Contact us at: sooddram@gmail.com

 

எகிப்து எழுச்சி வென்றது

ஓட்டம் பிடித்தார் முபாரக்   ஜனநாயகம் மலரும், மக்கள் உறுதி

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக 30 ஆண்டு காலம் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து அகற்றி, வர லாறு படைத்தனர் எகிப்து மக்கள். 18 நாட்களாக நீடித்த எகிப்து மக் களின் மகத்தான எழுச்சியின் விளைவாக, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைநகர் கெய்ரோ வை விட்டு குடும்பத்து டன் ஓட்டம் பிடித்தார் முபாரக். ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக கடந்த ஜனவரி 25ம்தேதி துவங்கிய எகிப்து மக்களின் மகத் தான எழுச்சியில், அடக்குமுறை களை மீறி, ராணுவத்தின் அச்சுறுத் தலை மீறி தலைநகர் கெய்ரோவின் சுதந்திர சதுக்கத்திலும், அலெக் சாண்ட்ரியா, சூயஸ் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், லட்சோப லட்சம் மக்கள் அணி திரண்டனர். 18 நாட்களாக நீடித்த இந்தப் போராட்டத்திற்கு, வேறு வழி யின்றி ராணுவ வீரர்களும் ஆத ரவு அளிப்பதாக கூறினர்.

இதனிடையே, துணை ஜனாதி பதியாக உமர் சுலைமானை நியமித்த ஜனாதிபதி முபாரக், பதவி விலக முடியாது என்று பிடி வாதமாக மறுத்துவந்தார். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த நிலையி லும் பிடிவாதத்தை கைவிடாத அவர், பிப்ரவரி 10 வியாழனன்று தொலைக்காட்சியில் உரையாற்றி னார். அப்போது செப்டம்பர் மாதம் தனது பதவிக் காலம் முடியும் வரை வெளியேற மாட்டேன் என்று கூறி னார். இதனால் மக்களின் கொந்த ளிப்பு உச்சத்தை எட்டியது. இந்நி லையில் மக்களுக்கு ஆதரவு அளித்த ராணுவமும், முபாரக்குடன் சமரசம் செய்து கொண்டு, செப்டம்பர் மாதம் தாங்களே முன்னின்று நியாயமான தேர்தலை நடத்தி புதிய ஆட்சியை உருவாக்க துணை செய்வோம் என் றும், எனவே போராட்டத்தை கை விட்டு வேலை களுக்கு திரும்புங் கள் என்றும் மக்களுக்கு திடீர் அறி வுரை கூறியது.

இதனால் மக்கள் மேலும் கொந் தளித்தனர். வெள்ளிக்கிழமை (பிப்ர வரி 11) அன்று முபாரக்கிற்கு விடை கொடுக்கும் இறுதி நாள் என்று அறிவித்தார்கள். முபாரக்கின் அரண் மனையை நோக்கி அணிவகுப் போம் என்று அறிவித்து போராட்டத் தை தொடர்ந்தனர். நிலைமை மோச மாவதை உணர்ந்த ஜனாதிபதி முபாரக், மக்கள் எழுச்சிக்கு முன்பு தாக்குப்பிடிக்க முடியா மல் பணிந் தார். பதவியை ராஜினாமா செய்தார்.

வெள்ளியன்று இரவு தொலைக் காட்சியில் தோன்றிய துணை ஜனாதிபதி உமர் சுலைமான், ஜனாதி பதி பதவியிலிருந்து ஹோஸ்னி முபாரக் ராஜினாமா செய்துவிட்டார் என்றும், ராணுவ அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட கவுன்சிலிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டார் என்றும் அதிகாரப் பூர்வமாக அறி வித்தார்.

பதவியை ராஜினாமா செய்த முபாரக், அச்செய்தி அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தலைநகர் கெய்ரோவைவிட்டு குடும்பத்துடன் ஓட்டம் பிடித்தார். அவர் தற்போது கெய்ரோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் செங்கட லில் அமைந்துள்ள ஷரம்-எல்-ஷேக் நகரில் இருக்கும் தனது பிரம் மாண்ட அரண் மனையில் தங்கியுள்ளார்.

