Contact us at: sooddram@gmail.com

 

அரச அலுவலகத்துக்கு வருகை தரும் மக்களுக்கு நியாயம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு 2010 ஏப்ரல் மாதம் தாபிக்கப்பட்டதுடன் கெளரவ எஸ். பி. நாவின்ன அவர்களின் தலைமையில் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கொள்கையைத் தயாரித்தலின் பொருட்டு இதுவரையில் நிறை வேற்றியுள்ள வேலைகள் தொடர்பில் முதலில் எனது நன்றியை அவருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சமூக ஒருமைப்பாடு எனும் விடயமானது மிக எளிதான அல்லது இலகுவான பணி ஒன்றல்ல என்பதுடன் அது தனியாக ஒரு அமைச்சினால் நிறைவேற்றக்கூடிய பணியுமல்ல என்பதனைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். சமூக ஒருமைப்பாட்டை உருவாக்கும் முகமாக மொத்த அரச பொறிமுறையும் செயலாற்ற வேண்டும் என்பதுடன், அதற்கு எனது அமைச்சு வழிகாட் டுதலையும் முன்னணி வகித்தலையும் வழங்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

தேசிய மொழிகள் அதாவது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் சமூக ஒருமைப்பாட்டை உருவாக்கும் பாலமாக அமைப்பதற்கு நான் விரும்புகின்றேன். அந்தப் பாலத்தை உறுதியாக கட்டியெழுப்புவதற்கும் அத்துடன் அதனைப் பயன்படுத்துவதன் மூலம் சிங்கள, தமிழ்ச் சமூகங்களை ஒன்றிணைக்கும் பணியை வெற்றி கரமாக நிறைவேற்றுவதற்கும் எனது அமைச்சின் பத்தாண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதனை மிக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அத்தகைய பொறுப்புமிக்க பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதுடன் அமைச்சுப் பொறுப்புக்களும் கடமைகளும் எனக்கு புதிய அனு பவமான போதிலும் முடியுமான வரையில் அவற்றைச் செவ்வனே நிறைவேற்ற நான் எதிர்பார்க்கிறேன்.

அமைச்சின் இரு பிரதான விடயங்களில் ஒன்றானதேசிய மொழிகள்விடயத்தை நடை முறைப்படுத்தும் முகமாக அமைச் சினுள் சில நிறுவனங்கள் தாபிக் கப்பட்டுள்ளன.

அமைச்சினுள் தேசிய மொழிப் பிரிவு தாபிக்கப்பட்டிருப்பதுடன் அதன் மூலம் சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான தரவு சேகரித்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் தகவல்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான மேற்பார்வை, புலனாய்வு செய்தல் மற்றும் அதற்கு ஏற்புடைய தீர்மானங்களை எடுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றன. மொழிக் கொள்கைக்கு ஏற்புடைய சுற்ற றிக்கைகளை வெளியிடுதல் தொடர்பில் அரசாங்க நிர்வாக அமைச்சுடன் இணைந்து மொழிப்பிரிவு செய லாற்றுகிறது.

அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடையதாக வெளியிடப்பட்ட அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல. 03/07 இன் மூலம் அரசாங்க அலுவலர்களுக்கு இரு மொழித் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்ளுதலின் பொருட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்குவதற்கும் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல. 07/2007 இன் மூலம் 2007.07.01 ஆம் திகதியின் பின் அரச சேவைக்குச் சேரும் அலுவலர்கள் சேவையில் இணைந்து 05 வருடங் களுக்குள் இரு மொழித் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்தச் சுற்றறிக்கைகளை வெளியிடும் பொருட்டு அறிவுரை வழங்குவதன் மூலம் அமைச்சரவை விஞ்ஞாபனத்தைச் சமர்ப்பித்து பெரும் சேவையாற்றிய அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு முன்னாள் அமைச்சர் டியு குணசேகர அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர், சகல அரசாங்க நிறுவனங்களிலும் அரசகரும மொழிகள் அமுலாக்கும் பிரதான அலுவலர் மற்றும் அரசகரும மொழிகளை அமுலாக்கும் அலுவலர் ஆகியோரை நியமிக்கும் முகமாக 2009.02.02 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் 2009.09.25 ஆம் திகதிய 1620/27 இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் மற்றும் 2009.11.25 ஆம் திகதி 18 2009 இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கை மூலம் சகல அரச நிறுவனங்கள் பொருட்டு மேற் குறிப்பிட்ட அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.

அரசகரும மொழிகளை அமுலாக்கும் பிரதான அலுவலர்கள் மற்றும் அரசகரும மொழிகளை அமுலாக்கும் அலுவலர்கள் மூலம் அரச நிறுவனங்களில் உரியவாறு அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்பது பற்றி தேடிப்பார்த்தல் அமைச்சின் கீழுள்ள அரசகரும மொழிகள் ஆணைக் குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், புலனாய்வு செய்தல் மற்றும் முறைப்பாடுகளை விசாரணை செய்தல் என்பன அரசகரும மொழிகள் ஆணைக் குழுவினால் நிறைவேற் றப்படுவதுடன் தேவையானவிடத்து வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அத்துடன், அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகப் பல பரிந்துரைகள் அரசகரும மொழிகள் ஆணைக் குழுவினால் ஜனாதிபதி அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு தேவையான நடவடிக் கைகளை எடுத்தல் எனது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றுமொரு பணியாகும்.

அமைச்சின் கீழ் இயங்கும் அரசகரும மொழிகள் திணைக்களமும் அரசகரும மொழிக் கொள்கையை நடை முறைப்படுத்தும் முகமாக தாபிக் கப்பட்டுள்ள நிறுவனமொன்றாகும்.

2004 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சின் கீழ் இயங்கும் அரசகரும மொழிகள் திணைக்களம், அரச அலுவலர்களுக்கு மொழி வகுப்புக்களை நடத்துதல், மொழித்தேர்ச்சி பரீட்சைகளை நடத்துதல், மொழி பெயர்ப்பாளர்களை பயிற்றுவித்தல், மொழி ஆசிரியர்களை பயிற்றுவித்தல், அகராதிகளை தொகுத்தலும் அகரமுதலிகளை தொகுத்தலும் போன்ற பல நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இல சட்டத்தின் மூலம் இவ்வமைச்சின் கீழ் 2007 ஆம் ஆண்டில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் தாபிக்கப்பட்டதன் பிற்பாடு அரச அலுவலர்களின் பொருட்டு மொழிப் பயிற்சி வகுப்புக்களை நடத்துதல், மொழிபெயர்ப்பாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் மொழி ஆசிரியர்களை பயிற்றுவித்தல் போன்ற பணிகள் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தற்போது அரசகரும மொழிகள் திணைக்களம், அகராதிகளை தொகுத்தல், அகரமுதலிகளை தொகுத்தல் மற்றும் மொழித்தேர்ச்சிப் பரீட்சைகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மாத்திரம் நிறைவேற்றுகின்றது.

இருப்பினும், இந்நிறுவனத்தின் மூலம் மிகவும் பயனுறு சேவையைப் பெற்றுக்கொள்ளும் முகமாக முதலில் ஒவ்வொரு நிறுவனத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்களை அடையாளங் காணுதலும், அந்தக் குறித்த பணிகளை நிறைவேற்றும் முகமாக நிர்ண யிக்கப்பட்ட காலவரையறையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதும் அவதானிக்கப்பட்டன.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com