Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையின் எதிர்காலத்திற்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். தமிழ்த் தரப்பினர் மீது அரசாங்கம் நம்பிக்கை வைக்கவும், அரசாங்கத்தின் மீது தமிழ்த் தரப்பினர் நம்பிக்கை கொள்ளவும் கூட்டமைப்பின் மனமாற்றம் வழிவகுத்துள்ளதாகத் தமிழ்த் சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியால் மட்டுமே தீர்வொன்றை வழங்க முடியும் என்ற ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மனமாற்றம் வலுப்படுத்தி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு தலைமையில் அரசாங்கத் திற்குச் சமர்ப்பிக்கும் தீர்வு ஆலோசனை களுக்குச் சிங்களத் தலைவர்களின் ஆத ரவைப் பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறினர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதியமைச்சர்கள் பiர் சேகுதாவூத், முத்து சிவலிங்கம், ஐ.தே.க. எம்.பி. திருமதி விஜயகலா மகேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நல்ல ஓர் அறி குறியாகும். அவர்கள் முரண்பாட்டு அரசியலிலிருந்து விடுபட்டுள்ளார்கள். இதனூடாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஏற்படும்.

முதலில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசியல் தீர்வினையும் கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் தாய்மொழியில் கருமமாற்றவும் வழிசமைக்கப்படவேண்டும். அதன் பின்னர் தீர்வுக்கான முடிவை எடுக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு சாதகமாக செயற்படுவதன் ஊடாக அரசாங்கத்தின் மீது தமிழ்த் தலைவர்களுக் கும், இவர்கள் மீது அரசுக்கும் பரஸ் பரம் நம்பிக்கை ஏற்படும். அதன் பின்னர் அதிகாரங்களைப் பகிர்வதைப்பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு,

ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுவான தீர்வு ஆலோசனையை முன்வைக்க முடியும். அப்போது சிங்களத் தலைவர்களின் ஒத்து ழைப்பை நாம் பெற்றுக்கொடுப்போம். தீர்வு ஆலோசனையை முன்வைத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து முடிவு காணலாம்.

பிரதியமைச்சர் பiர் சேகுதாவூத்

தமிழ்த் தேசிய அரசியல் தருணத்திற்கு ஏற்ப முடிவுகளை மேற்கொண்டு பயணித் திருக்கிறது. இலங்கை தமிழரசுக் கட்சி காலோசிதமான முடிவுகளை இதற்கு முன்பும் மேற்கொண்டிருக்கிறது. அரசாங் கத்தின் வலுவும் போருக்குப் பின்னரான நிலையும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த மாற்றம் இலங்கைக்கு சாதகமான ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலிகள் இல்லாத நிலையிலும் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜனநாயக செயற்பாட்டை வலுவாக்க முடியும்.

அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பும் இரண்டு விடயங்களில் இணை ந்த குழுவாக செயற்பட இணங்கியுள்ளன. அரசியல் தீர்வினை ஆராய்வதற்கான ஒரு குழுவும், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாட்டுக்கான ஒரு குழுவும் செயற்படவுள்ளமையானத் ஆரோக்கியமான அரசியல் மாற்றமாகும்.

பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்

மக்களுக்கான அபிவிருத்தியை அரசாங் கத்துடன் இணைந்து செயற்படுத்த வேண் டும். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு மகிழ்ச் சியளிக்கிறது. அரசுக்கும் கூட்டமைப்புக்கும் சாதகமான புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக் கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

கூட்டமைப்பு இவ்வாறு செயற்பட வேண்டுமென்று பல தடவை கோரிக்கை விடுத்திருக்கிறேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விஜயகலா மகேஸ்வரன் ஐ.தே.க. எம்.பி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிப் படுத்தியுள்ள நல்லெண்ணத்தை அரசாங்கம் உரிய முறையில் மதித்துச் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் இனியும் உரி மைக்காகப் போராட முடியாது. அரசாங்கம் தமிழ் மக்களுடன் இனிமேலும் முரண் படாமல் உரிமைகளை வழங்கவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மக்களின் நலன் கருதிய செயற்பாட்டைத் தொடர வேண்டும்.

கிழக்கு முதல்வர் சி. சந்திரகாந்தன்

தமிழ் மக்களுக்கான சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசுக்கே முடியும் என்பதை தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுதியாக நம்புகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இன்று அரசுடன் இணைந்து செயற்பட முன்வந் திருப்பது இந்த நம்பிக்கையை மேலும் வலுவூட்டுவதாகவே நாம் கருதுகிறோம்.

இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களித்திருப்பது தாங்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு நிலை மையை உருவாக்கித் தரவேண்டும் என்ற காரணத்திற்காகவே என்பதை நாம் மறந்து விடமுடியாது.

எனவே, அந்தமக்களுக்கான தீர்வை எதிரணி அரசியல் செய்துகொண்டும் எந்நேரமும் அரசுடன் முரண்பட்டுக் கொண் டும் பெற்றுக்கொடுத்துவிட முடியாது. அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் பலம் வாய்ந்ததாக அமைந் துள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதிலும் அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளும் அரசுக்கு பூரண ஆதரவை வழங்குகிறது என்பது மிகவும் பாராட்டத்தக்க விடயம்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலி கள் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான ஆதரவின் காரணமாக அவர்கள் செய்த சில நியாயமற்ற அநீதிகளையும், நியா யப்படுத்த வேண்டியவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. எனி னும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்தது முதல் துணிச்சலாக புலிகளின் நியாயமற்ற செயல்களை கண்டித்தது.

(விசு கருணாநிதி, கே. அசோக்குமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com