Contact us at: sooddram@gmail.com

 

நாம் கருவில் சுமந்த கனவுக்குழந்தை மாகாணசபை,  ூட்டமைப்பு அதை சரியாக வளர்க்கவில்லை  - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

 கௌரவ சபாநாயகர் அவர்களே!.....

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எனக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு முதலில் நான் நன்றி கூறுகின்றேன். நான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சராக இருந்தாலும்,
கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக எனக்கு அரசியல் அங்கீகாரம்  வழங்கி வருகின்ற தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும், எமது அரசின் பொருளாதார அபிவிருத்தியையும், அதன் பயன்களையும் இன்னமும் அதிகமாக  அறுவடை செய்வதற்கு காத்திருக்கும் அனைத்து இன சமூக மக்களின் சார்பாகவும், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்க அமைச்சர் என்ற வகையிலும், இந்த சபையில் நான் எனது கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன்.

நிதி, திட்டமிடல் என்பது நாட்டின் முதுகெலும்புக்கு ஒப்பான ஒன்றாகும். இதன் மூலமே இந்த நாட்டில் உள்ள சகல சமூக மக்களும் நிமிர்ந்து நிற்க முடியும். கடந்து வந்த சில காலங்களை விடவும், இன்று பொருளாதார அபிவிருத்தியில் இலங்கைத்தீவு வளர்ச்சி பாதையை நோக்கி வெற்றி கரமாக சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த கால யுத்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து வருகின்ற எமது மக்களும், வாழ்வாதார, பொருளாதார அபிவிவிருத்தியில்
சகலதும் பெற்று செழிப்புடன் வாழ்வார்கள் என நம்புகின்றேன்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆளுமைமிக்க,  தலைமைத்துவம் மிக்க சிறந்த வழிகாட்டலும், அவரது வழிகாட்டலை ஏற்று நடக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஐபக்ச அவர்களினதும், நிதி திட்டமிடல் அமைச்சர் டாக்டர் சரத் அமுனுகம அவளர்களினதும், அந்த அமைச்சின் செயலாளர் டாக்டர் Nஐயசுந்தர அவர்களினதும், மற்றும் அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களினதும் அர்ப்பணம் மிக்க உழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம் என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.  அதற்காக நான் மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.

நான் ஜனாதிபதி அவர்களுக்கு பிராதானமாக நன்றி கூறுவது, அவர் தொடர்ந்தும் உற்சாகத்துடன் தனது பணிகளை ஆற்ற வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தை கொடுப்பதற்காகவே.
2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அழிவு யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர்,
இந்த நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்கள், அழிவு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த ஜனாதிபதி அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்து உரையாற்றியிருந்தார்.

அதை நான் வரவேற்றிருந்தேன்., அது போல் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்வதை நிறுத்தி விட்டு,...
உண்மையுள்ளவர்களாக, யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய தருணங்களில் விமர்சிப்பதோடு, அரசாங்கத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துழைக்கவும், நன்றி கூறவும் முன்வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்டில் நிலவுகின்ற அரசியலுரிமைப் பிரச்சினை முதற்கொண்டு, சமூக, பொருளாதா அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் வரை அரசாங்கத்துடனான நல்லுறவை வளர்ப்பதன் ஊடாகவே தீர்வு காண முடியும்.
மழை இங்கே பெய்கிறது. தமிழ்த்;; தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகள் எங்கும் ஓடி ஓடி குடை பிடிக்கிறது. நின்று பிடுங்கியவனுக்கு நிலக்கடகம் பாவற்காய், ஓடி ஓடி பிடுங்கியவனுக்கு ஒரு கடகம் பாவற்காய,.... இப்படி ஒரு பழ மொழி உண்டென்பதை அறிந்திருப்பீர்கள்.
நாம் அரசாங்கத்துடனான இணக்க அரசியல் வழிமுறைக்கு ஊடாக எமது மக்களின் துயர் துடைக்கவும், சமூக, பொருளாதார அபிவிருத்தியில் எமது மக்கள் முன்னோக்கி நடக்கவும் ஆற்றிய பணிகளில் சிறு துளியளவேனும், சர்வதேச நாடுகளெங்கும் உல்லாசப் பயணம் சென்று வரும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் ஆற்றியிருக்கவில்லை.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த காரணத்தினாலும், ஜனாதிபதி அவர்களின் விருப்பத்தின் காரணமாகவும  வட மாகாண சபைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இது நாம் வலியுறுத்தி வருகின்ற 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அடுல்படுத்துவதற்கான ஓர் ஏணிப்படியாகும். மேற்படி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் மாகாண சபையில் எந்த அதிகாரங்களும் இல்லை என்றவர்கள் இப்போது மாகாண சபை அதிகாரம் ஆளுனருக்கா, அல்லது முதலமைச்சருக்க  என்று கேள்வி கேட்கிறார்கள். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் மனநோயாளிகள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
முதல் ஒன்றும் பிறகு ஒன்றுமாக முன்னுக்குப்பின் முரணான பேச்சுக்களையே இவர்கள் பேசி வருகிறார்கள்.
மாகாண சபை என்பது உளுத்துப்போன தீர்வு, எதுவுமற்ற தீர்வு, காலங்கடந்த தீர்வு, அரைகுறை தீர்வு, இப்படித்தான் அன்று இவர்கள் பேசினார்கள். தேர்தல் வந்த போது அதே மாகாண சபை, தமிழ் மக்களின் உரிமை என்றும், மூன்றாம் கட்டப் போர் என்றும், தமிழ்த் தேசியம் என்றும், அமையைப்போகிறது தமிழ் அரசு என்றும் கூறி வாக்குகளை அபகரித்தார்கள். ஆனாலும் இன்று என்ன நடக்கின்றது என்பதை சகலரும் அறிவார்கள். இருபது வருடங்களாக நாங்கள் பத்தியம் காத்து கருவில் சுமந்த கனவுக் குழந்தை இந்த மாகாண சபை,... எமது கனவுக் குழந்தை பிறந்து விட்டது. ஆனாலும் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தத்தெடுத்துக் கொண்டதால், அந்தக் குழந்தை வளரவும் முடியாமல், தவளவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், நிமிரவும் முடியாமல் தவிக்கின்றது.
நாம் அரசாங்கத்துடன் மட்டும் இணக்க அரசியல் செய்ய விரும்பவில்லை,
மாகாண சபை என்ற எமது கனவுக் குழந்தையை தத்தெடுத்து வைத்திருக்கும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்போடும் ஓர் இணக்கமான அரசியலை நடத்த விரும்புகின்றோம். மாகாண சபையை பாதுகாப்போம், வளர்த்தெடுப்போம் என்று பகிரங்கமாகவே நாம் சமிக்;ஞ காட்டியிருந்தோம்.  ஆனாலும், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அதை ஏற்க மறுத்து, அடம்பிடிக்கிறது.

