Contact us at: sooddram@gmail.com

 

கெவிளியாமடு கறுவாச்சோலையில் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடை செய்ய வேண்டும் - பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான - துரைரட்ணம்!

மட்டக்களப்பு கெவிளியாமடு கறுவாச்சோலைக் கண்டத்தில் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடை செய்து உரிமையாளர்களிடம் காணிகளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுனருக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கச்சைக்கொடி சுவாமிமலை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கெவிளியாமடு கறுவாச்சோலைக் கண்டம் 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டது. இக்காணிகளில் விவசாயக்காணியும், மேட்டு நிலப்பயிர்ச்செய்கைக்காணியுமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் உள்ளடங்கும்.

இவை அனைத்துக்கும் காணி ஒப்பம் வழங்கப்பட்டு விவசாயம் செய்து வந்தனர்.
1986, 1990 ஆம் ஆண்டும் ஏற்பட்ட இனக்கலவரம், யுத்தம் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இடம்பெயர்ந்த மக்கள் அரச அதிபர், பிரதேச செயலாளர், மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக சமாதான சூழ்நிலை ஏற்பட்டதன் பின்னர் 01.11.2009 ஆம் திகதியின் பின் மீண்டும் தங்களுடைய பகுதிக்குச் சென்று விவசாயச் செய்கையை ஆரம்பித்தனர்.

இவ்வேளையில் இதில் குறிப்பாக கறுவாச்சோலை கண்டத்தில் முழுமையாக 150 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயக் காணிகளில் பெரும்பான்மையினரைச் சேர்ந்த ஒரு சிலர் அத்துமீறி தமிழர்களின் காணிகளில் விவசாயம் செய்வதற் கான உழவு வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். இதன் காரணமாக இருசாராருக்குமிடையில் சில முரண்பாடுகளும் ஏற்பட்டன.

காணி உரிமையாளர் அத்துமீறி விவசாயம் செய்தவர்களுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இந்தப் போகத்துடன் நாங்கள் உங்கள் காணியை விட்டுத்தருவோம் எனக்கூறியதற்கிணங்க முரண்பாடுகள் வரக்கூடாது என்பதற்காக விட்டுக் கொடுத்து பொறுத்திருந்தனர்.

2010 ஆம் ஆண்டு பெரும்போகச் செய்கையை தமிழர்கள் ஆரம்பித்தனர்.
இதேவேளை மீண்டும், இரவோடு இரவாக இக்காணிகளில் அத்துமீறி சிலபெரும்பான்மையினர் நெல் விதைத்து விட்டனர்.
இது விடயமாக உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளும் போது பல பிரச்சினைகள் எழுகின்றன.

இவர்களுடன் பேசுவதனால் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு காணி உரிமையாளர்கள் 11.11.2010 வக்கியல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதைத் தொடர்ந்து பொலிசாரினால் அத்துமீறி விவசாயம் செய்தவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது. அரச அதிகாரிகளிடம் அதாவது பிரதேச செயலாளடம் சொல்லி உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என காணி உரிமையாளர்களான தமிழர்களிடம் ஆலோசனை சொல்லப்பட்டது.

காணி உரிமையாளர்களான சின்னத்தம்பி சோமசுந்தரம், சோமசுந்தரம் மாணிக்கவாசகம், இரத்தினம் அருளானந்தராசா, செல்லத்துரை யோகானந்தன், மார்க்கண்டு செல்லத்துரை, ஆறுகன் சண்முகநாதன், சின்னத் தம்பி கனகசூரியம், சின்னத்தம்பி வசந்தராசாபிள்ளை, மார்க்கண்டு பாக்கியராசா, மார்க்கண்டு சதாசிவம், சின்னத்தம்பி இளையத்தம்பி, சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை, காசுபதி சீனித்தம்பி, கந்தப்பன் சிவஞானம், வேலுப்பிள்ளை திலகேஸ்வரன், வேலுப்பிள்ளை யோகேஸ்வரன், கந்தப்பன் இராசதுரை, தங்கவேல் சிவசம்பு, வேலுப்பிள்ளை சின்னத்தம்பி, சின்னத்தம்பி இரத்தினசிங்கம், துரையப்பா இளங்கோ, கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை சோமசுந்தரம், கேசவிநாயகலிங்கம், மாசித்தார், இராசரெத்தினம், கனகரெத்தினராசா, சின்னத்தம்பி நேசராசா, இரத்தினம் துரைராசா இவர்களுடன் இன்னும் பலர் உள்ளனர்.

இவர்களுடைய காணிகளில் விதைப்பு வேலைகள் முடித்து உரம் எறியத் தொடங்கி விட்டனர். அத்துமீறி ஒரு சில வெளிப்பகுதியிலிருந்து வரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளனர். இப்பகுதியில் தமிழ் சிங்களக்குடும்பங்கள் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே தாங்கள் இதனைத் தடுத்து நிறுத்தி காணி உரிமையாளர்களுக்கு குத்தகையை வழங்க நடவடிக்கை எடுப்பதோடு அடுத்த போகம் செய்வதற்கு முன் காணி உரிமையாளர்களான தமிழர்கள் வேளாண்மை செய்வ தற்கு காணியை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து இவர்கள் விவசாயம் செய்வதற்கும் குடியிருப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். என
தனது கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com