Contact us at: sooddram@gmail.com

 

றோய் ஜெயக்குமார், வைத்தியர் சிவமோகன், புளொட் பவான், செல்வம் அடைக்கலநாதன் நால்வருக்கும் வாக்களிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் !

(தமிழீழ உறவுகளுக்கு ‘தலைமைச்செயலக போராளிகள்’ விடுக்கும், ‘உரிமை சார்பு’ அறிவித்தல் இது!)

வைத்தியர் சிவமோகன்:

வன்னியில் நிலங்கள் குறுகிக்கொண்டு வந்தபோது கட்டாய திருமணங்கள் (இளவயது திருமணங்கள்) அவரவர் இஸ்டப்படி (விவாக சட்ட விதிகளை கடைப்பிடிக்காமல்) தாராளமாக நடந்தேறின.

‘கர்ப்பிணியாக இருந்தால் தேசப்பணிக்கு விடுதலை இயக்கம் தனது வாழ்க்கைத்துணைவரை அழைக்காது’ என்ற நூலிழை நம்பிக்கையில் வாழ்க்கைத்துணைவியரும் கர்ப்பம் தரித்தனர். ஆனால்... முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அந்த வாழ்க்கைத்துணைவியரில் பலர் நிறைமாத கர்ப்பிணிகளாகவே இருந்தனர்.

செட்டிகுளம் முள்கம்பி வேலிகளுக்குள் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட பின்னர் அவர்கள் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதில் சட்டச்சிக்கல்கள் இருந்தன. திருமண சான்றுப்பத்திரம் இல்லாததால் (இளவயது திருமணங்கள் என்பதால்) அது ‘சட்டவிரோத திருமணம் - சட்டவிரோத கருத்தரிப்பு’ என்ற பிரிவுகளுக்குள் பார்க்கப்பட்டதால் அவர்கள் மகப்பேற்றுக்கு தனியார் வைத்தியசாலைகளை நாடத்தொடங்கினர்.

வவுனியாவில் அன்றும் சரி - இன்றும் சரி மகப்பேற்றுக்கென அதிநவீன சத்திரசிகிச்சை வசதி வாய்ப்புகளுடன் இருக்கும் ஒரே தனியார் வைத்தியசாலை, சிவமோகனின் ‘அபிஷா' வைத்தியசாலை.

மாற்றுவதற்கு வேறு உடுபிடவைகளும் இன்றி, சொந்த ஊர் திரும்பி தமது வாழ்வாதாரத்தொழிலை மறுபடியும் தொடங்கும் வரைக்கும் தாக்குப்பிடிக்க முடியாதளவு பணத்துடன் ‘அபிஷா’ வைத்தியசாலையை தேடிச்சென்ற குடும்பங்களிடம், ‘பிச்சை எடுக்குமாம் அநுமான் அதை பிடுங்கித்தின்னுமாம் பெருமாள்’ எனும் கதையாய்… சிவமோகன் பணம் பிடுங்கினார்.

‘டொக்டர் எங்களிட்ட இப்போதைக்கு அவ்வளவுக்கு காசில்ல டொக்டர். இப்போதைக்கு இத வச்சுக்கொள்ளுங்க. நாங்க சொந்த ஊர்ப்போய் குடியேறியதும் முதல் வேலையா உங்கட பணத்தத்தான் திருப்பித்தருவம். உங்கட உதவிய நாங்க வாழ்க்க பூராவும் மறக்கமாட்டம் டொக்டர். ப்ளீஸ்… கெல்ப் பண்ணுங்க டொக்டர்.’ என்று இரந்து கெஞ்சியபோது…

‘முதல்ல கீழ 'றிசேப்சன்ல' காச கட்டுங்க. கட்டுனப்புறம்தான் பேசன்ட்ட (பிரசவம்) பார்ப்பன்’ என்று தயவுதாட்சண்யமின்றி நடந்துகொண்டவர்.

‘முகாமில நிவாரணம் தாறாங்கள் தானே, அந்த அரிசிய வித்துப்போட்டு வந்து காசக்கட்டுங்க.’ என்று ஈவிரக்கமின்றி கடிந்துகொண்டவர்.

‘பலத்த கெஞ்சல்கள், இரந்து கேட்டல்கள், அழுகைகள்’ எதுவும் எடுபடவில்லை என்றபோது, ‘நல்லபடி பிரசவம் நடக்கோனும். தாயும் பிள்ளையும் உயிர் பிழைக்கோனும்’ என்ற ஒரே காரணத்துக்காக, தாலிக்கொடி மற்றும் செயின்களை கழற்றி வைத்துவிட்டு பிரசவம் பார்த்துவிட்டுப்போன குடும்பங்களின் அவலத்தையும் எங்களால் ‘பாகம் இரண்டில்’ பதிவுசெய்ய முடியும்.