ஏகப் பிரதிநிதித்துவ காய்ச்சலால் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. சு. மா. சிந்தனைக்குள் மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
உரிமைகளை பெறுவதற்கான நியாயங்கள் எப்போதும் உலகெங்கும் இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும் உரிமைகளை பெறுவதற்கான வழிமுறைகள்தான் காலத்திற்கு ஏற்றவாறு, சூழலுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டேயிருக்கிறது. உலக ஒழுங்கு இன்று மாறிவிட்டது. மாறிவரும் உலகத்தின் போக்கை உணர்ந்து, மாற்றங்களை உருவாக்கும் வழிமுறையிலும் மாற்றங்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டளையாகும்.
ஐனநாயக வழிமுறை மூலம் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதும், அந்த அரசியல் அதிகாரங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவதும  இன்றைய யதார்த்த நிலை. இதை நான் தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி கூறி வைக்க விரும்புகின்றேன். தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் தோறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது சு.ம.ச சிந்தனை மூலம் மக்களின் அங்கீகாரங்களை பெற்றிருக்கிறது.
அதன் மூலம் அரசியல் அதிகாரங்களையும் அபகரித்து வைத்திருக்கிறது. அனாலும் தாம் அபகரித்து வைத்திருக்கும் அரசியல் அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த விரும்பவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.

கொளரவ சபாநாயகர் அவர்களே!....

வடக்கு கிழக்கில் உள்ள பொரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளை  தமிழ் தேசிய கூட்டமைப்பே தம் வசம் வைத்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்புரிமைகளிலும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்மைப்பே கொண்டிருக்கிருக்கிறது. அதை விடவும், எமது கருவில் உருவான கனவுக்குழந்தையான மாகாண சபை அதிகாரத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே தமது சு.ம.ச சிந்தனை மூலம் அபகரித்து வைத்திருக்கிறது. இத்தனை அதிகாரங்களையும் தம் வசம் வைத்திருக்கும் தமிழ் தேசிய கூட்மைப்பினர், அந்த அரசியல் அதிகாரங்களை வைத்து தமிழ் பேசும் மக்களின் விடியலுக்காக பயன்படுத்த தவறி வருகிறது.
இத்தனை அதிகாரங்களும் எம் வசம் இருந்திருந்தால் நாம் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளேயே எமது மக்களின் வாழ்விடங்கள் தோறும் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி காட்டியிருப்போம். நித்திரை கொள்பவனை எழுப்பலாம். நித்திரை கொள்பவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.  தமிழ் தேசிய கூட்மைப்பு உறக்கத்தில் இருப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறது.  ஆனாலும் ஒரு விடயத்தில் மட்டும் விழிப்பாக இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்பதிலும், அது தீராப்பிரச்சினையாக இழுபட்டு செல்ல வேண்டும் என்பதிலும் அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.
எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக்கி அதில் தமது பதவி நாற்காலிகளை தக்க வைத்து, அதன் ஊடாக தமது உல்லாச வாழ்வை மட்டும் அனுபவிக்க தீர்மானித்திருக்கிறார்கள்.
கும்பி கூழுக்கு அழுகிறது.... கொண்டை பூவிற்கு அழுகிறது.
அது போல், தமிழ் பேசும் மக்கள் தமது நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஆசைப்படுகிறார்கள்.   தமிழ் தேசிய கூட்டமைப்போ தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்னையை வைத்து தமது உல்லாச வாழ்வை வளர்க்க விரும்புகிறார்கள்.  இறுதியாக நான் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். வடமாகாண சபையை சரிவர இயங்க வைப்பதற்கு அரசாங்கம் தடையாக இருக்கிறது என்றே தமிழ் தேசிய கூட்மைப்பு போலியான பிரச்சாரத்தை செய்து வருகிறது. அவ்வாறு அரசாங்க தரப்பில் தடைகள் இருப்பாதாக எதுவும் இல்லை.  மாகாண சபை அதிகாரங்கள் குறித்த சட்ட திட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொண்டிருந்தும், புரியாதது போல் நடிப்பதை ஏற்க முடியாது. வட மாகாண சபையை வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியோடு முன்வந்தால்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது போல் அரசாங்க தரப்பில் தடைகள் இருக்குமாயின், அந்த தடைகளை அகற்றி, எமது கனவுக்குழந்தையான மாகாணசபையை வளர்த்தெடுத்து பாதுகாப்பதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத்தர நான் தயாராக இருக்கின்றேன்.
நன்றி.....

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com