Contact us at: sooddram@gmail.com

 

பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தம்

பொதுமக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்தே நடவடிக்கை - இலங்கை அரசு

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான இறுதி யுத்தத்தின்போது பொது மக்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான ஒரு கொள்கைத்திட்டமொன்றும் வகுக்கப்பட்டிருந்தது. எந்நேரத்திலும் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த நடவடிக்கைகள் மிகவும் நிபுணத்துவம் மிக்கதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தும், புலிகளின் கட்டுப்பாட் டுக்குள்ளிருந்த மக்களை விடுவிப்பதற்கு படையினர் உத்திகளை மிகவும் நுணுக்கமாகக் கையாண்டுள்ள னர் என்றும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இறுதி யுத்தத்தின்போது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினர், வேண்டுமென்றே தமது படை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தியிருந்தனர். மோதலின்போது பொதுமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே படையினர் இந்த உத்திகளைக் கையாண்டிருந்தனர் என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒருபோதும் பொது மக்களை படையினர் இலக்குவைக்கவில்லை என் பதை இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கப் பாடு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வை தொடர்ந்து சபாநாயகரின் அனுமதியைப் பெற்று அரசாங்கத்தின் சார்பில் விசேட உரையை நிகழ்த்திய பின்னர் இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கப்பாடு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தன் அறிக்கையை 388 பக்கங்களிலும் அதற்குரிய இணைப்புகளை 375 பக்கங்களிலும் உள்ளடக்கி இருபாகங்களை முன்வைத்துள்ளது. இந்த இரு பாகங்களையும், அவற்றின் சுருக்க அறிக்கையை மூன்று மொழிகளிலும் கொண்ட ஆவணங்களையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் சமர்பித்தார்.

இந்த அறிக்கையைச் சமர்பித்த அமைச்சர், இதன் பிரதிகள் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று (நேற்று) பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் சபையில் அறிவித்தார்.

இந்த அறிக்கையை சமர்பிப்பதன் நிமித்தம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் உரையாற்றுகையில், “பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாக இருந்தது. இச்சந்தர்ப்பத்தில் சகலரும் ஒன்றுபட்டு சிந்திக்கவும், மோதலினால் அனுபவித்த வேதனைகளை மறந்து சகலரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பண்பை கட்டியெழுப்புவதும் அவசியமாக விளங்கியது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி இந்த ஆணைக்குழுவை நியமித்தார். இக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு தமது அறிக்கையை கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இந்த ஆணைக்குழுவினர் தமது பணியை பொறுப்புடனும், நேர்மையுடனும் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் அதன் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக இடம்பெற்ற மோதலின் போது பொதுமக்கள் இலக்கு வைத்து தாக்கப்படவில்லை என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. படை நடவடிக்கை அதற்குரிய ஒழுங்கு விதிகளுக்கு அமைய இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கின்றது.

இருப்பினும் இந்நடவடிக்கையின் போது எவராவது வரம்பு மீறலுக்கு முகம் கொடுத்திருப்பாராயின், அதற்கான சான்றாதாரங்கள் இருப்பின் அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வீடியோ காணொளி காட்சிகளின் உண்மை நிலை உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை என்பன தொடர்பாக நிலவும் சகல சந்தேகங்களையும் களைவதற்காக சுயாதீன புலன் விசாரணை நடத்துமாறும் ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பில் எழுகின்ற ஐயங்களை முற்றாக நீக்குவதற்காக ஒவ்வொரு விடயத்தினதும் உண்மை நிலையைக் கண்டறிவது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான விடயமாகும். அந்த வகையில் சட்ட மீறல்கள் குறித்த நம்பத்தகுந்த சாட்சியங்கள் எவையேனும் இருப்பின், இந்நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அவற்றிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அரசாங்கம் பல தடவைகள் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதேவேளை சில குறிப்பான சம்பவங்களை சுட்டிக்காட்டி அச்சம்பவங்கள் இடம்பெறுவதற்குத் தூண்டுதல் அளித்த காரணிகள் குறித்து ஆராய்வது உசிதமானது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டிருக்கின்றது. இச்சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி தவறு இழைத்துள்ளமை நிரூபணமானால் சட்ட ரீதியான தண்டனைக்கு உட்படுத்துவது உகந்தது என்பதில் அரசாங்கம் வசதியாக உள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பான உன்மைத் தகவல்களை திரட்டுவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பொறிமுறையொ ன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கு வலுவான புலனாய்வு கட்டமைப்பு ஒன்றின் உதவியொன்றையும் பெற்றுக் கொடுத்து, அதனை தொழிற்படச் செய்வதே இப்போதைய சூழலில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான பணியாகும். இதனூடாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய குறித்த சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் வழக்குகளை தொடர்வதா என்பதையும் தீர்மானிப்பது அவசியம்.

