Contact us at: sooddram@gmail.com

 

பிரபா தான் நினைத்ததையே செய்தார், ரஜீவ்காந்தியின் கொலை பாரிய தவறு

பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத அரசியல் தீர்வே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் - நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரதியமைச்சர் முரளிதரன்

பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத வகையில் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டமே சமூகங்களு க்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூ டியதாக அமை யும் எனப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன  ெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத அரசியல் தீர்வு அவசியம். தற்பொழுது மாகாண சபைகள் ஊடாகவே தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்தந்த மாகாண மக்களே சுயமாக ஆட்சி செய்யக்கூடிய வகையில் அதிகார ங்களை வழங்கினால் அது திருப்திகரமான தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையின் அமர்வில் சாட்சிய மளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் சாட்சியமளித்த அவர்.

மாகாண சபைகளுக்கு தேவையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனச் சில கட்சிகள் கோரி க்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் கூறி வருகின்றன. இவ்வாறான கோரிக்கைகள் தேவையற்றவை. இலங்கை ஒரு மிகவும் சிறிய நாடு இவ்வாறான அதிகாரங்களை வழங்குமாறு கோருவதானது பெரும்பான்மை சமூகத்திற்கு மீண்டும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ் மக்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி சிறந்த கல்வி வசதிகளை வழங்கி தமிழ் மக்களுக்கும் சமநிலைப் பதவிகளை வழங்குவதன் மூலம் தமிழர்களைத் திருப்திப்படுத்த முடியும். கடந்த காலங்களில் தமிழர்கள் பலர் உயர் பதவிகளிலிருந்தார்கள். ஆனால், 30 வருடங்களாகத் தொடர்ந்த போர்ச் சூழல் காரணமாக தமிழர்களுக்கான பதவி வாய்ப்புக்கள் குறைந்துள்ளன. தமிழர்களுக்கு மீண்டும் சமநிலைப் பதவிகள் வழங்கும் சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்திருக்கின்றன. முதலில் அவர்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்க் கட்சிகள் தனித்து நின்று கோஷங்களை எழுப்பாமல் ஜனாதிபதியுடன் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும். ஜனாதிபதி அதற்குத் தயாராகவே உள்ளார். தமிழர்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகவே உள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ ஏனைய கட்சிகளோ இதனை விளங்கிக் கொள்ளாமல் சத்தமிடுகின்றன.

மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கில் மோதல்களால் கணவன்மாரை இழந்த 80 விதவைகள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பு வதற்கான பல்வேறு செய்திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து நடைமுறைப்படுத்தியிருப்பதுடன், ஏனையவர்களுக்கான உதவிகளும் வழங்கப்படும்.

காத்தான்குடி பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் குடும்பங்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ஜனாதிபதியுடன் பேசியுள்ளார். நானும் இது பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன்.

1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்தே நான் உட்பட தமிழ் இளைஞர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டோம். எனினும், 2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இணக்கம் காணாததைத் தொடர்ந்து அந்த அமைப்பிலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு எனது ஆதரவை வழங்கி வருகின்றேன்.

2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும், அதற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அர்ப்பணிப்புடன் கலந்து கொள்ளவில்லை. எப்பொழுது புலிகள் பலவீனம் அடைகிறார்களோ அப்போது சமாதானப் பேச்சுக்குச் செல்வார்கள். பின்னர் தம்மைப் பலப்படுத்திய பின்னர் போராடுவார்கள்.

2002ம் அண்டு நடைபெற்ற 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நான் கலந்து கொண்டிருந்தேன். இப்பேச்சுவார்த்தையில் ஏதாவது ஒரு தீர்வுக்குச் செல்லவேண்டும் என எமது குழுவுக்குத் தலைமை தாங்கிய அன்ரன் பாலசிங்கத்திடம் நான் வலியுறுத்தியிருந்தேன். ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சமாதானப் பேச்சுக்களைத் தொடரமுடியும் என்பதால் சமஷ்டித்தீர்வைக் கவனத்தில் கொள்வது என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு நான் வலியுறுத்தினேன்.

எனினும், பாலசிங்கமும் ஏனையவர்களும் அஞ்சினார்கள். நான் பிரபாகரனுடன் பேசுகிறேன். நீங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுங்கள் என்று கூறியே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நாடு திரும்பிய பின்னர் அவ்வொப்ப ந்தத்தை நான் பிரபாகரனிடம் கையளித்தேன். ஆத்திரமடைந்த அவர் ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்ததுடன், தமிழ் மக்களை நான் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். அதன் பின்னரே நான் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி ஜனாதிபதியுடன் இணைந்து சமாதானத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தேன்.

மோதல்கள் மூலம் வெற்றி கொள்ளமுடியாது. வன்முறைகளைக் கைவிட்டு ஏதாவது ஒரு தீர்வை நோக்கிச் செல்வோம் என பல தடவைகள் நான் பிரபாகரனுக்குத் கூறியிருந்தேன். ஆனால், அவர் எவற்றையும் செவிமடுக்கவில்லை. தான் நினைத்ததை மாத்திரமே நிறைவேற்றினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்தமையே புலிகள் செய்த பாரிய தவறு.

கடந்த கால அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களைச் சரியாகப் புரிந்து செயற்படவில்லை. பிழையாக விளங்கிக் கொண்டமையாலேயே மோதல்கள் உக்கிரமடைந்தன. தமிழ்த் தலைவர்களும் இனவாதத்தையே தூண்டிவிட்டனர்.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயத்தை நன்கு புரிந்து கொண்டு செயற்பட்டார். புலிகள் இயக்கத்துக்குப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கிய போதும் அவர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி அவகாசம் வழங்கவில்லை. அவர்களை அழிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகச் செயற்பட்டமையால் புலிகளை ஒழிக்கமுடிந்தது.

அதேநேரம், வடபகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. +yரி!Z எதுவும் நடைபெறவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் வசித்த மக்கள் தமது சொந்த இடங்களில் சென்று வாழ விரும்புகின்றனர். அவர்களைள நாம் மீள்குடியமர்த்த வேண்டும். தமது சொந்தக் காணிகள் பற்றிய ஆவணங்களைக் கொண்டவர்கள் அவர்களின் இடங்களில் குடியமர்த்தப்படுகின்றனர். அரசாங்கக் காணிகளில் அவர்களைக் குடியமர்த்துங்கள் என ஜனாதிபதியோ வேறு யாருமோ எமக்குக் கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com