Contact us at: sooddram@gmail.com

 

படுவான்கரை பிரதேசத்தை கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடவேண்டும்

(கிருஸ்ணா)

போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை பிரதேசத்தை நாங்கள் கட்டியெழுப்பவேண்டுமென்றால் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட அனைவரும் முன்வரவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்துக்கான ஆய்வுகூடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனையும் அழைத்திருந்தேன். அவர் வேறு ஒரு அவசர வேலை காரணமாக வரமுடியாத நிலையென தெரிவித்தார். அவர் என்னிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். இங்கு என்னிடம் விடுத்தவேண்டுகோளை அவர் பாராளுமன்றத்தில் என்னிடம் கோரினார். இந்த பாடசாலைக்கு ஒன்றுகூடல் மண்டபம் ஒன்றும் கனிஸ்ட வித்தியாலயத்துக்கு கட்டிடங்களும் கோரியிருந்தார். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகின்றோம்.

இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சிந்தனையின் கீழ் 5000 கனிஸ்ட பாடசாலைகளும் 1000 இடைநிலை பாடசாலைகளும் அபிவிருத்திசெய்யப்பட்டுவருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் வருடாவருடம் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்ததிட்டத்துக்கான பாடசாலைகளை தெரிவுசெய்வதில் கூட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்தே அதனை தெரிவுசெய்தோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 22 பாடசாலைகள் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 300 பாடசாலைகளின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதேபோன்ற ; 5000 கனிஸ்ட பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் திட்டத்தின் கீழ் 700 பாடசாலைகளின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த வருடம் கல்வி அபிவிருத்திக்காக 8600 மில்லியன் ரூபாவை கல்வி அபிவிருத்திக்காக ஜனாதிபதி ஒதுக்கியிருந்தார்.

அபிவிருத்திசெய்யப்படும் பாடசாலைகளை தெரிவுசெய்து கடந்த வருடம் மாகாணசபை ஊடாக அனுப்பிய கடிதத்தை பாராளுமன்றத்தில் பார்த்தபோது அந்த கடிதத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலையின் பெயர் இல்லை. அம்பிளாந்துறை என்ற பாடசாலை இல்லை. அதேபோன்று கிராண் பாடசாலையின் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் என்ட கிராமம் அரியநேத்திரனின் கிராமம் என்ற ரீதியில் அந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

ஒரு அரசியல்வாதியை பழிவாங்குவதற்காக அந்த கிராமத்தை பழிவாங்கும் செயலை என்னவென்று கூறுவது என அங்கு தெரிவித்தேன். அந்த பாடசாலைகளை நீக்குவதற்கு எதிராக நான் குரல்கொடுத்தேன். அந்தவேளையில் நமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்தார்கள்.

படுவான்கரை பிரதேசத்தை பொறுத்தவரையில் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு ஊர்வேறுபாடு அற்று மக்கள் வேறுபாடு அற்று அனைத்து கிராம மக்களும் துன்பப்பட்டவர்கள். கொடிய யுத்தம் காரணமாக எவ்வளவோ உயிர்களை நாங்கள் இந்த படுவான்கரையில் இழந்துள்ளோம். இதனை கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது. இதற்கு அரசியல்வேறுபாடுகளை பார்க்கமுடியாது.

இதனை நான் கடந்த மாகாணசபையில் இருந்தவர்களுக்கு எடுத்துக்கூறினேன். கல்வி அபிவிருத்தியென்னும் விடயங்களில் பழிவாங்கக்கூடாது என கூறியிருந்தேன்.

எமது மாணவர்களை வளர்க்கும்போதே எமது மாவட்டம் வளரும். அதனை மையமாகக்கொண்டுதான் இந்த பாடசாலைகள் இணைக்கப்பட்டு தற்போது ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கட்டப்பட்டுவரும் புற்றுநோயாளர் வைத்திசாலை இந்த அம்பிளாந்துறை மண்ணைச்சேர்ந்த அம்மையொருவர் என்னிடம் விடுத்தவேண்கோளின் அடிப்படையில் உருவானது என்பதை இங்கு நான் பெருமையுன் கூறுவேன்.

அதுமட்டுமன்றி இந்த கிராமம் ஓரு சிறந்த கிராமம். ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கொண்டு சிறப்புற்று விளங்கும் கிராமம். இந்த நாட்டின் முதல் வீடு என கொள்ளப்படும் இலங்கையின் உயிரிய சபைகளில் ஒன்றினான அந்த பாராளுமன்றத்தில் அரியநேத்திரன் உள்ளதையிட்டு நானும் பெருமையடைகின்றேன்.

கடந்த யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்து அதிலே சிக்குண்டு இன்று அந்த மக்களை வளர்க்கவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவர். நாங்கள் இந்த மக்களுக்கு செய்யவேண்டும் என்பதற்காக ஒன்றுபட்டுசெயற்பட்டுவருகின்றோம்.

இந்த மாவட்டத்தில் எமது கல்வியை வளர்ப்பதற்கான அனைத்துவளங்களும் உள்ளன. கடந்த
காலத்தில் எமது மாவட்டத்தில் இருந்த சிறந்த அரசியல்வாதிகளினால் அதற்கான கட்டமைப்புக்கள் சிறந்தமுறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com