இப்புலனாய்வின் மூலம் தெளிவாகும் விடயங்களை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அவரது முடிவை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வனைத்து விடயங்களும் குறித்து அரசாங்கம் மிகத் தெளிவான தனது அடிப்படைக் கொள்கைகள் சிலவற்றைப் பகிரங்கப்படுத்த விரும்புகிறது. மோதல் இடம்பெற்ற பகுதிகளில் முன்பிருந்த சனத்தொகை நிலைமையை மாற்றியமைக்கும் கொள்கையொன்றுக்கு அரசாங்கம் சார்புப்போக்கு காண்பிக்கிறது எனக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது மாத்திரமன்றி, அது உள்நோக்குடன் முன்வைக்கப்படும் அடிப்படையற்ற ஒரு பொய்ப் பிரசாரம் என்பதைக் கூற விரும்புகின்றேன். மோதல் காரணமாக தமது நிலபுலன்களில் மீள்குடியமர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதை உறுதிசெய்வது எமது திடசங்கற்பமாகும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

பலாலி, திருகோணமலை, சம்பூர் ஆகிய இரு அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் பற்றி கூறுவதாயின், ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளவாறு அவ்விரு வலயங்களும் உரிய காணிகளின் அளவு மிகக் குறிப்பிடத்தக்க அளவால் குறைவடைந்திருப்பதுடன், இந்நிலை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி இப்போக்கை தொடர்ந்தும் துரிதமாக இடம்பெற வழிவகை செய்யும். குறித்த காணிகளின் உரித்தாளிகள் தமது காணிகளை விற்பதற்குத் தீர்மானித்துள்ள வேளைகளில் அல்லது யாதேனும் தடங்கலான ஒரு நிலைமையின் பேரில் காணிகளின் உரித்தை மீள வழங்குவது நடைமுறைச்சாத்தியமற்றதாக இருக்கின்ற வேளைகளில் மாற்றுக் காணிகளைக் பெற்றுக்கொள்ள முன்வருவார்களாயின், அதற்கவசியமான நடவடிக்கைகள் துரிதமாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வழிகள் தொடர்பிலெனில், மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்று ஏற்பட்டுள்ளது. சொற்ப எண்ணிக்கையான அவ்வாறான இடங்களே தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள அவ்வாறான இடங்கள் குறித்து காலப்போக்கில் கிடைக்கின்ற வாய்ப்புகளின் அடிப்படையில் குறையின்றி அவசிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தொடர்புபட்ட சட்டதிட்டங்களுக்கிணங்க இலங்கையின் எந்தவொரு பாகத்திலும் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் பராதீனப்படுத்த முடியாத உரிமை அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் இருக்கிறது என்ற கொள்கையை ஓர் அடிப்படை உரிமையாக அரசாங்கம் கருதுகிறது.

முன்பு மோதல் இடம்பெற்ற பகுதிகளில் காணி உரித்து தொடர்பில் நியாயமான கடும் போட்டிகர நிலைமைகள் நிலவும்போது அவற்றை நிர்ணயம் செய்வது பெரிதும் சிக்கலார்ந்த ஒரு விடயமென்பதைக் குறிப்பிட வேண்டும். காணிகள் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்துவோரின் உரிமைகள் குறித்து எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் செயலாற்றும்போது அதற்கான நிறுவனம்சார் பொறிமுறை களைப் பயன்படுத்துமாறு ஆணைக்குழு வினால் முன்வைக்கப்படும் பிரேரணை அரசாங்கத்திற்கு உதவியானதாக அமையும். மிகவும் பூரணத்துவமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக வசிப்பவரை மையப்படுத்திய, சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட தொடர்பாடல் இயக்கமொன்றை ஆரம்பிக்க தாமதமின்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமுரிய காணி கையாளர் தொடர்பான திட்டமொன்றை வகுப்பதற்கு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் விதப்புரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதுடன், மிக நீண்ட காலத்தில் செயற்படுத்தப்படும் ஒரு நடவடிக்கையாக தேசிய காணி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான விதப்புரையும் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனை த்து மாகாணங்களுக்கும் உரிய விதத்தில் பாதுகாப்பு படைகள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படும். எனினும், தற்போது நாடுபூராவும் மீண்டும் சுடுகநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்புச் சேவைகளை நாட்டின் சமுதாய வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் நீக்கி, அவர்களின் செயற்பொறுப்பை பாதுகாப்புடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்துவது அரசாங்கத்தினால் கவனமாக எடுக்கப்படும் கொள்கையொன்றாக அமையும். இது பணியின் நோக்கெல்லையுடன் பக்கத்தோற்றத்துடனும் தொடர்புபட்ட ஒரு விடயமாகும்.

