Contact us at: sooddram@gmail.com

 

நாடுகடந்த தமிழீழ அரசின்அடுத்த தேர்தல் திறமையுள்ள விசுவாசமான வேட்பாளர்கள் தேவை

நாடுகடந்த தமிழீழ அரசின் முதல் தேர்தல் நடந்து மூன்று வருடங்களுக்குள் அடுத்த தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவினரின் சிபார்சின் அடிப்படையிலேயே எமது முதல் தேர்தல் நடந்தது. மக்களிடமும் இதையே கூறி எமது தேர்தலை நடாத்தினோம். தற்பொழுது செயற்படும் பாராழுமன்றத்தின் இயங்குகாலம் முதலாவது தேர்தல் நடைபெற்ற் மே 2, 2010 இருந்து மூன்று வருடங்களுக்கானது. இதன் அடிப்படையிலேயே யாப்பு தயாரிக்கப்பட்டு அவை செயற்படத் தொடங்கியது. எமது அடுத்த தேர் தல் 2013ம் ஆண்டு மே 2ம் திகதிக்கு முன் நடைபெற வேண்டும். தற்போதைய பாராளுமன்றம் கலைக்கபட வேண்டிய கடைசி நாள் 2013ம் ஆண்டு ஏப்ரல 1ம் திகதியாகும். இதை மாற்றவோ அல்லது மறுக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

தேசமீட்பிற்கான இறுதி நகர்வினை வரையவேண்டிய நான்காவது அமர்வு, அதுபற்றி எதுவுமே பேசாது, வாடிநிற்கும் எம் உறவுகள் நலன் கருதி எந்தத் தீர்மானமும் எடுக்காது, தமது இருப்பை தக்கவௌக்க மூன்றுவருட பாராளுமன்ற்த்திற்கான காலத்தை ஐந்து வருடமாகவும், இதற்கு இணங்கிய 15 உதவி மந்திரிகளை சம்பிரதாயத்துக்கு எதிராக அமச்சரவையில் பங்குகொள்ள பிரேரித்ததுமே ஐந்து நாள் அமர்வின் முக்கிய விடையங்கள்மென்றால் எமது திறமைக்கு எல்லை உண்டா?

திறமைமிக்க நிர்வாகமும், தேவையான பணமும் இல்லாத நிலையில் எம்மால் எதையுமே சாதிக்கமுடியாது. மந்திரிசபையை மாற்றியோ, மந்திரவாதிகளை அழைத்தோ ஒன்றும் நடக்கப் போவதில்லை. காலத்தைக் கடத்தாமல், நேரத்தை வீணடிக்காமல், எமது விடுதலையை பின்போடாமல் அடுத்த மே மாதத்துக்க்கு முன்பாகவே தேர்தலை -நடாத்தி, தரமானவர்க்ளை உள்வாங்கி, எமது அரசியல் போரை முன்மனெடுப்பதே, இன்றைய நிலையில், சாலச்சிறந்தது.

இன்று, எமது அரசியல்ப் போருக்கு சர்வதேசமே தங்களைத் தயார் செய்து வரும்போது, நாமும் இந்த மூளைக்கும் மூளைக்குமான அரசியல் போருக்கு எம்மைத் தயர்ர்செய்ய வேண்டியது அவசியமமல்லவா. எம் இனத்தின் விடுதலைக்காக தம்மை அற்பணிப்பதை ஓர் வரமாக எண்ண்ணிச் செயற்பட்ட எம் உறவுகளின் எதிர்காலத்தை மாற்றார் கையில் மட்டும் விடுவது சரியா?

பாசமும் விசுவாசமும் கொண்டவர்களாக நாம் இருந்தும், அறிவும் ஆற்றலும் உள்ள ஓர் உன்னத இனமாக நாம் திகழ்ந்தும், சென்ற தேர்தலிலோ அல்லது அதன்பின் நடந்த தேர்வுகளிலோ திறமைசாலிகளைக எம்மால் கவர முடியாமல் போனதும், இருந்த சிலரும் விலகிசசென்றதும் எமது துர்ரதிஷ்டமே.

புதுனை மிக்க தத்துவத்துடன், சிற்ந்த கொள்கையுடன் பல எதிர்பாப்புகளுக்கு மத்தியிலே உருவான நாடுகடந்த தமிழீழ அரசு இன்று, பேராசையும் சுயநலமும் பதவி மோகமும் கொண்டோரின் தலமாக, எம்மோடு சேர்ந்து எம்மவரோடு வாழ்ந்து எம்மைப்போல் நடித்து எம்மை அழிக்க முயலுபவர்களின் அரங்கமாக, தெரிந்தோ தெரியாமலோ சிங்கள அரசின் ஷிருப்பத்துக்கு செயல்ரூபம் கொடுப்பவர்களின் பாசறையாக மாறிவருவது கண்டு உங்களைப்போல் நானும் வேதனையடைகிறேன், வெட்கப்படுகிறேன்.

இந்த நிலை மாறவேண்டுமானால் தகுதியுடைய புலம்பெயர் உறவுகள் தமது பங்கைதர தாமாக முன்வரவேண்டும். எண்ணத்தால் கருத்தால், நோக்கத்தால் ஒன்றுபட்ட நாம் ஏன் ஒன்று சேர்ந்து செயற்படக் கூடாது? எம் இனத்தின் மீது அக்கறையும் விசுவாசமும்ம் கொண்ட அமைப்புக்களும், சங்கங்களும், தனியாரும், உலகளாவிய ரீதியில், நாடுகடந்த தமிழீழ அரசிற்கு தமது ஆதரவை தவறாது தந்து, எம்ம்வர் கனவை நனவாக்க உதவவேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசு, சர்வதேசத்தைக் கவரும் வகையில் இந்த நூற்றாண்டுக்கான புதுமைமிக்க அரசியல் ததுவத்துடன், ஜனநாயக வழியிலே இயங்கும் ஓர் அரசாங்கம். தேசியத்தலைவரின் இலட்சியப் பாதையில் பயணிக்கும் இந்த அரசு தமிழருக்காக தமிழரால் உருவக்கப்ட்டது. கட்சி பேதமின்றி ஓவ்வொரு தமிழரும் இதற்கு ஆதரவு தரவேண்டும்.. வெற்றியின் விளிம்பில் இருக்கும் நாம் திறமைசாலிகளை ஒருங்கிணைத்து, எமது ஒற்றுமையையும் மக்கள் பலத்தையும் உலகிற்குக் காட்டி, வெற்றிக்கான நகர்வுகளை முன்னெடுதப்பதே மேல்.

திற,மைசாலிகள் வந்ததால் மக்கள் திரண்டெழுந்தார்களா? மக்கள் திரண்டெழுந்தால் திற,மைசாலிகள் வந்ததார்களா? என் மாற்றரும் வியக்கும் விததில் எமது தேர்தல் நடைபெற வேண்டும். தீயவர்கள் களையயப்பட வேண்டும். கட்சிபேதமின்றி, திறமையின் அடிப்படையில் விசுவாசத்தை மையமாக வைத்து நிறுத்தப்படும் வேட்பாளர்ர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும். நாம் காணும் தமிழீழம் விரைவில் மலரவேண்டும். இதுவே எம் ஆசை, நாம் வேண்டும் வரம்.

தொடர்புகளுக்கு: கீழ் உள்ள ஈமெயில்/தொ.இல: கனடா 416 829 1362

கலாநிதி ராம் சிவலிங்கம்
sivalingham@sympatico.ca

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com