Contact us at: sooddram@gmail.com

 

இந்திய இடதுசாரிகள  அணிக்கு எதிராக  அமெரிக்கா சதி - விக்கி லீக்ஸ்

2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் முக்கிய பங்கு வகித்த மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட் டுள்ள புதிய தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத் தின்போது மக்களவையில் 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள், மதவெறி பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுக் கும் பொருட்டு, ஐ.மு.கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இந்நிலையில் இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியதோடு மட்டுமின்றி மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டில் கையெழுத்திட முயன்றது.

இந்திய நாட் டின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகுவைக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் கொந்தளிப்புடன் போராட்டம் நடத் தின. எனினும், அமெரிக்காவின் ராணுவ ரீதியான இளைய கூட்டாளியாக மாறுவது என்ற சீரழி வான கொள்கையை அமல்படுத்தும் விதமாக மன்மோகன் சிங் அரசு அணுசக்தி உடன்பாட் டில் கையெழுத்திட்டது. இதை எதிர்த்து, இடது சாரி கட்சிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றன. எனினும் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவினை வாங்கி, நாடாளுமன்றத் தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மன் மோகன் அரசு தப்பிப்பிழைத்தது.

இத்தகைய அரசியல் பின்னணியில் 2009ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தல் நடைபெற் றது. இத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு எதிராகவும் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகளை இடதுசாரிக் கட்சிகள் ஓரணியில் திரட் டின. சிபிஎம், சிபிஐ, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள், அதிமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் ஓரணியில் திரண்ட மூன்றாவது மாற்று அணி உதயமானது.

இந்த மூன்றாவது மாற்று அணிக்கு மக்கள் மத் தியில் பெரும் வரவேற்பு எழுந்தது. இந்த சூழலி லேயே இந்திய அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்த அமெரிக்க தூதரகம், இடதுசாரிகளின் முக்கியப்பங்குடன் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பதட்டத்துடன் சதிச் செயல்களில் ஈடுபட்டது.

இந்த விவரங்களை தற்போது விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், 2009 பிப்ரவரி 12ம் தேதி ஒரு ஆய்வு அறிக்கையை தயா ரித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளி கைக்கு அனுப்பியது. அதில் காங்கிரசோ அல் லது பாஜகவோ தங்களது சொந்த பலத்தில் ஆட் சிக்கு வர முடியாத நிலையில், “காங்கிரசும், பாஜகவும் இல்லாத ஒரு அரசைமூன்றாவது அணிஅமைக்குமானால் அது அமெரிக்கா-இந் தியா உறவை மிகக்கடுமையாக பாதிக்கும்என்று கூறியிருந்தது. மேலும், “அப்படி ஒரு அரசு அமையுமானால், அந்த அணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப்பெரும் செல்வாக்கினை பெற்றி ருக்கும் எனத் தெரிகிறதுஎன்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அந்தக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

மக்களவைத் தேர்தல் 2009 ஏப்ரல்-மே மாதத் தில் நடைபெற்றது என்பது நினைவுகூரத்தக்கது.

வெள்ளை மாளிகைக்கு தூதரகம் சார்பில் அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், இந்தியாவுக் கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்டு கை யெழுத்திட்டிருந்தார். அத்துடன் அமெரிக்கா - இந்தியா இடையிலான நெருக்கமான உறவுக்கு பாஜகவும் காங்கிரசும் முழுமையான ஆதரவு தெரி வித்து வருபவர்கள் என்று தனது கைப்பட குறிப் பையும் எழுதி முல்போர்டு இந்த அறிக்கையை அனுப்பினார் என்ற விவரத்தையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத்தூதர் முல்போர்டு எழுதிய அறிக் கையில், அணுசக்தி உடன்பாட்டை செயல் படுத்துவதற்கு இந்தியா இன்னும் பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டியுள்ளது என்றும், சர்வதேச அணுசக்தி முகமையின் அணுஉலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒப் பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தியாவுடனான இந்த ஒத்துழைப் பின் வர்த்தக லாபங்கள் எத்தகையவை என்பது குறித்து அமெரிக்கா முழுமையாக உணரவேண் டும்; அமெரிக்க நிறுவனங்களுக்காக அணு உலைகள் அமைப்பதற்கான இடங்களை கண்ட றிந்து, அதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்வோம் என்ற தனது உத்தரவாதத்தை இந்தியா கட்டாய மாக நிறைவேற்ற வேண்டும்; காப்புரிமை பாது காப்பு, அணுவிபத்து பொறுப்பை ஏற்பதிலிருந்து விலக்கு போன்ற தொழில் ரீதியான அமெரிக்கா வின் கவலைகளையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்என்றும் முல்போர்டு தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இருநாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதன் மூலம் அமெரிக்க கம்பெனிகளுக்கு 150 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இது அடுத்த 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பயன்படும் என்றும் முல்போர்டு தனது அறிக்கை யில் கூறியிருந்தார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள புதிய விவரங்க ளில் மேற்கண்ட அனைத்து அம்சங்களும் முழு மையாக அம்பலமாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அலுவலகங் கள் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா எப்படியெல்லாம் பகிரங்கமாக தலை யிட்டது, சதி செய்தது என்ற விவரங்கள் வெளி யாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சனிக்கிழமை வெளி யிட்ட அறிக்கையில், இந்திய அரசியலில் அமெ ரிக்கத் தூதரகம் அத்துமீறி தலையிட்டு, தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவாக இந்தியா வின் இறையாண்மையை சிதைக்க முயற்சித் ததை கடுமையாக கண்டித்துள்ளது.

இந்திய மக்களின் விவாதத்தை வீழ்த்திவிட்டோம்

தேர்தல் தொடர்பாகவும், மேற்கண்ட இரண்டு கட்சிகள் தொடர்பாகவும் அமெரிக் காவின் சிறப்புப்பிரதிநிதி ரிச்சர்டு ஹால் புரூக் (சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்), இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் வெள்ளை மாளிக்கைக்கு அனுப்பிய தகவலில், காங்கிரசோ அல்லது பாஜகவோ இந்தியாவி லுள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அரசு அமைத்தால், அக்கட்சிகள் இந்தியா-அமெரிக்க உறவை மேலும் தீவிரமாக கொண்டு செல்ல முடியும் என்றும் ஏனென்றால் சிறிய கட்சிகள் குறுகிய நிகழ்ச்சி நிரலையே கொண்டிருப்பதால் இதில் தலையிட முடியாது என்றும், வெளியுறவுக் கொள்கைகளில் தலையிடும் அளவிற்கு அவை தங்களது நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்திக்கொள்வதில்லை என்றும் கூறியிருந்தார். இதுவும் விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலமாகியுள்ளது.

மேலும், இந்தியா-அமெரிக்கா இடையி லான அணுசக்தி உடன்பாடும், மிக நெருக்க மான ராணுவ ரீதியான உறவுகளும் துரிதப்படுத் தப்பட்டு வருவது இந்தியாவில் மிகப்பெரிய அளவிற்கு பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட் டுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்ட ஹால்புரூக், “இந்த விவாதத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம்; அதன் விளை வாக அமெரிக்க-இந்திய உறவுக்கு ஒரு வலு வான அடித்தளம் இடப்பட்டுள்ளது; இது வரும் ஆண்டுகளில் மேலும் உறுதியாக வளரும்என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com