Contact us at: sooddram@gmail.com

 

லண்டனில் புலம் பெயர்ந்தோரின் செயற்பாடு

ஜனநாயக விழுமியங்களை மீறும் செயல்

இலங்கையிலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எங்கள் நாட்டின் 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் பக்க விளைவுகளி னால் தங்களுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புக்களில் இருந்து வாழ்க்கையை மீண்டும் புதிதாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இலங்கையில் மீண்டும் இனங்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் இன்றைய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பும் நல்கி வருகிறார்கள்.

ஆயினும், பிரிட்டனில் வாழும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தீய சக்திகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் மாநகரில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தில் நிகழ்த்த இருந்த உரைக்கு தடை ஏற்படுத்தக் கூடிய வகையில் முட்டுக்கட்டைகளை விதித்தமை, உண்மையிலேயே வேதனைக்குரிய கண்டிக்கக் கூடிய விடயம் என்று கொழும்பு மாநகரின் முன்னாள் பிரதி மேயர் எம். அஸாத் எஸ். சாலி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அஸாத் சாலி மன்றத்தின் தலைவரான இவர், ஜனநாயக பாரம்பரியத்தின் தாயகம் என்று பெருமையாக தன்னைப் பற்றி பறைசாற்றிக் கொள்ளும் பிரிட்டன், ஜனநாயக பாரம்பரியத்திற்கு ஏற்புடைய வகையில், எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இனப் பிரச்சினைக்கு எடுக்கவுள்ள சட்டபூர்வமான, நியாயமான நடவடிக்கைகள் என்ன என்பதை முழு உலகத்திற்குமே விளக்கி கூறுவதற்கு எடுத்த முயற்சியை தடை செய்வதற்கு உதவியுள்ளது.

அதற்கு, பிரிட் டனில் உள்ள சில தமிழ் அதிருப்தி யாளர்களும், புலிகளின் ஆதரவாளர்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்த தேசத் துரோக சக்திகளும் செயற்பட்டமை உண்மையிலேயே வேதனைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதிகளினால் நாட்டில் ஏற் படுத்தப்பட்ட ரத்தக் களரியைப் போக்கி, மீண்டும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி, நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவ்விதம் துரோகமிழைப்பதை ஜனநாயகத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ள எவரும் அங்கீகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் இரு தரப்பிலும் உயிரிழந்தும், ஊனமுற்றும் வேதனைகளை அனுபவித்து இருக்கிறார்கள். இந்த பயங்கரவாத யுத்தத்தின் போதே, எங்கள் நாட்டின் இனங்களிடையே பகைமை யுணர்வும், நம்பிக்கையின்மையும் வலுப் பெற்று விளங்கியது.

ஆயினும், இப்போது சமாதானம் ஏற்பட்டிருக்கின்றதனால், இலங்கையில் உண்மையான இன ஒற்றுமை தோன்றியிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி நாட்டில் உண்மையான சமாதானத்தையும், பொருளாதார வளர்ச் சியையும் ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்து வரும் ஜனாதிபதி அவர்களுக்கு, இத்தகைய முட்டுக்கட்டைகளை விதிப்பவர்களுக்கு நிச்சயம் மக்களின் ஆதரவு கிடைக்காது என்றும் அஸாத் சாலி கண்டனம் தெரி வித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு வெளி நாட்டில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் இத்தகைய சதிமுயற்சி கள், இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்கும் செய்யும் அபகீர்த்தியாகவும், மன்னிக்க முடியாத தேசத் துரோக செயற்பாடாகவும் நாம் கருத வேண்டும்.

இவ்விதம் தேசிய இன உணர்வின்றி, தங்களின் சொந்த நன்மைக்காக, வெளிநாடுகளில், அகதி அந்தஸ்துடன், வேதனைகளை அனுபவித்து வரும் ஒரு சில அடிவருடிகளின் இந்த தீய செயற்பாட்டினால், வெளிநாடுகளில் உள்ள எல்லா புலம் பெயர்ந்த தமிழ் மக்க ளுக்கும் நன்மைக்கு பதில் தீமையையே ஏற்படுத்தும் என்றும் அஸாத் சாலி தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தேசத்தில் இனங்களிடையே பிரிவி னையும், பகைமை உணர்வும் நிலவினால் அந்த நாடு முன்னேற்றம் அடைவது சாத்தியமல்ல. இன ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே எமது நாட்டின் தனித்துவத்தையும், கலாசார பாரம்பரியங்களை பேணிப்பாதுகாத்து, நன்மையடைய முடியும் என்றும் குறிப்பிட்டு இருக்கும் அஸாத் சாலி, மறப்போம் மன்னிப்போம் என்ற நல்லுணர்வுடன், கடந்த கால விளைவுகளினால் நாம் பெற்ற பாடத்தை பயன்படுத்தி, இனங்களிடையே நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இன்று, நாட்டில் இன ஒற்றுமை யையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கள் நேசக்கரத்தை நீட்டியுள்ளார்கள்.

ஆகவே, ஜனாதிபதிக்கு எதிரான இத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களுக்கு இனிமேலாவது வெளிநாடுகளில் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என்றும் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்திலாவது பிரிவினை வாதிகளையும் புலிகளையும் ஆதரிக்கும் தேசத்துரோக செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் அஸாத் சாலி மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com