பாதுகாப்பு படை சிவில் நிர்வாகத்துடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளிலிருந்து, குறிப்பாக காணி கையாளல் தொடர்பாக தீர்மானமெடுக்கும் பணியில் பங்குபற்றுவதிலிருந்து நீங்கிவிடும். தமிழ்மொழி பேசுகின்ற அறுநூறு (600)க்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏலவே நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பணியில் ஈடுபடுத்துமுகமாக தமிழ்மொழியில் திறமையுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்க ளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். இது தொடர்பான பயன்கூர்தன்மையை அதிகரிக்கும் விதத்திலான ஒரு நடவடிக்கையாக பொலிஸ் சேவைக்கான நடவடிக்கை முறைகள் குறித்த வழிகாட்டுரைகளை வழங்குவதற்கு அந்தந்த மாகாணங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கூறுகள் நிறுவப்படும்.

சட்டவிரோத ஆயுதங்களை தம்வசம் வைத்திருப்பதற்கு முற்றாக முற்றுப்புள்ளி வைக்கும் தேவையை அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஒரு அரசாங்கம் என்ற வகையில் எம்மைப் போல் வேறெவரும் இது குறித்த தேவையுள்ளவர்களாக இருப்பர் என்றெண்ண முடியாதுள்ளது. எமது அனைத்து பிரதான குறிக்கோள்களையும் சீர்குலைத்துவிட இந்நிலைமைக்கு உள்ளார்ந்த ஆற்றல் இருப்பதே அதற்குரிய காரணமாகும். இவ்வாணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பெற்றுள்ள குறித்த தகவல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நாட்டில் மோதல்கள் பெரிதும் தீவிரமடைந்த காலத்திற்கு மிக நெருங்கியதாக இருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஏலவே குறிப்பிடத்தக்க வெற்றி அடையப்பெற்றுள்ளது.

இந்நாட்டிலிருந்து அதனை பூண்டோடு ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் நிச்சயமாக முன்னெடுக்கப்படும். சட்டவிரோத ஆயுதங்களை ஆளொருவர் வைத்திருப்பதாக தகவல் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எவ்வித தயவுதாட்சண்யமும் இன்றி அதனை முறியடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் இடம்பெறும். இது தொடர்பில் கிடைக்கும் தகவல்களை தனக்கு அறிவிக்குமாறு அதிமேதகு சனாதிபதி அவர்களால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுறுதிவாய்ந்த 8q8!ணிப்புச் செயன்முறையின் ஓரங்கம் என்ற வகையில் அனைவரினதும் தீவிர கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இத்தகைய தகவல்கள் பாராளுமன்றத்திற்கும் அறிவிக்கப்படும்.

2012க்கான எமது திட்டங்களின் அடிக்கல்லொன்றாக அரசாங்கத்தினால் ஏலவே பிரகடனம் செய்யப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையின் மூலம், பல்வேறு இனப்பிரிவுகளுக்கு இடையில் நட்புறவுப் பாலங்கள் கட்டியெழுப்பப்பட்டு தேசிய ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு அவசியமான தெற்காசிய சேவையொன்று ஆற்றப்படுமென்பதில் அரசாங்கத்திற்கு ஐயமில்லை. மூன்று தசாப்தகாலமாக நிலவிய மோதல்கள் காரணமாக எமது நாட்டு மக்கள் மத்தியில் உருவெடுத்துள்ள ஆழ்ந்த வேதனையும், துயரமும் மிகவும் கவலைக்குரியதாகும். நாம் இதனை ஒரே தேசமாக கூட்டாக இனங்காண்பதுடன், தற்போது நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பில் இருந்து பயனடைந்துகொள்ள நம் மனங்களில் ஏற்படும் சங்கற்பத்தை அதிகரித்துக்கொள்ள அப்புரிந்துணர்வைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம்மிடையே பல்வேறு மொழிகள், பல்வேறு நம்பிக்கைகள், மதங்கள், அறநெறிகளை அடிப்படையாகக் கொண்ட பல்பலினத்தன்மையொன்று நிலவியபோதும், ஐக்கியப்பாட்டின் பேரினால் நாம் அவ்வாறு செய்தாக வேண்டும். இச்சூழமைவில் ‘இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் எதிர்மனப்பான்மையில் இருந்துகொண்டே இருக்கின்ற அரசியலைக் கைவிட்டு தேசியப் பிரச்சினைகளில் பொது உடன்பாட்டுடன் தீர்மானமெடுக்க முன்வர வேண்டும்’ என ஆணைக்குழு முன்வைக்கும் கருத்தை நாம் முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்.

அதுவே இவ்வேளையின் தேவையாகும். கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு மிகக் குறுகிய காலத்தில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பாரதூரமான பணியை அர்ப்பணிப்புடனும் பொறு ப்புடனும் நிறைவேற்றியிருப்பதையிட்டு அவ்வாணைக்குழுவுக்கு ஜனாதிபதி அவர்கள் மீண்டும் தனது நன்றியறிதலை தெரிவிக்கின்றார். இந்த மாண்புறு சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது கட்சித் தொடர்புகளைத் தாண்டி, உத்தேச வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இத்தீர்மானமான வேளையில் ஒத்துழைப்பு நல்குவார் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com