Contact us at: sooddram@gmail.com

 

ஆஸ்திரேலியாவில் மக்களை சிறைபிடித்தவர் சுட்டு கொலை, பிணை கைதிகள் மீட்பு!

ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை 17 மணி நேரம் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்திருந்த ஈரானைச் சேர்ந்த ஹரோன் மோனிஸ் என்பவரை அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தியர் இருவர் உள்பட பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப்பகுதியில் மார்ட்டின் பிளேஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் லிண்ட் கபே என்ற ஓட்டல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் நாடாளுமன்றம், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, அமெரிக்க, இந்திய தூதரகங்கள், இந்திய சுற்றுலா கழக அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்து உள்ளன.

இந்நிலையில், லிண்ட் கபே ஓட்டலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி அளவில் ஆண்கள், பெண்கள் என வாடிக்கையாளர்கள் பலர் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியுடன் அந்த ஓட்டலுக்குள் புகுந்தான். துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன், அங்கிருந்தவர்களை பிணைக் கைதிககளாக சிறை பிடித்தான். ஓட்டலுக்குள் 2 இடங்களில் குண்டு வைத்து இருப்பதாகவும், நகரில் 2 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவன் கூறினான்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஆஸ்திரேலிய போலீசாரும் துணை ராணுவ படையினரும் அங்கு விரைந்து வந்து, அந்த பகுதி முழுவதையும் 'சீல்' வைத்தனர். அந்த கட்டிடத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணிக்கு ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டன. அந்த கட்டிடத்தில் ஓட்டலுக்கு மேலே உள்ள தளங்களில் இருந்தவர்களை போலீசார் ஏணிகளின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

பிணைக் கைதியாக பிடித்தவர்கள் மூலம் தீவிரவாதி, ஓட்டலின் ஜன்னல் கண்ணாடி வழியாக கருப்புநிற கொடி ஒன்றை காட்டினான். அந்த கொடியில் வெள்ளை நிற எழுத்துகளில் அரபி மொழியில் எழுதப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டிடம் தான் நேரடியாக பேச விரும்புவதாக அந்த தீவிரவாதி தெரிவித்தான். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொடி தனக்கு வேண்டும் என்று கேட்டான். ஆனால், அவன் எதற்காக அங்கிருந்தவர்களை சிறை பிடித்தான்? அவனுடைய கோரிக்கை என்ன என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, தீவிரவாதியின் பிடியில் இருந்து 5 பேர் நைசாக தப்பி வெளியே ஓடிவந்து விட்டனர். அவர்களிடம் ஓட்டலுக்குள் நிலவும் சூழ்நிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதி யார் என்பது பற்றி போலீசாருக்கு அடையாளம் தெரிந்தது.

மேலும், ஓட்டலுக்குள் தீவிரவாதியிடம் பிணைக் கைதியாக சிக்கி இருப்பவர்களில் 2 பேர் இந்தியர் என்றும், அவர்களில் ஒருவரது பெயர் விஸ்வகாந்த் (வயது 30) என்றும் மற்றொரு இந்தியரின் பெயர் புஷ்பேந்து கோஷ் என்றும் தெரியவந்தது. இதில், விஸ்வகாந்த் பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருபவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இன்போசிஸ் நிறுவனத்தின் பணிக்காக அவர் 7 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். என்ஜினீயர் விஸ்வநாத் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள கங்கிரெட்டிபாலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் குண்டூரின் புறநகர் பகுதியான சம்பத் நகர் என்ற இடத்தில் வசித்து வருகிறார்கள்.

அப்பாவி மக்களை தீவிரவாதி பிணைக் கைதிகளாக சிறைபிடித்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், அரசியல் நோக்கம் கொண்ட இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாக கூறிய அவர், பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மக்களின் கவலையை புரிந்துகொள்வதாக கூறிய அவர், ஆஸ்திரேலியா அமைதியான நாடு என்றும், அந்த நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

லிண்ட் கபே ஓட்டலில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில்தான் இந்திய தூதரகம் அமைந்து உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தூதரக அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது. அங்கிருந்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி 12 மணி அளவில் அலுவலகத்தை மூடிவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாக அங்குள்ள இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்தார்.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய மத்திய வங்கி, அமெரிக்க தூதரகம் மற்றும் சிட்னி ஒபேரா ஹவுஸ், அரசு நூலகம், கோர்ட்டுகள் உள்ளிட்ட பிற அலுவலகங்களும் மூடப்பட்டன. சில கட்டிடங்களில் இருந்தவர்களை போலீசார் வெளியேற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு கருதி நகரில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பிணைக் கைதிகளை மீட்கும் அதிரடி நடவடிக்கையில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். நேற்று இரவு ஓட்டலுக்கு மின்சார சப்ளையை துண்டித்தனர். இதனால், ஓட்டல் இருளில் மூழ்கியது. பின்னர் அவர்கள் ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது பிணைக் கைதிகளில் சிலர் தப்பி வெளியே ஓடி வந்தனர். தீவிரவாதியும் பதில் தாக்குதல் நடத்தினான். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

தாக்குதலின் போது, வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதற்காக ஒரு ‘ரோபோ’வையும் ஓட்டலுக்குள் போலீசார் அனுப்பினார்கள். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அந்த தீவிரவாதி குண்டு பாய்ந்து பலியானான். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தீவிரவாதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஓட்டலுக்குள் இருந்த மற்ற பிணைக் கைதிகளும் வெளியே வந்தனர். இந்த சம்பவத்தில் இந்தியர்களான விஸ்வகாந்த், புஷ்பேந்து கோஷ் ஆகியோரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களை போலீசார் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிரவாதியுடன் 17 மணி நேரம் நீடித்த இந்த பிரச்னை, உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 2 மணிக்கு முடிவுக்கு வந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் ஹரோன் மோனிஸ் என்றும், 50 வயதான அவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும், 1996 ஆம் ஆண்டு ஈரானை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு வந்து அரசியல் தஞ்சம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com