Contact us at: sooddram@gmail.com

 

இந்திய இழுவைப்படகுகளினால் பாதிக்கப்படும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு நிரந்தரத்தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும் முயற்சி!

இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதால்
வடபகுதி கற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அவலங்களுக்கு நிரந்தர
தீர்வு காணும் கடும் முயற்சியில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஈடுபட்டு வருவதாக ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் உயர் அரசியல் பீடம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,... மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல், நடந்து முடிந்த அழிவு யுத்தத்தில் வலிகளை சுமந்து நிற்கும் எமது கடற்றொழிலாளர்களை இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகை மேலும் வதைத்து வருகின்றது. எமது மக்களின் கடல் வளங்களை முற்றாக அழிப்பதோடு மட்டுமன்றி எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உழைப்பையும் இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகை தடுத்து வருகிறது. இந்த அவலங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். எமத  கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் அவலப்படுவதை நாம்  சகித்துக் கொண்டிருக்க முடியாது.

எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதி கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு தீர்வு காணும் எமது தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். இந்திய மீனவர்களை கடற்பரப்பில் வைத்து ஈ.பி.டி.பி யினரே தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்ற தமிழகத்தில் உள்ள சிலரின் பொய்யான பிரச்சாரங்களை சகலரும் அறிவார்கள். இது போன்ற பொய்யான பிரச்சாரங்களுக்கு காரணமாக இருப்பது ஈ.பி.டி.பியினராகிய நாம் எமது கடற்றொழிலாளர்களின் கடல் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் உறுதி கொண்டு உழைப்பதே ஆகும்.

யார் எம் மீது பழி சுமத்தினாலும், எமது கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு தீர்வு காணும் வன்முறைகள் அற்ற எமது செயற்பாடுகள் இனியும் தொடரும்.  செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  எமத கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் வை. கே. சிங்கா அவர்களுடன் பேசியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விஷேட பிரதிநிதி நவநீதம்பிள்ளை அவர்களுடனான பொதுவான சந்திப்பின் போதும் எடுத்து விளக்கியுள்ளார். இது தவிர ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுடனான விசேட சந்திப்பின் போதும் இதை எடுத்து விளக்கியுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம( 29.08.13) அமைச்சரவை கூட்டத்திலும் விஷேட பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

இதன் பிரகாரம், இந்திய மீனவர்களுக்கும், எமது வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் இணக்க பேச்சு வார்த்தையினை முதலில் நடத்துவது என்றும், இருபகுதி மக்களுக்கும் இடையிலான சுமுகமான இணக்கப்பாடுகளை வைத்து இலங்கை இந்திய அரசுகள் அதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை நடத்துவது என்றும் அமைச்சரவை கூட்டத்தில் இணக்கமான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் உயர் அரசியல் பீடம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் எமது வடபகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய மீனவர்களுடனான இணக்க பேச்சுக்கு என்றும் தயாராகவே இருக்கின்றார்கள் என்றும், இதேவேளை இந்திய மீனவர்களை இவ் இணக்க பேச்சுக்கு கொண்டு வருமாறு இந்திய தூதுவர் வை. கே. சிங்கா
அவர்களிடம் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com