Contact us at: sooddram@gmail.com

 

அரச அலுவலகத்துக்கு வருகை தரும் மக்களுக்கு நியாயம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்

தற்கமைய 2011 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்களை தெளிவாகவும் நிச்சயமாகவும் ஒப்படைக்கும் முகமாக மீள் கட்டமைப்பதற்கு எண்ணியுள்ளேன் என்பதுடன் எதிர்காலத்தில் குறித்த யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கும் எதிர்பார்க்கிறேன்.

ஜனாதிபதி அவர்களின் 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் விசேடமாக குறிப்பிட்டவாறு பத்தாண்டு செயல்திட்டமொன்றின் கீழ்மும்மொழி இலங்கைஎனும் நிகழ்ச்சித்திட்டத்தைச் செயற்படுத்தும் பொறுப்பும் எனது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு மற்றும் அரசாங்க நிர்வாக அமைச்சு உள்ளிட்ட மாகாண சபைகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் அந்நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து குறித்த நிகழ்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கிறேன்.

அதற்கு 200 மில்லியன் ரூபா தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பது தொடர்பாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிகழ்ச்சித்திட்டம் மூலம் சிங்கள, தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக அரச அலுவலர்களின் ஆங்கில மொழி அறிவு மேம்பாட்டையும் பாவனையையும் விருத்தி செய்யும் முகமாக அமைவதுடன் பொதுமக்கள் அவர்கள் விரும்பிய மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்கவும் முடியும்.

சமூக ஒருமைப்பாடு என்பதுசமூகத்தில் நிலவும் இன, மத, மொழி, குலம் மற்றும் பல்வேறுபட்ட அந்தஸ்து முதலிய சகல வரையறைகளின் மூலமும் ஒதுக்கப்பட்ட மக்கள் பகுதியினரின் பொருட்டு அவர்களது தனித்துவத்தைப் பாதிக்காது சமமான வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகளை வழங்குதல் மூலம் ஒருவருக்குகொருவர் மதிப்பளிக்கும் வரையறையற்ற சமூகம்ஒன்றை உருவாக்குவதாகும்.

அது மிகவும் கஷ்டமான பணியாகும். பெளதிக, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதைக் காட்டிலும் கஷ்டமான பணியாகும். அதற்கமைய சமூக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணி இவ்வமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது பெரும் சவாலாக பொறுப்பேற்பதற்கு விரும்புகிறேன்.

பெளதிக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இணையாக சமூக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணியையும் நிறைவேற்றாதிருப்பின் பல்வேறுபட்ட சமூக வர்க்கத்தினரிடையே நிலவும் இடைவெளியையும் அவநம்பிக்கையையும் இல்லாதொழித்தல் கனவு ஆகும்.

அதாவது வண்டி சுமுகமாக ஓடுவதற்கு இரு சக்கரங்களும் ஒன்றாக உறுதியுடன் இருத்தல் முக்கியமாவது போலவே அதற்கு சமமாக சமூக ஒருமைப்பாட்டினை உருவாக்கும் முகமாக மனிதர்களின் பெளதிக, சமூக தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதும் முக்கியமானதாகும்.

இந்த இரு தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்வதன் மூலம் ஜனாதிபதி அவர்களின் மஹிந்த சிந்தனை யதார்த்தமாகும் என்பது எனது நம்பிக்கையாகும். அவ்வாறெனில், நான் முன்பு குறிப்பிட்டவாறு ஏனைய அமைச்சுக்களின் ஒத்துழைப்பும் இதற்குத் தேவையாகும்.

எனது அமைச்சினுள் சமூக ஒருமைப்பாட்டுப் பிரிவு ஒன்று தாபிக்கப்பட்டிருப்பதுடன் அதன் மூலம் சமூக ஒருமைப்பாடு பற்றி பொதுமக்கள், அரச அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர் ஆகியோரை விழிப்பூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல், அமைச்சு அலுவலர்களின் கடமைகளை வினைத்திறனாக்கும் முகமாக அவர்களின் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தும் பயிற்சித்திட்டங்களை நடத்துதல், பல்வேறுபட்ட மக்கள் பகுதியினரிடையே கலாசார, மதசார் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல் அத்துடன் பொதுமக்களுக்குத் தேவையான ஆவணங்களான அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ் முதலியவற்றை பெற்றுக் கொடுக்கும் நாடளாவிய நடமாடும் சேவைகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் நிறைவேற்றப்படும்.

