்ள சமூக பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நமது நாடுகள் இரண்டும் கடந்த காலத்தில் சமமான கருத்துக்களுடன் செயற்பட்டதைப்போன்று எதிர்காலத்திலும் நண்பர்களாக இருக்க வேண்டும்' என்பதையும் சுட்டிக்காட்டினார். பெலாரஸும் இலங்கையும் பல விடயங்களில் சமமான அரசுகளாக இருக்கின்றன எனக் குறிப்பிட்;ட பெலாரஸ் ஜனாதிபதி, பயங்கரவாதத்தை தோல்வியுறச்செய்ததன் பின்னர் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.

பெலாரஸ் அரசு சமூக நலனை முதன்மையாகக்கொண்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றது எனத் தெரிவித்த பெலாரஸ் ஜனாதிபதி, ஏனைய நாடுகளிலும் அத்தகைய செயல்முறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது தனது கருத்து எனவும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் இலங்கையுடன் தொடர்ந்து பொருளாதார, வர்த்தக, சமூக தொடர்புகளை வளர்த்துக்கொள்வதற்கு தமது நாடு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது எனவும் தெரிவித்தார்.

இலங்கையுடன் ஒருங்கிணைந்த வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு தமது நாடு விரும்புகிறது எனத் தெரிவித்த பெலாரஸ் ஜனாதிபதி, உழவு இயந்திரம், மோட்டார் வாகனங்கள் மற்றும் கைத்தொழில், தொழில்நுட்ப உபகரணங்களுக்கு இலங்கைக்கு உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

பெலாரஸ் நாட்டில் முதலீடு செய்வதற்கு இலங்கை வியாபார சமூகத்திற்கு அழைப்புவிடுத்த லுக்கன்ஷன்கோ சனாதிபதி அவர்கள், இன்று மாலை நடைபெறவிருக்கும் வியபார மன்றம் இந்த நோக்கத்தை யதார்த்தமாக்கிக்கொள்வதற்கு அடிப்படையை அமைத்தக் கொடுக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் இராணுவ மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒத்தழைப்பை வளர்த்துக்கொள்வதில் உள்ள முக்கியத்துவம்பற்றியும் பெலாரஸ் சனாதிபதி சுட்டிக்காட்டினார். லுக்கன்ஷன்கோ சனாதிபதி அவர்களின் தொலை நோக்குடைய தலைமைத்துவத்தைப் பாராட்டிய ராஜபக்ஷ அவர்கள் பெலாரஸ் நாட்டில் பயணம் செய்கின்ற முதலாவது இலங்கைத் தலைவர் தாம் என்பதையும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக நடைமுறைப்படுத்துவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்த ராஜபக்ஷ அவர்கள், இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை வளர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக அமைகின்ற சலுகைகளுடனான நேரடி விமான சேவையொன்றை இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாவும் தெரிவித்தார்.
 
பல்வேறு தரப்பினரின் தேவைகளின்மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை போன்ற நிறுவனங்களை இலங்கை, பெலாரஸ் போன்ற நாடுகளை அசௌகரியத்துக்குள்ளாக்க பயன்படுத்திக்கொள்கின்றனர் எனக் குறிப்பிட்ட சனாதிபதி ஏனைய நாடுகளுக்கு தாக்கமேற்படுத்துவதற்காக மனித உரிமைகள் பேரவையைப் பயன்படுத்திக்கொள்வதை கண்டித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம் பிள்ளை தற்பொழுது இலங்கைக்கு விஜயம்செய்திருப்பதாகவும் தெரிவித்தார். வெகுசன ஊடகம்,கல்வி,கலாசாரம் மற்றும் உறுப்பினர்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பை வளர்த்துக்கொள்வதற்கு ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை தெரிவித்தார்.

ஷென்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் கண்கானிப்பு நிலையை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ளவதற்கு பெலாரசின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்ட சனாதிபதி அவர்கள், பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டுக்கு இணையாக நடைபெறுகின்ற வர்த்தக மன்றத்தில் வியாபாரிகள் குழுவொன்றை கலந்துகொள்ளச் செய்யும்படி பெலாரஸ் சனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு விஜயம்செய்யும்படி ராஜபக்ஷ அவர்கள் விடுத்த அழைப்பை லுக்கன்ஷன்கோ சனாதிபதி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் இருநாட்டு சனாதிபதிகளும் ஒருங்கிணைந்த பிரகடனத்தில் கையொப்பமிட்டார்கள்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, மொஸ்கோவுக்கான இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, மாகாணசபை உறுப்பினர்களான நவுசர் பவுசி, சோமவங்ச கோதாகொட, அர்ஜூனசில்வா, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ந்ஷனுகா செனெவிரத்ன, கூட்டமைப்பு உத்தியோகத்தர் மஜின்த ஜயசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com