Contact us at: sooddram@gmail.com

 

ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின்

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு - நவநீதம்பிள்ளை

'ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தன்னை விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு அனுமதியளித்தது எனவும் இலங்கை ஓர் எதேச்சதிகார அரசுக்கான சில அறிகுறிகளை காட்டியது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'யுத்தத்தின் முடிவு ஒரு புதிய துடிப்பான சகலரையும் அணைத்துபோகும் அரசொன்றை உருவாக்க வாய்ப்பை வழங்கிய போதும் இலங்கையில் எதேச்சதிகாரவழியில் செல்வதற்கான அடையாளங்களை காணமுடிகின்றது' என அவர் கூறினார். இந்த நாட்டில் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் கூறினார். 'பயம் காரணமாக சுயத்தணிக்கை காணப்படுவதாகவும் தாம் எழுதப்பயப்பிடுகின்ற அல்லது பத்திரிக்கை ஆசிரியர் வெளியிடதுணியாத கட்டுரைகள் உள்ளனவென ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

சார்க் நாடுகள் பலவற்றில் உள்ளது போன்று இலங்கையிலும் 'தகவல்பெறுவதற்கான உரிமை சட்டத்தை' கொண்டுவரவேண்டுமென நான் கூறியுள்ளேன் என்றும் அவர் கூறினார். ஒரு இராஜதந்திர ரீதியான உப்புச்சப்பற்ற அறிக்கை தருவாரென கூறியோருக்கும், அதே பழைய அறிக்கையை தருவாரென கூறிய சில அமைச்சர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆணையாளர் நவீபிள்ளே தான் இங்கிருந்தபோது தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதை உறுதிசெய்தார்.

உலகின் எப்பகுதியிலும் தான் இதுவரை மேற்கொண்ட விஜயங்களில் இதுவே ஆகக்கூடிய நாட்களை கொண்டிருந்தது என அவர் கூறினார். 'இப்போது எனது விஜயத்தின் மிகவும் கவலைதரும் அம்சங்கள் பற்றி கூறவிரும்புகின்றேன். குறிப்பாக இரண்டு மதகுருமார்கள், பத்திரிகையாளர்கள் உட்பட மனித உரிமைகளுக்காக போராடுபவர்களும் சாதாண பிரசைகளும் என்னை சந்தித்தமைக்காக அல்லது சந்திக்க விரும்பியதற்காக மிரட்டப்பட்டனர் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இவைப்பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன' என அவர் கூறினார். மேலும், தன்னை சந்தித்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மதகுருமார்கள் மீது கடும் கண்காணிப்பு இருந்ததாக கிடைத்த செய்திகளால் தான் கவலையடைந்ததாகவும் அவர் கூறினார்.

பொலிஸின் நடவடிக்கைகள் ' அதிவிசேடமானதாகவும் மிதமிஞ்சியதாகவும்'இருந்தன எனவும் யுத்தம் முடிந்த நாடுகளில் தான் இப்படி எங்கும் காணவில்லை என்றும் அவர் கூறினார். 'நான் முல்லைத்தீவுக்கு போவதற்கு முன்னரும் போய்வந்தததன் பின்னரும் இராணுவமும் பொலிஸாரும் அப்பகுதி மக்களை சந்தித்தனர். திருகோணமலையில் நான் சந்தித்த மக்களிடம் நாம் என்னபேசினோம் என விசாரிக்கப்பட்டுள்ளது' என பிள்ளே தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக தான் கடுமையாக கவனிக்கப்போவதாக அவர் கூறினார்.

மனித உரிமை பிரச்சினைகளை 27 வருட யுத்தகால பிரச்சினைகள் எனவும் முழுநாட்டினது பிரச்சினைகள் எனவும் ஆணையாளர் பிள்ளே பிரித்துக்காட்டியுள்ளார். வெலிவேரிய சம்பவம், வடக்கை இராணுவமயப்படுத்தல், வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் பல மனித உரிமை பிரச்சினைகள் பற்றியும் அவர் பேசினார். இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் செயலிழந்து போனதன் பின்னணியில் ஆணைக்குழுக்கள் மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என அவர் கூறினார். 'ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என அவர் கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com