Contact us at: sooddram@gmail.com

 

மன்னார் மாவட்ட அரச நியமன விவகாரம்

தமிழ் கூட்டமைப்பு எம்.பியின் குற்றச்சாட்டு தமிழர்-முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட முகாம் அதிகாரிகளே மன்னார் மாவட்டத்தில் தமது மீள்குடியேற்றத்தின் பின்னர் உரிய நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி அரச நியமனங்களை பெற்றுள்ளனர் என வட மாகாண மஜ்லிஸ¤ல் சூறா அமைப்பின் தலைவர் மெளலவி எம். ஏ. எம். முபாறக் றசாதி தெரிவித்துள்ளார். இந்த நியமனம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிளவுகளை தோற்றுவித்து விடும் நிலையேற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக மஜ்லிசுல் சூறா அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில், கூறியதாவது,வடக்கில் தமிழ் - முஸ்லிம் உறவு மீண்டும் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் எமது உறவை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கும் நிலையில் அந்த பலத்தைவலுவிழக்கச் செய்கின்ற கைங்கரியங்களில் தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுவார்கள் எனில் அது எமது இரு சமூகத்துக்கும் கிடைக்கும் தீர்வினை மழுங்கடிக்கச் செய்துவிடும் ஒன்றாகவே காண முடிகின்றது.

தற்போது பேசப்பட்டுவரும் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அரச நியமனங்கள் குறித்து சில தகவல்களை தெளிவுப்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். அந்த வகையில், 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களது நலனை கவனிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் புத்தளத்தில் வடக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

ந்த காலத்தில் இருந்து சுமார் 10 வருடங்களாக முகாம்களில் வாழும்மக்களின் பணிகளை இலகுபடுத்தி அரசாங்கத்தின் சகல சட்ட திட்டங்களுக்கமைய முகாம் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர் அனைவரும் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களே.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கமைய புத்தளத்தில் இயங்கிய அந்த செயலகத்தை மூடிவிடுவதுடன், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வட மாகாணத்தில் அவர்களது சொந்த பிரதேசங்களில் பணியாற்றுவதற்கான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வகையில் அமைச்சர்களான மில்ரோய் பெர்னாண்டோ மற்றும் ஏ. எல். எம். அதாவுல்லா ஆகியோரினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், ஒன்றிணைந்த முகாமைத்துவ சேவை திணைக்களத்தினால், உரிய தாராதரங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்த நியமனங்கள் அரச சட்டங்களுக்கமைய வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் செல்வாக்கு அல்லது ஒரு இனத்துக்கு மட்டும் முன்னுரிமையென்று எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்பதை தெளிவாக கூறிகொள்ள விரும்புகின்றேன்.

மன்னார் மாவட்டம் 90 சதவீதமான தமிழர்களைக் கொண்ட ஒரு மாவட்டம் எனக் கூறப்பட்ட போதும் 1990 ஆம்ஆண்டிற்கு முன்னர்அங்கிருந்த முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர், 1981 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 27 சதவீதமான முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 வருடத்தின் பின்னர் தமது மண்ணில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெற்றிருக்குமெனில் அதிகரித்த சதவீதத்தையே காணமுடியும். இந்த யதார்த்தத்தை அங்கு வாழும் தமிழ் மக்கள் புரிந்துள்ள நிலையில் அவர்களின் உள்ளத்தில் இன ரீதியாக பிளவுப்பட்டு மீண்டும் சந்தேகத்துடன் வாழும் நிலையை தோற்றுவிக்க முற்பட வேண்டாம் என்பதை கேட்டுக் கொள்கின்றேன்.

அதே வேளை, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதால் கடந்த 20 வருட காலத்தில் வடக்கில் எத்தனை முஸ்லிம்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்காமல் இருப்பது வேதனை தருகின்றது. அதே போல் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்த மக்கள், அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களிலும் நியமனங்களை பெற முடியாத நிலையே இருந்துவந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தற்போதைய மன்னார் மாவட்டத்தில் கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம். எம். சியான் அவர்கள் சிறந்ததொரு கல்விமான். குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் தாராபுரத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

இந்த நிலையில் எவ்வாறு இவர் வெளிமாவட்ட கல்வி பணிப்பாளராக இருக்க முடியும். பிழையான தரவுகளை தெரிவித்து, மன்னாரின் இயல்பு நிலையை சீர்குலைக்க வேண்டாம். மக்கள் பிரதிநிதிகள் மிகவும் நேர்மையாக நிதானமாக செயற்பட வேண்டும். அப்பாவிமக்களை உசுப்பேத்தி மீண்டும் அவர்களை பலிக்கடாக்களாக ஆக்கும் கைங்கரியத்தை அத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு மிகவும் கெளரவமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

இம்மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த முஸ்லிம்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்டனர். இன்று அந்த பணியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்கின்றது. மன்னாரில் பிறந்தவன் மன்னாரில் அரச அதிகாரியாக கடமையாற்ற முடியாதா என கேட்க விரும்புகின்றேன். வரலாறு தெரியாமல் குறுகிய இனவாதத்துடன் செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

கல்விப் பணிப்பாளர் எம். எம். சியானின் நியமனம் முறையாக இடம்பெற்றதொன்று. சகல தராதரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒருவர், ஒரு அரசாங்க அதிகாரி அரசாங்கம் எப்பகுதிக்கு சென்று பணியாற்றுமாறு கூறுகின்றதா, அப்பகுதியில் அவர்சென்று கடமையாற்ற வேண்டும் என்பது பொதுநியதியாகும்.

எந்த மாவட்டமோ மாகாணமோ ஒரு தனி குழுவுக்கு என பிரித்து வழங்கப்படவில்லை. அவ்வாறான பிரிவினைவாத கருத்துக்களை விதைப்பதனால், எமது மாவட்டம் இன்னும் பின்தங்கிய பிரதேசமாகவே இருக்குமே தவிர எவ்வித நன்மையையும் அடைந்து கொள்ளாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com