புளொட் பவான்:

இறுதிப்போரில் சிறீலங்கா அரச படைகளின் முற்றுகை வலயத்துக்குள்ளும் சரி, ஓமந்தை சோதனைச்சாவடியிலும் சரி ‘தாம் போராளிகள் - போராளிக்குடும்பங்கள்’ என்று அடையாளப்படுத்திக்கொண்டு இராணுவத்தினரிடம் சரணடையாமல், தத்தமது குடும்பங்களோடு குடும்பங்களாக - அங்கத்தவர்களாக கலந்திருந்து,

வவுனியா செட்டிகுளம் மெனிக்பார்ம், இராமநாதன், அருணாசலம், ஆனந்தகுமாரசுவாமி, கதிர்காமர், சோன்போர் முகாம்களில் தஞ்சமடைந்து மறைந்திருந்த போராளிகளை - போராளிக்குடும்பங்களை, இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்த பவான் தலைமையிலான புளொட் குழுவினர் ‘சல்லடை போட்டு சலித்து சலித்து தேடிப்பிடிப்பது போல’ பிடித்து, ஒரு கலக்கு கலக்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

இன்றுவரை அந்த போராளிகளுக்கு - போராளிக்குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

றோய் ஜெயக்குமார்:

இலங்கை வங்கி கணக்கின் இரகசிய தகவல்களை இராணுவ புலனாய்வாளர்களுக்கு வழங்கி, எமது விடுதலை இயக்கத்தின் மறைமுக நிதி செயல்பாட்டாளர்களான செந்தில்நாதன் சிவசங்கரி (வயது 22), முத்துலிங்கம் தேவிகா (வயது 25) இரு பெண் உறுப்பினர்களை 22 செப்ரெம்பர் 2008 அன்று நாங்கள் இழப்பதற்கு, சூத்திரதாரியாக செயல்பட்டதை ஏற்கனவே இங்கு பதிவிட்டிருந்தோம் அல்லவா?

செல்வம் அடைக்கலநாதன்:

இந்தியாவிலிருந்து தலைமன்னார் கடல்வழியூடாக போதைப்பொருள்களை (கேரளா கஞ்சா) வரவழைத்து, வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனையில் ‘தாதா’வாக, தமிழ்மொழி பேசும் இளைஞர் யுவதிகளின் வளமான வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருப்பவர். போதையற்ற வடக்கு மாகாணத்தை உருவாக்க விடாமல் மிரட்டிக்கொண்டிருப்பவர்.

இரண்டு தடைவைகள் (கொழும்பு - புத்தளம் வீதி, மதவாச்சி - மன்னார் வீதிகளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது) குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டு, அன்றைய பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ஸவின் கஸ்டடியில் சில வாரங்கள் வைக்கப்பட்டிருந்து ‘அரச நிகழ்ச்சிநிரலின்’ பிரகாரம் விடுவிக்கப்பட்டவர்.

இவரது போதைப்பொருள்கள் கடத்தல் - விற்பனை - ஊக்குவிப்பு தொடர்பில் வணக்கத்துக்குரிய மன்னார் ஆயரிடம் பலதரப்பட்ட முறைப்பாடுகள் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆயர் அவர்கள் எச்சரித்திருந்தும் கூட செல்வம் அடைக்கலநாதன், போதைப்பொருள்கள் கடத்தல் - விற்பனையை நிறுத்தியதாயில்லை. (ஏற்கனவே சம்பவம் தொடர்பில் இங்கு பதிவிட்டிருந்தோம்.)

2013ம் வருடம் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருக்கப்போவதாக ஊடகங்கள் மூலமாக பகிரங்கமாகவே அறிவித்து, தாயக - தமிழக - புலம்பெயர் உறவுகள் அனைவரது முகத்திலும் விபூதியால் பெரிய்…ய… நாமம் போட்டவர். பாரத நாட்டின் அகிம்சை வழி போலி முகத்திரையை கிழித்தெறிந்த எமது விடுதலை இயக்கத்தின் ‘தியாகச்செம்மல் திலீபன்’ அவர்களின் தியாகத்தை களங்கப்படுத்தி, ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ எனும் அறவழிப்போர் முறையை இழிவுபடுத்தியவர். நகைப்புக்குரியதாக்கியவர்.

கொலைஞர் கருணாநிதியின் மற்றுமொரு பசப்பு நாடகத்தை ஈழத்தில் அரங்கேற்றி தமிழ் மக்களுக்கு இழுக்கு சேர்த்தவர்.

முத்தாய்ப்பாக முதல் செய்தி:

நடிப்பு சுதேசிகளாகிய இந்த நால்வரையும் நிராகரித்து, தமது கடந்தகால செயல்பாடுகள் மூலம் சமுக நம்பகத்தன்மையை இழக்காதவர்களையும், தமது நல்லகுலப்பண்புகள் மூலமாக சமுக அந்தஸ்தை கொண்டிருப்பவர்களையும், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் - அரசியல் அபிலாசைகள் தொடர்பாக தெளிந்த பிரக்ஜையை கொண்டிருப்பவர்களையும் உங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுங்கள்!

(தமிழீழ உறவுகளுக்கு ‘தலைமைச்செயலக போராளிகள்’ விடுக்கும், ‘உரிமை சார்பு’ அறிவித்தல் இது!)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com