ராணுவம் ஆலோசனை

இந்நிலையில், அடுத்த என்ன செய்வது என்பது குறித்து எகிப்து ராணுவம் ஆலோசனையில் ஈடுபட் டுள்ளது.


எப்படி இருப்பினும் முழுமை யான ஜனநாயகம் மலர்வதை எங்கள் போராட்டம் உறுதி செய்யும் என்று மக்கள் கூறியுள்ளனர்.

போராட்டத்தின் வெற்றியை வெள்ளியன்று இரவு முதல் கெய்ரோ வின் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடி கொண்டாடிய மக்களில் பெரும்பா லானோர், சனிக்கிழமையும் அங் கேயே இருந்தனர். அவர்களில் பலர், அந்த மைதானத்தை சுத்தப்படுத் தும் பணியிலும் ஈடுபட்டனர்.

மக்களின் உணர்வுகளை முழு மையாக பிரதிபலிக்கும் விதத்தில் ராணுவ கவுன்சில் முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் வலி யுறுத்தினர்.

உலக நாடுகள் வரவேற்பு

எகிப்து மக்களின் எழுச்சி அடைந்த வெற்றியை அரபு உலகம் உற்சாகத்துடன் கொண்டாடி வரு கிறது.


அதே நேரத்தில் கடைசி நிமிடம் வரை முபாரக்கிற்கு ஆதரவளித்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற் கத்திய நாடுகள் வேறு வழியின்றி, எகிப்து மக்களுக்கு வாழ்த்து தெரி வித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, மக்களின் சக்தி எத்தகையது என்பதை எகிப்து நிரூ பித்துவிட்டது என்றும் இது ஒரு மாபெரும் வரலாறு என்றும் கூறியுள் ளார். மேலும், முழுமையான ஜனநாய கம் ஒன்று திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், மக்களின் விருப்பத் திற்கு தலைவணங்கியதாக முபாரக் கை பாராட்டியுள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ரஷ்யா, ஸ்பெயின், கனடா, தென்னாப் பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் எகிப்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள் ளதுடன், அங்கு நம்பகமான முறை யில் ஆட்சி மாற்றம் நடைபெறு வதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

எகிப்தின் அண்டை நாடும், அதை அமெரிக்க ஆதரவு நாடாக மாற்றிய ஏவலாளியுமான இஸ்ரேல் அதிர்ச்சியடைந்துள்ளது.

எகிப்து மக்களுக்கு சிபிஎம் வாழ்த்து



புதுதில்லி, பிப்.
12-

வரலாறு படைத்துள்ள எகிப்து மக்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.


கட்சியின் அரசியல் தலைமைக்குழு சனிக்கிழமை யன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

எகிப்து மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு தனது எழுச்சிகரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக, எதேச்சதிகார ஆட்சியாளர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக 18 நாட்கள் வரலாற்றுச்சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தி, முடிவில் அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்றி மகத்தான வெற்றிபெற்றுள்ள எகிப்திய இளைய தலைமுறைக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறது.

ஒரு நியாயமான, ஜனநாயகப்பூர்வமான கட்டமைப் பிற்காக, அரசியலமைப்புச்சட்ட மாற்றங்களுக்காக, அவசர நிலைக்கு முடிவு கட்டுவதற்காக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்காக போராடிய மக்களின் உணர்வுகள் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்றப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

(ஐஎன்என்)

இந்திய அரசு வரவேற்பு

புதுதில்லி, பிப். 12-

வெளியுறவுத்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெள்ளியன்று இரவு வெளி யிட்ட அறிக்கை: எகிப்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதவி விலகுவது என்ற ஜனாதிபதி ஹோஸ்னி முபா ரக்கின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அங்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகார மாற்றத்தை அமை தியான முறையில் ஏற்படுத்த உறுதி செய்வோம் என்று ராணுவக்கவுன்சில் கூறியி ருப்பதையும் வரவேற்கி றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com