மேலும் இப்பிரிவு சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கையைத் தயாரிக்கும் பொருட்டான ஆரம்ப நடவடிக்கைகளை முடித்திருப்பதுடன் எதிர்காலத்தில் அது தொடர்பில் மக்களது கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நன்கொடையின் கீழ் பேணப்படுகின்ற நீதி நியாயத்தைச் சமமாக அணுகுதல் செயற்றிட்டத்தின் மூலம் சமூக ஒருமைப்பாட்டை உருவாக்கும் பணியை வெற்றிகரமாக்கிக் கொள்ளும் முகமாக பெரும் பங்களிப்பு அளிக்கப்படுகின்றது.

நீதி இல்லாத இடத்தில் சமாதானம் நிலவுவதில்லை என்பதுடன் சமாதானம் இல்லாத இடத்தில் சமூக ஒருமைப்பாடும் நிலவுவதில்லை. மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரேயொரு இடம் நீதிமன்றம் இல்லை என்பதுடன் ஏதேனும் நபரொருவர் மற்றுமொரு நபர் சார்பாக நீதியை நிறைவேற்றும் ஆற்றலுண்டு.

அரச அலுவலகத்திற்கு வருகைதரும் நபரொருவருக்கு உரிய இடத்தில் நீதி கிடைக்காவிடின் பொலிஸ், நீதிமன்றம் போன்ற நிறுவனங்களிடம் நீதியை தேடிச் செல்ல நேரிடும். இது தொடர்பில் மக்களை விழிப்பூட்டுதல், ஊக்கு வித்தல், வலுவூட்டுதல் என்பன நீதி, நியாயத்தை சமமாக அணுகுதல் செயற்றிட்டம் மூலம் நிறைவேற்றப் படுகின்றன.

சட்டம் பற்றி பொதுமக்களை விழிப்பூட்டுதல், சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றுக்கொடுத்தல், சட்ட ரீதியான ஆவணங்களை தயாரித்தல் போன்ற பொதுமக்களுக்கு நியாயத்தை நிறைவேற்றுதல் தொடர்பில் அரச அலுவலர்களை விழிப்பூட்டுதலும் நீதி நியாயத்தைச் சமமாக அணுகுதல் செயற்திட்டம் மூலம் நிறைவேற்றப்படுகின்றது.

விசேடமாக யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள், பெண்கள், பிள்ளைகள், தோட்டப்பகுதி மக்கள், சிறப்புரிமையற்ற குழுக்கள் போன்றவர்களுக்கு இச்சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் இச்சேவையை மென்மேலும் விஸ்தரிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.

2004 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைச்சுக்குப் பெற்றுக்கொடுத் துள்ள மட்டுப்படுத்தப்பட்ட நிதியேற்பாட்டு அளவின்படி பல சிரமங்களுக்கு மத்தியில் இந்நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு நேரிட்டது. இருப்பினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்திலிருந்து இவ்வமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியேற்பாட்டு அளவை அதிகரிப்பதன் மூலம் எனது அமைச்சின் பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளார் என்பது தெளிவு.

அதற்கமைய 2011 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சின் பொறுப்பினை மிகவும் பரந்தவாறு வினைத்திறனாக முன் கொண்டு செல்வதற்கும் சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கும் எமது ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப் பதற்கும், அதன் மூலம் மஹிந்த சிந்தனையின் எதிர்கால இலக்கை அடைவதற்கும் திடசங்கற்பத்துடன் தொழிற்படுவேன் என கூறிக்கொண்டு உரையை முடித்துக் கொள்கிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com